jaga flash news

Wednesday 27 January 2021

வாஸ்து...............

வாஸ்து...............
எண்ணம்போல் வாழ்க்கை வண்ணமயமாய்அமைய எப்படி செவ்வாயும் நான்காம் அதிபதியும் காரணமோ அதேபோல வாஸ்து என்ற விதியிலும் மனையும் அதன் அளவுகளும் காரணமாகின்றன அந்த மனையில் வசிப்பவர்களின் நிம்மதிக்கும் சரியற்ற அளவுகளும்
வகையில்லாத மனைகளும் காரணமாகின்றன.

இன்றைய காலகட்டத்தில் இவையிரண்டும் அமைவது கடினமே
ஆனாலும் வீடு கட்டும் ஆவலில் உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கவனிக்க தவறுவதும் இந்த இரண்டு விசயங்களே........

பிளாட்டில் மனை வாங்குபவர்களைத்தவிர தனிமனை
வாங்க நினைக்கும் ஒவ்வொரு வரும்
கவனிக்க வேண்டிய விஷயங்கள்....

மனையின் மிக அருகில் கோவிலும்
மனையிலிருந்து பார்க்கும் தூரத்தில் இடுகாடு அல்லது சுடுகாடு (மின்மயானமானாலும்)இல்லாதிருத்தலும்....
புற்றுகளும் மூங்கில் தோப்புகளும் இல்லாதிருத்தலும்......
மனையிடத்தின் அருகில் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் சாக்கடை கால்வாய்கள் இல்லாதிருத்தலும்
மனையிடத்தில் குப்பை கூளங்கள் மற்றும் கழிவுநீர் குட்டைகள் இல்லாதிருத்தலும்....
கருவேல மரங்களை அழித்த இடமாக இல்லாதிருத்தலும்.....
மனையிடத்தின் மண்ணின் வாசம் துர்நாற்றமாக இல்லாதிருத்தலும் 
நாம் தேர்ந்தெடுக்க நினைக்கும் மனையில் நாம் நின்று பார்க்கும் போது நமது மனம் சலனப்படாமல் படபடக்காமல் சாந்தமாய் இருத்தலும்........போன்ற விசயங்களை கவனித்து அறிந்த பின்னரே ஒரு மனையை தேர்வு செய்ய வேண்டும்.......

No comments:

Post a Comment