jaga flash news

Wednesday 27 January 2021

தானம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்....

தானம் செய்வதினால் கிடைக்கும் பலன்கள்....

12,மாதங்களில் செய்யவேண்டியதானங்கள்...
சித்திரை.. நீர்மோர். விசிறி. செருப்பு. குடை.தயிர்சாதம். பட்சணங்கள்...

வைகாசி...
பானகம். ஈயப்பாத்திரம். வெல்லம்...

ஆனி...
தேன்

ஆடி...
வெண்ணெய்...

ஆவணி... தயிர்...
புரட்டாசி ...சர்க்கரை...
ஐப்பசி.... பரமான்னம்...
கார்த்திகை... பால். தீபம்...
மார்கழி...பதிர்பேணி. பொங்கல்...
தை... தயிர்ஏடு...
மாசி... நெய்...
பங்குனி... தேங்காய்...

கிழமைகளில் செய்யவேண்டியவை...

ஞாயிறு... பாயாஸான்னம். சர்க்கரைப்பொங்கல்...
திங்கள்... பால்...
செவ்வாய்... வாழைப்பழம்...
புதன்... வெண்ணெய்...
வியாழன்... சர்க்கரை....
வெள்ளி... வெள்ளைசாதம்...
சனி...பசும்நெய்...

இவைகளை ஆண்டுமுழுவதும் செய்துவந்தால் சுவர்க்கபலன் கிட்டும்....

பிறதானபலன்கள்...

வஸ்திரம்.. ஆயுள் அபிவிருத்தி...
பூமி.. பிரம்ஹ லோகம்...
தேன்.. புத்ரபாக்யம்...
கோ தானம்.. பித்ரு. ரிஷி. தேவர்கள் இம்மூவர்கள் கடன்களும் தீர்க்கும்...

நெல்லிக்காய்.. ஞானம்... கிடைக்கும்...
கோயிலில் தீபம்.. ராஜபதவி...
தீபம்..கண்பார்வை விருத்தி...
எருமை..அகாலமரணம் தவிர்க்கும்...

விதை.. தீர்க்காயுளையும் தீர்க்காயுள்உள்ள சந்ததியும் தரும்...

அரிசி.. பாபம்போக்கும்...
தாம்பூலம்.கனிவர்க்கம்.. ஸ்வர்க்கம் தரும்...

கம்பளி.. வாயுரோகம் நீக்கும்...
பருத்தி.. வெண்குஷ்டம் நீக்கும்..
பூணூல்.. பிராமண ஜென்மம்...
நெய்.. ரோகநாசனம்...

புஷ்பம். துளசி. ஸமித்து. காய்கறி. தான்யம் தானம்..
ஸ்வர்க்கம் தரும்...

சர்க்கரை.. ஆயுள்விருத்தி...
பால்.. துக்கம் அகலும்...
வடை.. விக்நத்தைப்போக்கும்...
வாழைப்பழம்.. புத்தி சூட்சுமம்...
வெல்லம்.. சோகம் அகலும்...
தேங்காய்.. கவலை தாபம் நீங்கும்...

பொரி.. இவ்வுலசுகம்...
எள்.. யமபயம் நீங்கும்...
தயிர்.. இந்திரீயவிருத்தி...
அவல்.. தேவப்ரஸாம் உண்டாகும்...

கடலை.. ஸந்ததி விருத்தி...
சத்துமாவு.. பகவத்பக்தி...
பாயஸம்.. பித்ருபிரீதி. சந்ததிவிருத்தி...

ஸ்வர்ணம்.. பாபம். ஏழ்மைஅகலும்...

குடை. பாதுகை.. இஹத்திலும் எமலோகத்திலும் இன்பம் தரும்...

கன்யாதானம்..27,ஜென்ம பாபம் நீக்கும்...

விசிறி.பானகம். நீர்மோர். தீர்த்தம்... மனசாந்தி யும் வாயு வருணலோக ப்ராப்தியும் தரும்..

படுக்கை.. சுகம் தரும்...

ஜபமாளை. ஆஸனம். விபூதி. கோபிசந்தனம்... சுகசுரம். நல்ல ஜன்மாவையும் தரும்...

அன்னதானம்.. ஸ்வர்க்கம் கிடைக்கும்...

அன்பர்களே முடிந்தவரை இவற்றில் நம்மாள் இயன்றதானங்களைச்செய்து இனிது வாழலாம்....

இரவில் தூங்குமுன் நினைக்க வேண்டிய தெய்வங்கள்...

ராமஸ்கந்தம் ஹநூமந்தம் வைநதேயம் வ்ருகோதரம் ஸயநே ய;ஸ்மரேந்நித்யம்துஸ்வப்நம் தஸ்ய நயதி....

ஶ்ரீராமனை தோளில் தரித்த ஶ்ரீஹனுமானையும் கருடனையும் பீமஸேனனையும் நினைத்துப்படுத்துரங்கினால்
நிம்மதியாக உறங்கலாம்....

அன்புடன்; பரமானந்தன்...ௐ

No comments:

Post a Comment