jaga flash news

Thursday 28 January 2021

ஞானம் என்பது...............

ஞானம் என்பது..................

சூரியனைப் போல்
தன்னொளியாய் பேதமற்றும்
சந்திரனைப்போல்
பிரதிபலிப்பாய் குளிர்வுற்றும்............
செவ்வாயைப் போல்
உள் சிவந்து வலிவுற்றும்................
புதனைப் போல்
ஆய்ந்து தெளிவுற்றும்...........
குருவைப் போல்
மெளனமாய் பொலிவுற்றும்........
சுக்கிரனைப் போல்
அக உலகில் அழகுற்றும்............
சனியைப் போல்
சாதனையில் சிறப்புற்றும்..........
ராகுவைப் போல்
நீண்ட காலம் நிலைபெற்றும்
கேதுவைப் போல
தன்னை த் தான் அறிய முற்ப்பட்டதும்
ஆகும்........,

மொத்தத்தில் புறத்தில் தேடினாலும் ஓடினாலும் ஆடினாலும் அடங்கினாலும் சாதித்தாலும் 
சாதனை செய்தாலும் தெளிவதல்ல

ஞானம்.........
தனனுள் தானடங்கி தனக்கென்றில்லாது தவ நிலையில்
தானிருத்தலே தவிர
யாராலும் தரப்படுவதுமில்லை பெறப்படுவதுமில்லை............

உணர்வோம் தெளிவோம்..........
அன்புடன்; பரமானந்தன்...ௐ

No comments:

Post a Comment