jaga flash news

Wednesday, 19 February 2025

மூலிகை பற்று- வெரிகோஸ்


மூலிகை பற்று

மஞ்சள் - ஒரு டீஸ்பூன்,

கருந்துளசி இலை - ஒரு கைப்பிடி,

வசம்பு- 3 துண்டு

கற்றாழை நுங்கு - தேவைக்கு

வசம்பை அப்படியே மிக்ஸியில் போட்டு பொடித்தால் மிக்ஸி ப்ளேடு உடையக்கூடும். அதனால் வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து நீர்விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கலாம். பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும்

வெரிகோஸ் வெயின்ஸை நிர்வகிக்க உதவும் சில உணவுகள்

வெரிகோஸ் வெயின்ஸை நிர்வகிக்க உதவும் சில உணவுகள் பின்வருமாறு:

பீட்ரூட் - பீட்டாசயனின் என்ற சேர்மம் உள்ளது, இது ஹோமோசிஸ்டீனைக் குறைக்கிறது, இது இரத்த உறைவை ஏற்படுத்தி நரம்புகளை சேதப்படுத்தும் ஒரு தனிமமாகும்.

இஞ்சி - இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது

 மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பழங்கள் -

 ஆப்பிள், 
வாழைப்பழம்
 மற்றும் பேரிக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்கள் வீக்கத்தின் அபாயத்தைக் குறைத்து நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பச்சை இலை

 காய்கறிகள் -
 கீரை,
 முட்டைக்கோஸ் மற்றும் பிற பச்சை இலை காய்கறிகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது இரத்த ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது.

அவகேடோ - வெரிகோஸ் வெயின் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சி & ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இலவங்கப்பட்டை - இரத்த நாளங்கள் விரிவடைந்து விரிவடைய உதவுகிறது, இதனால் இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது.
வெரிகோஸ் வெயின்களுக்கான சூப்பர்ஃபுட்களின் நன்மைகள் பற்றி எங்கள் தகவல் தரும் கட்டுரையான "வெரிகோஸ் வெயின்களுக்கான சூப்பர்ஃபுட்ஸ்" இல் விரிவாகப் படியுங்கள் , மேலும் வெண்ணெய் பழம் முதல் சியா விதைகள் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் எவ்வாறு வீக்கத்தைக் குறைக்கும், சுழற்சியை மேம்படுத்தும் மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிக்கும் என்பதை அறிக.

வெரிகோஸ் வெயின் தொடக்க அறிகுறிகள்


வெரிகோஸ் வெயின் தொடக்க அறிகுறிகள் எப்படி இருக்கும்..? காரணங்களும்.. சிகிச்சை முறைகளும்..!

பலவீனமான அல்லது பாதிப்பு கொண்ட இரத்த நாளங்களை கொண்டவர்களுக்கே அதிகமாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உண்டாகிறது.



வெரிகோஸ் வெயின்
என்பது நரம்புகள் சுருட்டிக்கொண்டு சருமத்தின் மேற்பரப்பில் புடைத்து காணப்படும் பாதிப்பாகும். இது கால் நரம்புகளையே அதிகமாக பாதிக்கிறது. காரணம், நாம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்தாலோ நரம்புகளின் அழுத்தம் காரணமாக உடலின் கீழ் பகுதியான காலில் இந்த பாதிப்பை உண்டாக்குகிறது.


வெரிகோஸ் வெயின் பாதிப்பில் பலரும் சிலந்தி நரம்பு சுருள் எனப்படும் spider veins பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இது பார்ப்பதற்கு சிவந்த, பழுப்பு நிறம் அல்லது நீலம் நிறத்தில் மெல்லிய நரம்புகளாக சருமத்தின் மேல் தெரிய ஆரம்பிக்கும். இது 1 அல்லது 1.5 மில்லி மீட்டர் அளவில் இருக்கும். தொடை, கணுக்கால், கால் போன்ற இடங்களில் சிலந்தி வலை போல் தெரிவதால் சிலந்தி நரம்பு என்று அழைக்கப்படுகிறது. இது அதிக பாதிப்பு இல்லாதது என்றாலும் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இதை மருத்துவரின் அறிவுரைப்படி சரியான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தாலே சரி செய்துவிடலாம். பிரச்சனையை மேலும் பெரிதாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.




தீவிர நரம்புச் சுருள் பிரச்சனையால் பாதிக்கப்படும் நபருக்கு வலி, அசௌகரியங்களை உணரலாம். சில நேரங்களில் இந்த தீவிர வெரிகோஸ் வெயின் பிரச்சனை ஆபத்தாகவும் மாறக்கூடும். இதை சரி செய்ய வேண்டுமெனில் சுய பாதுகாப்பு , சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம்.

வெரிகோஸ் வெயின் ஆரம்ப அறிகுறிகள் :

வெரிகோஸ் வெயின் ஆரம்பத்தில் உருவாகும்போது எந்த வித வலியையும் ஏற்படுத்தாது. இந்த நரம்புகள் சருமத்தின் மேல் அடர் நிறத்தில் ஊதா அல்லது நீல நிறத்தில் தோன்றும். பார்க்கும்போது நரம்புகள் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகளாக இருக்கும். குறிப்பாக இரத்தக் குழாய்களில் ஏற்படும் சிக்கலை குறிக்கிறது.



நரம்பு சுருள் பிரச்சனை ஏற்பட என்ன காரணம்..?

