jaga flash news

Wednesday 27 January 2021

ஏகாதசி விரதம்...

ஏகாதசி விரதம்...
ஏகாதசிதிதி இது அமாவாசை அல்லது பவுணர்மியிலிருந்து பதினொராம் நாளே ஏகாதசி திதி....
இந்த ஏகாதசிக்கு
இந்நாளில் சூரியன் சந்திரன் பூமி இம்மூன்று சுழற்சியில் ஒருமுக்கோணநிலையை அடையும் அந்நிலையில் சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியில் உள்ள நீர்நிலைகளின் மீது பாதிப்பு உண்டாகிறது....
மனிதராகிய நம் உடலும்70%நீரினால் ஆனாதால் சந்திரனின் ஆகர்ஷண சக்தியால் ஜீரண உறுப்புக்கள் அன்றைய தினம் சரிவர இயங்காமல் ஜீரணம் சரியாக நடைபெறாது அப்போது உணவருந்தினால் ஜீரணமாவது கடினம் எனவேதான் நமது முன்னோர்கள் ஏகாதசி மற்றும் கிரஹண காலத்தில் உபவாசம் என்னும் உண்ணாநோன்பு இருப்பதை வழக்கமாக்கினர்.

வாகனங்கள் இயந்திரங்கள் இவைகள் கூட தொடர்ந்து வேலைசெய்வதால் கெட்டுப்போய்விடும் என்பதால் அதற்கு சிலநாள் ஓய்வு கொடுக்கின்றோம்.
ஆனால் ஓயாது உழைக்கும் நமது உடலுக்கும் ஜீரண உறுப்புகளுக்கும்ஓய்வு அளிப்பது பற்றி நாம் சிந்திப்பதே இல்லை
இந்த உடல் என்னும் உயிர் உள்ள இயந்திரத்திற்கும்ஓய்வளிக்கும் போது உடலில் பல இரசாயன பெளதீக மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் உடலில் உள்ள கழிவுமற்றும் நச்சுப்பொருள்கள் வெளியேற்றப்படுகின்றன.

நீர் கூட அருந்தாத சுத்த உபவாசம் இருக்கும் போது அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு கரையும்.
உபவாசத்தின் போது உடலுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்க திசுக்கள் சிதைந்து அதிலுள்ள புரதம் குளுக்கோஸ் ஆக மாற்றப்படும்.
இது பொதுவாக கல்லீரலில் நடைபெறும் ஒரு வேதிவினை ஆகும்.
திசுக்களில் உள்ள புரதம் குளேக்கோஸாக மாற்றப்படுவதால் ஒரு நாள் உபவாசத்தால் சுமார்66,கிராம் கொழுப்பு அழிக்கப்படுகிறது
இதனால் உடல் எடை குறைந்து வயிறு சுருங்கி தொந்தி குறையும்.

உபவாசத்தின் பின் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் வழக்கத்தைவிட அதிகமாக வேலைசெய்யும் ஆற்றல் உடலுக்கு உண்டாகும்.
அஜீரணக்கோளாறுகள் .பசியின்மை நீங்கி நல்ல குரல்வளம் தூக்கமும் வரும்.
சாப்பிடும் உணவுகள் காய்கறிகள் பழங்கள் நாக்கிற்குஅதிக சுவையாகவும் இருக்கும்.
கண்கள் பிரகாசமடைந்து ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும்.

சிரி ஆனால் இந்த வைகுண்ட முக்கோடி ஏகாதசியன்று கண்விழித்திருப்பதினால் உண்டாகும் நன்மைகள்.....
பொதுவாக உண்ணாதிருந்தால் உடல் இயற்கையாகவேஉஷ்ணம் அடையும். இத்தோடு இரவில் விழித்திருக்கும் போது மிக அதிக அளவில் உடல் வெப்பம் அதிகரிக்கும். இதனால் நாம் தினமும்உட்கொள்ளும் ஆகாரம் நீர் காற்று இவைகளின் மூலம் உடலில் சேரும் நோய்க்கிருமிகள்அழிந்து சரீரம் புடம் போட்டதங்கம் போல் சுத்தமாகிறது.

