jaga flash news

Saturday 28 November 2015

கோவில்களுக்கு போனால் ஏன் மனம் அமைதி பெறுகிறது

கோவில்களுக்கு போனால் ஏன் மனம் அமைதி பெறுகிறது
நான் சொல்கிற ஆன்மிகம் கண் மூடி மந்திரம் சொல்வதோ
அல்லது மற்றவர் சொல்வதை டப்பா அடிப்பதோ அல்ல
அறிவியல் பூர்வமான ஆன்மீகத்தை சொல்ல விரும்புகிறேன்
ஏன் கோவில் செல்வதால் மனம் அமைதி அடைகிறது என்பது தெரியுமா
கடவுள் சக்தி வடிவம் ஆனவர்
அவர் மிக பெரிய சக்திகளில் ஐக்கியம் ஆகி உள்ளார்
நம் பழைய முன்னோர்கள் அதில் மிக பெரிய தில்லாலங்கடி
இன்று ஸ்கேன் பண்ணி பார்ப்பதை மன வலிமையால்
பார்த்தவர்கள்
கோவில் என்பது ஏதோ ஒரு கல்லில் செய்யப்பட்டது அல்ல
இதன் ஓரு ரகசிய செய்தி
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
உடனே நரசிம்மர் கதை தெரியும் என்று சொல்லி விடாதீர்கள்
எங்கு சக்திகள் இறங்கி உள்ளதோ அந்த கற்களில் இருந்து கட்டப்பட்டவை சில கோவில்கள்
இதை எவ்வாறு கண்டு பிடிப்பது
பாலகுமாரன் சொல்வார்
நிறைய அதிர்வலைகள் இருக்கும் என்று
சாதரணமாய் உங்கள் மனதில் பெரும் குழப்பம் இருக்கும் ஆனால் சில கோவில் போய் வந்தால் முற்றிலும் மாறும்
நான் அதிகமாய் நாடுவது மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில்
அங்கு உள்ள கற்களில் மிக பெரிய தெய்வ சக்தி அடங்கி உள்ளது
அங்கு ஒரு ஒரு மணி நேரம் போய் உட்கார்ந்து விட்டு வந்தால் சில விசயங்கள் எனக்கு அமைதி பெற்று விடும்
எல்லா ஊர்களிலும் இந்த மாதிரி கோவில் உள்ளது
திருச்சி மலை கோட்டை சென்று வந்த போது இது நடந்தது
மதுரை மீனாக்ஷி கோவிலில் அம்மன் பிரகாரம் சென்று வந்தால் இந்த அமைதி கிடைக்கும்
சாமியை தரிசனம் செய்ய வேண்டியது இல்லை அங்கு உள்ள தூண்களின் அருகே இருந்தால் போதும் அதில் உள்ள ஒரு வகையான காந்த சக்தி உங்கள் மனதை
ஒரு முகப்படுத்தும்
குறிப்பாய் நமது அறுபத்து மூன்று நாயன் மார்களும் இதனை அறிந்தவர்கள்
நமது கோவில்களில் கற்கள் அமையப் பெற காரணம் இதுதான்
எல்லா கற்களிலும் தூண்களிலும் இறை சக்தி உள்ளது
இது பல விசயங்களை சரி செய்யும்
ஏழரை சனி இருக்கும் மனிதர்களுக்கு
மன அழுத்தம் அதிகரிக்கும் காரணம் வாழ்க்கையில்
ஒரு சுற்றிற்கு இருபத்தைந்து வருடம்
ஏழரை ஆண்டுகள் உங்களை வலிமைப்படுத்த
மன அழுத்தம் சனி பகவானால் கொடுக்கப்படும்
இதனை தாண்டி செல்ல இறை அருள் முக்கியம்
அதனை நமது கோவில்கள் சரிபடுத்தும்
எனவே கோவில் என்பது மிக பெரிய சக்தி பீடம்
அதனை முறைப்படி சென்று வணங்கி வாருங்கள்
சில வீடுகளில் கணவன் மனைவி பொருத்தம் இல்லாமல் இருப்பார்கள்
அவர்கள் மாதம் ஒரு முறை இருவரும் சேர்ந்து
அதிக அதிர்வு உள்ள கோவில்கள் சென்று வந்தால் மனம் ஒருமைபட்டு ஒன்று சேர்வார்கள்
மிக பழைய கோவில்கள் அனைத்தும் மிக சரியான கற்களில் கட்டப்பட்டவை
எனவே கோவில் சென்று அந்த தூண்களில் அருகே உட்கார்ந்து பாருங்கள்
இருநூறு ரூபாய் கொடுத்து அருகே சென்று இறைவனை பார்பதை விட
இது அதிக அமைதி கொடுக்கும்
இதே போல் பழமையான மசூதி பழமையான தேவர் ஆலயம் அதிலும் உண்டு
அன்னை வேளாங்கண்ணி யில் இந்த அதிசயம் நடக்கும்
நாகூர் தர்காவில் இந்த அமைதி கிடைக்கும்
இறைவன் சக்தி வடிவம் ஆனவர்
அவர் எங்கும் வியாபித்து உள்ளார்

No comments:

Post a Comment