jaga flash news

Saturday 29 September 2012

நாகதோஷம் விலக சிறந்த வழிபாடு….


1. நாம் தினமும் சிவனுடைய நாமத்தைச் சொல்லி வணங்கி வந்தால் நாக தோஷம் நம்மிடம் நெருங்காது. காரணம் சிவனுடைய கழுத்தில் சர்ப்பம் ஆபரணமாக விளங்குவதால் சிவதியானம் செய்பவர்களை நாகதோஷம் ஒன்றும் செய்வதில்லை.
2. சிவனுக்கு உரிய விசேஷசமான காலம் பிரதோஷ வேளையாகும். இந்த பிரதோஷ வேளையில் சிவனை நினைத்து வணங்கி வந்தால் நாகதோஷம் வலுவிழந்து போகும். அதே நேரத்தில் வில்வ இலைகளினால் அனுதினமும் அர்ச்சனை செய்து வர நாகதோஷம் விலகும்.
3. கணபதி ஹோமம் செய்தால் நாகதோஷம் விலகி வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வரும்.

No comments:

Post a Comment