jaga flash news

Monday 25 January 2021

இளநரை, பித்தநரை நிரந்தரமா கருப்பா மாறணுமா? இதை பயன்படுத்துங்க.


Tamil News
ஆப்
லைஃப்ஸ்டைல்
ஆரோக்கியம்
ரெசிபி
உறவுகள்
வீட்டு மருத்துவம்
மகப்பேறு நலன்
ஃபிட்னெஸ்
அழகுக் குறிப்பு
வீடு பராமரிப்பு
ஹெல்த் கேலரி
பியூட்டி & ஃபேஷன்

இளநரை, பித்தநரை நிரந்தரமா கருப்பா மாறணுமா? இதை பயன்படுத்துங்க..
S Dhanalakshmi | Samayam Tamil | Updated: 25 Jan 2020, 02:13:05 PM
    


இளநரை பித்தநரை என்பது இன்று ஆண் பெண் இருவருக்குமே அதிகமாக இருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட்டால் அதன் பிறகு வரும் முடி வெள்ளையாக இல்லாமல் கருமையாக வளரும். இருக்கும் நரைமுடிகளும் கருமைக்கு மாறும். பலரும் முடி கருப்பாக தெரிய ஹேர் டை பயன்படுத்துவதுண்டு. ஆனால் இளநரைக்கும் பித்தநரைக்கும் ஹேர் டை பயன்படுத்தினால் பித்தநரையையும் இளநரை யையும் இயற்கையாக கருமையாக்கவே முடியாது. ஆனால் மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் இதை எளிதில் போக்கலாம்.

இளநரை பித்தநரை

இள வயதில் பித்தநரை என்பது அதிகரித்துவருகிறது. நரையை போக்காவிட்டால் முடியானது வெள் ளையாகிவிடும் என்று பயந்து இளவயதிலேயே ஹேர் டை பயன்படுத்திவருகிறார்கள். ஆனால் இயற்கையாகவே கூந்தலுக்கு நன்மை செய்யும் மூலிகைகளான சில பொருள்களை கொண்டு வீட்டிலேயே ஹேர் டை தயாரித்து போட்டு வந்தால் 5 முறை பயன்பாட்டுக்கு பிறகு அவை முடியை கருப்பாக்கி விடும்.

அனுபவபூர்வமாக இதை நீங்களும் உணரலாம். அதற்கு தேவையான பொருள்களை பார்ப்பதற்கு முன் இந்த ஹேர் டை பயன்பாட்டில் முக்கியமாக தேவைப்படுவது இரும்பு வாணல். அதை வாங்கி வைத்துகொள்ளுங்கள். இரும்பு வாணலியில் மூலிகை பொடிகளை வைக்கும் போது நமக்கு தேவை யான நிறம் சற்று கூடுதலாகவே கிடைக்கும்.


​செம்பருத்தி பொடி

செம்பருத்தி செடி இல்லாத வீடுகளே இல்லாமல் இருந்த காலம் ஒன்று இருந்தது. செம்பருத்தி இலை பூ அனைத்துமே அழகு தருவதிலும் ஆரோக்கியம் தருவதிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது செம்பருத்தி பூவை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துகொள்ளலாம். செம்பருத்தி பூ இல்லாதவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தி கொள்ள லாம். இளஞ்சிவப்பு நிறத்தில் இந்த பொடி கிடைக்கும். இவை முடிக்கு சிவப்பான நிறத்தை கொடுக்க கூடியது. ஷாம்புக்கு நிகரான குணத்தை இது கொண்டிருக்கும்.

செம்பருத்தி பூ பொடி- உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துகொள்ளுங்கள் ( அதிக வெள்ளை முடி இல்லாதவர்களுக்கு 2 டீஸ்பூன் அளவு போதும்)


கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலையி குணம் சொல்லி தெரியவேண்டியதில்லை. முடிக்கு கருமை நிறம் தரக்கூடிய பொருள். கறிவேப்பிலையை வடையாக தட்டி தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தடவி வருவோம். இது முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும். முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். முடி அடர்த்தியாக வளர உதவும். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து கொள்ளவும். மெல்லிய துணியில் சலித்து வைத்தும் கொள்ளலாம்.

