jaga flash news

Monday 2 November 2015

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த
பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த
பாவங்களினாலும் ஏற்படுகிறது.
ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது
மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின்
மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில்
தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க
நேரிடுகிறது.
ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது
கணவனை கவனிக்காமல் வேறு ஆணின்
மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில்
தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க
நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது
பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால்
பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில்
பித்ரு தோஷமாக மாறுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர /
சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால்
இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால்
பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவர் தன் முற்பிறவியில் கருச்சிதைவு
செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு
இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல்
போகும் நிலையும் அமைகிறது.
.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த
குடும்பத்தையும், குழந்தைகளையும்
பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள்,
கணவன் மனைவி பிரச்னைகளை
உருவாக்கும்.குறைந்தது மூன்று
தலைமுறைகள் பாதிப்படையும்.மகாளய
பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில்
ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி
மாதத்தில் வரும் அமாவசையிலிருந்த
ு முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும்
பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில்
பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது
சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அந்த 15
நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்
அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள்
அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும்
செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும்
அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.
ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை
நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும்
தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து
தோஷங்களையும் நீக்கும்.மிகக்கடுமையான
பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம்
சென்று திலா ஹோமம் செய்வது
அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த
பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.திலா
ஹோமம் எனப்படுவது நெல்லையும்
எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம்
ஆகும்.திலம் என்றால் எள் என்று
அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று
இரவு இராமேஸ்வரத்தில்தங்க
வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச்
செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால்
தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல்
நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு
வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம்
நிகழ்ந்தால்தான்மகாவிஷ்ணு நம்மை
ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.வைஷ்ணவ
சம்பிரதாயத்தைச்சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம்
அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில்
திலாஹோமம் செய்து பித்ருக்களின்
ஆசிர்வாதம் பெறலாம்.கேரளாவில்
திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம
க்க்க்ஷேத்த்ரம்என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும்
பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த
பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.க
ேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம
நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை
பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை
வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.
வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது
காசி, கயா,இராமேஸ்வரம்சென்று பிதுர்
ஹோமம் செய்ய வேண்டும்.
மஹாளய தர்ப்பணம்.தமிழ்வருடத்தில்ஆண்டுக்க
ு ஒருமுறை வரும்.புரட்டாசிமாதத்தில் வரும்
.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து
தனது சந்ததியினருக்குஆசி வழங்குவார்கள்.அ
ந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம்
செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது
பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம்
முழுவதும் செய்ய முடியாதவர்கள்
மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால்
கூட போதும் பித்ருக்களின் வலிமையும் -
பித்ரு தோஷமும்:-
பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது
முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில்
மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது
முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள்
ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது
முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி
பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து
போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது
மாதுர் வழி பித்ருக்கள் எனவும்
அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன
நமது முன்னோர்கள் அனைவரும் நமது
பித்ருக்களே ஆவர்.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள்
அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே.
நம்முடன் வாழ்ந்த நம்முடைய
முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு
அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள்
இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம்.
அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது
பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய
பலனையையும் சேர்த்தே அனுபவித்து
வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த
நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே
விரும்புபவர்கள்.
நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது
அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க
வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த
பின்பும் அவர்களின் பசியைப் போக்க
வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.
இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர்
நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக
எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம்
செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும்.
இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய
வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது
மறைந்து விட்டது.
ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து
போய் இருக்கலாம். பயம் கொள்ள
தேவையில்லை. நமது முன்னோர்களின்
ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது
நலனில் அக்கறை கொண்டவையாகவே
இருக்கும். இத்தைகய நம்முடை
முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும்
வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது.
நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை
நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும்
வல்லமை பெற்றவர்கள். நமது
வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித்
தருபவர்கள் நமது பித்ருக்களே.
எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது
பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின்
பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு
பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது
பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு
பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு
அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள
நீர் நிலைகளில் வந்து தங்குவர்.
அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு
வழிபாடு செய்து அவர்களின் பசியை
போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள்
வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.
வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர்
கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள்
கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த
சாபம் தெய்வத்தின் அருளையே தடை
செய்யும் வலிமை கொண்டது. கடவுளின்
வரங்களையே தடை செய்யும் ஆற்றல்
கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம்
அவர்களின் கோபத்திற்கோ அல்லது
சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.
மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி
அவர்களை அமைதி படுத்த வேண்டும்.
பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள
தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது.
இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின்
வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம்,
மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில்
ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை
இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம்
நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும்
பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய
மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை.
இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம்
தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப்
போக்கிட வேண்டும்.
பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர்
தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே
செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும்
வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு
யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக
பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில்
துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள்
முதலில் அதனை போக்கிட வேண்டும்.
அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின்
வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும்
வரும்.
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வேதம்
தேவ காரியமும் பித்ரு காரியமும்
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு
காரியங்களுக்கு சிரத்தை வேண்டும்.
பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு
செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப்
பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து
கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது
தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய
வேண்டும். பித்ரு காரியங்களைச்
செய்யும்போது சிகையை முடியாமல்,
யக்ஞோபவீதம் வலது தோளில்
இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய
வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம்
இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்க
ு இவை இரண்டும் இல்லை. பித்ரு
காரியத்தையும், பல தேவதைகளின்
உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே
பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான
லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள்
அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற
மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம்
இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில்
பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது
தோளில் பூணூலோடும் காரியம் பண்ண
வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே
காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு
தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம்
என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.
தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம்.
'தென்புலத்தார்' என்று திருவள்ளுவர்கூடச்
சொல்கிறாரல்லவா? தக்ஷிணம் என்றால்
தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக
மார்க்கம்..... ' உத்தராயணம்' என்பதில் மூன்று
சுழி 'ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் '
என்னும்போது இரண்டு சுழி 'ன' போட்டும்
சொல்ல வேண்டும். 'அயனம்' என்றால்
மார்க்கம், வழி என்றும் அர்த்தம். 'உத்தர'
என்பதில் வருகிற 'ர' காரத்தினால் 'ன' என்பது '
ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி.
தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில்
எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது...
உத்தராயண தேவ மார்க்கத்தையும்,
தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப்
பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம்
கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு
காரியம் பண்ணும்போது, எந்தத் தோள்
தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது
தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில்
யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல்
இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள
வேண்டும் என்பது.
"பிரதக்ஷணம் பண்ணுவது" என்கிறோமே,
இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை
நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம்.
முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில்
ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும்.
அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம்
ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப்
பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக
இருந்துகொண்டு தேவகாரியம்
பண்ணும்போது, தேவர்களின் திசையான
வடக்கு திசையைப் பார்க்க இருப்பது
நம்முடைய இடது தோள்தான். அதனால்தான்,
தேவ காரியங்களில் பூணூல் இடது
தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
தேவகாரியம், பித்ரு காரியம் இரண்டும்
செய்யாத மற்ற வேளைகளில், அதாவது
உத்யோக வேளை முதலானதுகளின் போது,
பூணூலை ஒரு தோளின் மேலேயும்
இல்லாமல், கழுத்திலிருந்தே மாலைமாதிரித்
தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். இதை
யாரும் அனுஸரிக்கக் காணோம். பித்ரு காரியம்
தவிர மற்ற எல்லா ஸமயங்களிலும் இடது
தோள் மேலேயே யக்ஞோபவீதத்தைப்
போட்டுக் கொள்கிறார்கள்.
தேவ காரியத்தின் போது இடது தோளுக்கு
மேல் பூணூல் இருப்பதற்கு 'யக்ஞோபவீதம்'
என்றும், பித்ரு காரியத்தின் போது வலது
தோளுக்கு மேல் இருப்பதற்கு 'ப்ராசீனாவீதம்'
என்றும், மநுஷ்யர்களுக்கான லோக காரியங்கள்
செய்யும் மற்ற எல்லா ஸமயத்திலும் மாலை
மாதிரித் தொங்குவதற்கு 'நிவீதம்' என்றும்
பெயர். பிருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு
ஞானி இந்த எல்லாத் தினுஸுக்
கர்மாக்களையும் விட்டு விட்டுப் பிச்சைக்கார
ஸந்நியாஸியாகப் புறப்படுவதைப் பற்றி
வருகிறது. ( III.5.1). அதற்கு ஆசார்யாள்
பாஷ்யம் பண்ணும் போது, தேவ-பித்ரு-மநுஷ
்ய கர்மாக்களை பண்ணுவதற்காகவே
க்ருஹஸ்தனுக்குப் பூணூல்
இருக்கிறதென்றும், எனவே, இந்த கர்மாக்களை
விட்டுவிட்ட ஸந்நியாஸிக்குப் பூணூல்
கிடையாதென்றும் ச்ருதி வாக்யங்களைக்
காட்டி ஸ்தாபிக்கிறார். அந்த அலசலில்,
"நிவீதம் மநுஷ்யாணாம்" - "மநுஷ்யர்களுக்க
ான காரியத்தின்போது [பூணூலை]
மாலையாக[ப் போட்டுக்கொள்ள வேண்டும்] "
என்று ச்ருதி ப்ரமாணமே இருப்பதாகக்
காட்டியிருக்கிறார். ஆனாலும் நடைமுறையில்
பஹூகாலமாகவே அந்த வழக்கம் எடுபட்டுப்
போயிருக்கிறது

No comments:

Post a Comment