jaga flash news

Wednesday 27 January 2021

ஆகாது என நினைக்கும் காரியத்தையும் அமைத்துக்கொடுக்கும் அஷ்டமி விரதம்....

ஆகாது என நினைக்கும் காரியத்தையும் அமைத்துக்கொடுக்கும் அஷ்டமி விரதம்....
இதில் வருடத்தில்,12,தேய்பிறை அஷ்டமி சிவனுக்குறியவையாம்....
அவை முறையே...

மார்கழி... சங்கராஷ்டமி...
தை... தேவதேவாஷ்டமி...
மாசி... மகேச்வராஷ்டமி...
பங்குனி... திரயம்பகாஷ்டமி...
சித்திரை... ஸநாதனாஷ்டமி...
வைகாசி... சதாசிவாஷ்டமி...
ஆனி... பசுவதாஷ்டமி...
ஆடி... நீலகண்டாஷ்டமி...
ஆவணி... ஸ்தானு அஷ்டமி...
புரட்டாசி... சம்புகாஷ்டமி...
ஐப்பசி... ஈச்வராஷ்டமி...
இவ்விரத்தை அனுஷ்டிப்பதால்
கிடைக்கும் பலன்களாவன....

மார்கழி அஷ்டமி யில் கோமூத்ரம் அருந்தி உபவாசமிருந்து மறுநாள் விரதபூர்த்தி செய்பவர்கள் மோட்சபதவி பெறுவர்....

தை அஷ்டமியில் பசுநெய் அருந்தி உபவாசமிருக்க பிரம்மஹத்திதோஷம் முதலான பாபங்களிலிருந்து நீங்குவர்....

மாசி அஷ்டமியில் பசும்பால் பாயாசம் செய்து தட்சிணாமூர்த்தி க்கு நிவேதனம் செய்து உபவாசமிருக்க சொர்க்கம் செல்வர்....

பங்குனி அஷ்டமி யில் எள்ளுப்பொடிசாப்பிட்டு உபவாசமிருக்க நற்கதி அடைவர்....

சித்திரை அஷ்டமியில் பால்மட்டுமறுந்தி உபவாசமிருக்க தர்மம் செய்த புண்ணியம் பெறுவர்....

வைகாசி அஷ்டமியில் சுத்தநீர்மட்டும் அருந்தி உபவாசமிருக்க தான் செய்த பாவங்களிலிருந்து விடுபடுவர்..

மற்றும் ஆனியிஅஷ்டமியில் கோமூத்ரம்
ஆடிஅஷ்டமியில் பழங்கள்
ஆவணி அஷ்டமியில் உப்புநீர்
புரட்டாசி அஷ்டமியில் தயிர்
ஐப்பசி அஷ்டமியில் வெந்நீர்
கார்த்திகை அஷ்டமியில் தேன்
இவைமட்டும் அருந்தி உபவாசம் இருந்து வர சகலபாவங்களும் நிவர்த்தியாகும் நிலை பெறுவார்கள்........


No comments:

Post a Comment