கறிவெப்பிலை பொடி- உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்துகொள்ளுங்கள் ( அதிக வெள்ளை முடி இல்லாதவர்களுக்கு 2 டீஸ்பூன் அளவு போதும்)


​மருதாணி இலை பொடி

இயற்கை ஹேர் டை என்றாலே ஹென்னா என்றழைக்கப்படும் மருதாணி இலை தான். இவை இல்லாமல் கூந்தலுக்கு நிறம் கொடுக்க முடியாது. ஆனால் வேறு கெமிக்கல் இல்லாமல் இவற்றை மட்டும் பயன்படுத்துவது குறைவு என்பதால் நாமே இயற்கையாக வேறு மூலிகைகளுடன் கலந்து பயன்படுத்துகிறோம். இவை நாட்டு மருந்துகடைகளில் எளிதாக கிடைக்கிறது. மருதாணி முடிக்கு ஆரஞ்சு அல்லது பிர வுன் நிறத்தை இயற்கையாக கொடுக்கும். கூந்தல் வளர உதவும் மூலிகை எண்ணெய் அனைத்தி லும் மருதாணி இலையும் சேர்க்கப்படும்.

இந்த மருதாணி பொடியும் இளநரை பித்தநரை போன்ற வற்றை போக்கி நரையின் தோற்றத்தை மறைத்து காட்டும்.மருதாணி இலை பொடி மற்ற பொடிகளின் அளவிலெயே சேர்த்து கலக்க வேண்டும். உங்கள் தலைமுடிக்கேற்ப அனைத்து பொடிகளும் தலா 2 அல்லது 1 டீஸ்பூன அளவாகவே இருக்கும்.


​அவுரி பொடி

அவுரி பொடி குறித்து நாம் முன்பே பார்த்திருக்கிறோம். வெள்ளை முடி இருப்பவர்கள் அவுரி பொடியை வழக்கமாக பயன்படுத்தலாம். இண்டிகோ பவுடர் என்று அழைக்கப்படும் அவுரி பொடி முடிக்கு நல்ல கருமையை தரும். அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இங்கு கொடுத்திருக்கும் பொடிகளில் கறிவேப்பிலை பொடி தவிர மற்ற அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இவை தலைமுடிக்கு நீல நிறத்தை கொடுக்கும் என்பதால் இதை பயன்படுத்திய உடனேயே முடியின் வெள்ளை நிறம் மறைய தொடங்கும். இதை இயற்கை சாயம் என்றும் கூட சொல்லலாம். மற்ற பொடிகளோடு இதையும் சமமாக கலந்து கொள்ளுங்கள்.


​கடுக்காய் பொடி

சீயக்காயில் அந்தகாலத்தில் இந்த கடுக்காய் சேர்க்காமல் அரைக்க மாட்டார்கள். இவை முடிக்கு நிறம், அடர்த்தி, வலிமை போன்றவற்றை கொடுக்கும். முடியில் அழுக்கு சேராமல் பேன் பொடுகு வராமல் பாதுகாக்கவும் உதவும். இந்த கடுக்காய் பொடி எல்லா நாட்டுமருந்துகடைகளிலும் கிடைக்கும் இதே போன்று நெல்லி பவுடரையும் வாங்கி கொள்ளுங்கள். நெல்லி இளநரைக்கு இயற்கையாகவே தீர்வு தரக்கூடியது. நெல்லியை கொட்டை நீக்கி துண்டுகளாக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டால் உள்ளுக்கும் எடுக்கலாம். இந்த மாதிரியான அழகு குறிப்பிலும் பயன்படுத்தலாம்.

இந்த இரண்டையும் பொடிகள் பயன்படுத்துவதற்கேற்ப அதே அளவில் எடுத்துகொள்ளுங்கள்.


​தயாரிப்போம்

கொடுத்திருக்கும் அனைத்து பொருள்களுமே கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரக்கூடியவை. இதை தலைக்கு பயன்படுத்துவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பு அனைத்துபொடிகளையும் இரும்பு வாணலியில் கொட்டி கலந்து தரமான டீ டிகாஷன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு வெள்ளை முடி இருக்கும் இடங்களில் மட்டும் பேக் போடுங்கள். மற்ற இடங்களில் தடவ வேண்டாம். கூந்தல் முழுக்க பேக் போட்டால் முடியின் மிருதுதன்மை குறைந்துவிடும். நாம் இளநரை பித்தநரை போக்கதான் இதை பயன்படுத்துகிறோம் என்பதால் நரை இருக்கும் இடத்தில் மட்டும் போட வேண்டும்.

பேக் போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடலாம். சைனஸ் , உடல் குளுமை பிரச்சனை இருப்பவர் கள் 30 நிமிடங்கள் வரை தலையில் ஊறவிடுவது நல்லது. 1 மணி நேரம் கழித்து தலையை ஷாம்பு போடாமல் அலசி எடுக்கலாம்.

இப்படி தொடர்ந்து விட்டு விட்டு தலையில் தடவி வந்தால் நாளடைவில் இளநரை, பித்தநரை நீங் கும்.



No comments:

Post a Comment