jaga flash news

Wednesday 27 January 2021

படுக்கையறை



வாஸ்து.............

ஏழை பணக்காரன் யாராயினும் அவர்கள் நிம்மதியாய் இருப்பது உறக்கத்தில் மட்டுமே அந்த உறக்கமும் நன்றாக வர ஒரு நல்ல படுக்கையறை அல்லது இடம் தேவை வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு செலவிடப்படும் படுக்கையறை எப்படி இருந்தால் நல்லது என்பது பற்றி அறியலாம்..........
படுக்கையறையின் அமைப்பிற்கும் குடும்ப வளர்ச்சி மற்றும் நிம்மதிக்கும்தொடர்புள்ளது.....
சரியான இடத்தில் சரியான விதத்தில் அமைக்கப்படும் படுக்கயறைகளால் நல்ல குழந்தைச்செல்வங்களை அடையலாம்......
தெற்கு தென்மேற்கு பகுதியில் அமைக்கப்படும் படுக்கையறைகள்
இந்த வகையில் சிறந்தவை
கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அறையை உபயோகிக்கும் தம்பதியருக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் ஜனிக்கின்றனர்......
(ஆய்ந்து பாருங்கள் அன்பர்களே)

தென்மேற்கு படுக்கையறை ஏன்சிறந்ததெனில் வடகிழக்கில் உருவாகும் சக்திகள் வீட்டின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் பிரதிபலித்து அதற்கு எதிராக உள்ள தென் மேற்குப் பகுதியை அடைவதால் நல்ல சக்தி வாய்ந்த பகுதியாக மாற்றுவதாலும்
அப்பகுதியின் மேலே நீர்நிலைத்தொட்டி அமைப்பதால் கீழே ஏற்படும் குளிர்ந்த நிலையாலும் இரவில் நன்கு இளைப்பாறவும் உறங்கவும் சிறந்த இடமாகும்.......
இப்படி தம்பதிகளுக்கு உகந்த படுக்கையறை திருமணமாகவர்களுக்கோ குழந்தைகளுக்கோ உகந்ததல்ல......

தென்கிழக்கு ஆக்னி மூலையாவதால் இங்கு உஷ்ணமும் தென்மேற்கிலிருந்து வரும் சக்தியும் இணையும்போது பெண்களுக்கு உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களும் வரலாம்.........
மேலும் இவ்வறையை உபயோகிக்கும் தம்பதியருக்குள் அடிக்கடி காரணமற்ற சண்டைசச்ரவுகள் ஏற்படும்......
அத்துடன் இவர்களுக்கு ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றவே
தவிர இரு குழந்தைகளும் சேர்ந்து பிறக்கும் பாக்யம் குறைவே......

வடமேற்கு படுக்கையறை தம்பதியருக்கு உகந்ததல்ல பெரும்பாலும் இவ்வகை அறை தம்பதியருக்குள் மன சஞ்சலத்தையே
அல்லது கணவர் பலநாட்கள் வெளியூரில் தங்கும் நிலை யையோ
உருவாக்கும்....
இவ்வறைகளில் விருந்தினர்கள் தங்குவதற்கும் கல்யாணம் ஆகாத பெண்கள் தங்குவதற்கும் உகந்தது.
இவ்வறைகளில் தங்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்......
தென்மேற்கில் ஒருபடுக்கையறை இருந்து அதை குடும்ப தலைவன்கலைவி உபயோகப்படுத்துவார்களேயானால்
அடுத்த தலைமுறை தம்பதியினர் வடமேற்கு படுக்கையறையை உபயோகிப்பது தவறில்லை...........

வடகிழக்கு படுக்கையறைக்கானபகுதியல்ல
ஆயினும் வயதான தம்பதியினரும் குழந்தைகளும் தங்குவதற்கு உகந்தது......
இவ்வறைகளில் தங்கும் தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகள் ஏதாவதொரு குறைபாடுடன் பிறக்க நேரிடுகிறது....

உறங்கும் போது தெற்கில் தலைவைத்து வடக்கில் கால் நீட்டி படுத்தல் மிகவும் நல்லது.....
இதனால் நல்ல தூக்கமும் காலையில் விழிக்கும் போது வடதிசையான குபேர திசையை பார்ப்பதால் வாழ்வில் வளங்கள் பெருகும்.......

கிழக்கில் தலைவைத்து உறங்குவதால்ஞானம்வளரும்
படிக்கும் குழந்தைகள் இத்திசையில் தலைவைத்துப்படுப்பதால் ஞாபகமறதி குறைபாடு நீங்கும்.....

மேற்கு திசையில் தலைவைத்து உறங்குதலும் நல்லதே இப்படி உறங்கி காலையில் சூரிய திசையாகிய கிழக்கைப்பார்பதால்
நல்ல தெளிவான மன நிலையைத்தரும்......
ஆயினும் இத்திசையில் உறங்கும் சிலருக்கு அடிக்கடி கனவுத்தொல்லைகள் ஏற்படும்.........


No comments:

Post a Comment