இதற்கு மறுநாளான துவாதசியில் நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமானவைகள்
அகத்திக்கீரை. நெல்லிக்காய். சுண்டைக்காய்.. எதனால் அகத்திக்கீரை
உபவாசத்தினால் எற்படும் உடலின் வெப்பத்தை சமப்படுத்தும் அகத்தில் எழும் தீயை சமன்செய்வது இக்கீரை
அகம்+தீ+கீரை=அகத்திக்கீரை
இக்கீரையில் வைட்டமின். ஏ.சத்து மற்றும் சுண்ணாம்பு.இரும்புச்சத்துக்களும்.. குடல்புண் இரைப்பை கோளாறு பித்தம் குறைத்தல் கபத்தை நீக்குதல் நரம்புத்தளர்ச்சி இவைகளுக்கும் கண்பார்வை கோளாறு பற்களுக்கு உறுதியையும் தரும்.
ஆயினும் இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் வாயுத்தொல்லை உண்டாகும் அதனால் பதினைந்து நாளுக்கொருமுறை உண்ணலாம்.
ஒருநாள் நாள் ஓய்விற்குப்பின் ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட சுண்டைக்காய் மற்றும் நெல்லிகாய் துணைபுரிகிறது. இதுவும் உடலில் குறிப்பாக கண்களின் வெப்பத்தை நீக்க நெல்லிக்காய் உதவும்.
கண்டகண்ட உணவுகளை யெல்லாம் சாப்பிடுவதால் குடல் கழிவுகள் சேர்ந்து கிருமிகள் உருவாகின்றன. இதனால் உடல் மெலிதலும் ரத்தக்குறைவும் அடிக்கடி வயிற்றுவலியும் சரியான தூக்கமின்மையும் உண்டாகும்...
இவைகளை எல்லாம் சரிசெய்யவும். இக்கிருமிகள் மீண்டும் தோன்றாதிருக்கவே சுண்டைக்காய் பயன்படுகிறது.
எனவேதான் ஏகாதசி உபவாசத்தின் மறுநாளான துவதசியில் அகத்திக்கீரை சுண்டைக்காய் நெல்லிக்காய் இவைகளை சாப்பிடுவதால் குடல் சுத்தமாகி நன்கு செயல்பட்டு உடல் ஆரோக்கியமும் காக்கப்படுகின்றது.
இந்த உபவாசந்தன்னை நம்முன்னோர்களும் இன்றும் ஞானமார்க்கப்பெருமக்களும்
மாதமிருமுறை அனுஷ்டிக்கின்றனர்.........

இது சாமான்யர்களுக்கும் பயன்தர வேண்டும் என்பதலேயே வருடத்தில் ஒருநாளாவது இவ்வொழுக்க முறையைக்கடைபிடிக்க வேண்டி...

ஆண்டாள்நாச்சியாரை போற்றிவளர்த்து பெருமாளுக்களித்த பெருமானார் பெரியாழ்வார் அவர்களை வைகுண்டத்திற்கு வரவேற்கும் பொருட்டு மாஹாவிஷ்ணு மார்கழித்திங்களின் வளர் பிறை ஏகாதசி தினத்தில் பரமபதவாசலான வடக்குவாசல்வழியாகக்காட்சிதந்து ஆழ்வாரை ஆட்கொண்ட நன்நாளாம் இந்த வைகுண்ட ஏகாதசியன்று விழித்திருந்து உபவாசமிருப்பதால் உடலும் நாரணனைத்துதித்திருப்பதால் மனமும் சுத்தமாகி நல முடன் வாழ்வோமாக...


No comments:

Post a Comment