பலவீனமான அல்லது பாதிப்பு கொண்ட இரத்த நாளங்களை கொண்டவர்களுக்கே அதிகமாக வெரிகோஸ் வெயின் பாதிப்பு உண்டாகிறது. இதயத்திலிருந்து இரத்தத்தை கொண்டு செல்ல உதவும் தமனிகள் உடலின் மற்ற பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. இரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு திருப்பி அனுப்பும் பணியை நரம்புகள் செய்கின்றன. அவ்வாறு கால்களிலிருந்து இரத்தத்தை திருப்பி மேல் நோக்கியவாறு அதாவது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக திருப்பி அனுப்ப இந்த நரம்புகளே உதவி செய்கின்றன. இதற்கு  தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு பின் விரியும் தன்மை கொண்ட நரம்புகள் இரத்தத்தை மேல் நோக்கி அனுப்ப உதவுகிறது.

அதாவது, நரம்புகளானது,  இரத்த ஓட்டம் இதயத்தை நோக்கி செல்ல நரம்புகளில் உள்ள மெல்லிய வால்வுகள் விரிந்தும், அந்த இரத்தம் கீழ்நோக்கி வராமல் தடுக்க மீண்டும் மூடிக்கொள்ளும் பணியை செய்கிறது. அவ்வாறு இரத்தத்தை சீராக கொண்டு செல்ல உதவும் நரம்புகளின் வால்வுகள் பலவீனமடைந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ இரத்தம் மேல் நோக்கி செல்லாமல் கீழ்நோக்கி மீண்டும் வந்துவிடும். அவ்வாறு மேல்நோக்கிய செல்ல முடியாமல் தேக்கமாகும் இரத்தம் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி சுருள் சுருளாக வீங்க ஆரம்பிக்கும். இதுவே வெரிகோஸ் வெயின் பாதிப்புக்கு காரணமாகும்.


எப்போது தீவிர பாதிப்பாக கருதப்படுகிறது..?

1. கால்களில் வலி அல்லது கால்கள் பளுவான உணர்வை தரும்.

2. எரிச்சல், அடிக்கடி நரம்புகள் துடிக்கும் உணர்வு, தசைப் பிடிப்பு மற்றும் கணுக்கால் வீக்கம் , கால்களில் வீக்கம் இருக்கும்.

3. நீண்ட நேரம் அமர்ந்து எழுந்தாலோ அல்லது நின்று அமர்ந்தாலோ தாங்க முடியாத தீவிர வலி இருக்கும்.

4. சுருள் நரம்புகளை சுற்றி அரிப்பு இருக்கும்.

5. சுருள் நரம்புகளை சுற்றியுள்ள சருமத்தின் நிறம் மாறும்.


எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?


யாருக்கெல்லாம் பாதிப்பு அதிகம்..?

வயது : வயது முதிர்வு காரணமாக இரத்த ஓட்டத்தின் வேகம் குறையும்போது நரம்புச் சுருள் பாதிப்பு ஏற்படலாம்.

பாலினம் : பெண்களுக்கு ஹார்மோன் மாற்றம் காரணமாக அதிகமாக ஏற்படுகிறது. குறிப்பாக கருத்தடை மாத்திரைகளும் பெண்களுக்கு வெரிகோஸ் வெயின் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கும் அதிகமாக ஏற்படலாம்.

குடும்ப வரலாறு : வெரிகோஸ் வெயின் பாதிப்பு வீட்டில் யாருக்கேனும் உள்ளது எனில் குடும்ப வரலாறு காரணமாக தொடரலாம்.

வேலை : உடல் பருமன், நீண்ட நேரம் அமர்ந்தே இருத்தல், நீண்ட நேரம் நின்றபடி வேலை செய்வோருக்கு இந்த பிரச்சனை வரலாம்.


Monday, 17 February 2025

பிரம்ம முகூர்த்த சிறப்பு, குளிக்காமல் விளக்கேற்றலாமா


பிரம்ம முகூர்த்த நேரம் ஸ்பெஷல் இதுதான்.. குளிச்சிட்டுதான் பூஜை செய்யணுமா?
பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்த குறிப்பிட்ட நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய சொல்வது ஏன்? குளிக்காமல் பூஜைகள் செய்யலாமா? விளக்கு ஏற்றலாமா? வயதானவர்கள் என்ன செய்யலாம்? இவைகள் குறித்து, ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன? அவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

எப்போதுமே பெண்கள் விடிகாலையிலேயே எழுந்துவிடவேண்டும்.. பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து, யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்து விட்டு, சிறிது குளிர்ந்த நீர் குடித்துவிட்டால், லஷ்மி கடாட்சம் எப்போதும் வீட்டில் கிடைக்கும் என்பார்கள்.



பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்தும்
இதற்கு காரணம், இந்த நேரத்தில்தான் தேவர்களும், பித்துருக்களும், வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கையாகும். அதுமட்டுமல்ல, பிரம்ம முகூர்த்தத்தில்தான் லட்சுமிதேவி வீதி வலம் வருவதாக நம்பப்படுகிறது.. எந்த வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறார்களோ, அந்த வீட்டில் லட்சுமி நுழைவாள் என்பார்கள். இதன்மூலம் மகாலட்சுமியின் அருளும், ஆசியும் கிடைக்கும்.


இதற்கு அறிவியல் காரணமும் உள்ளது.. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் இந்த விடிகாலை நேரத்தில், காற்று மண்டலம் மிகவும் தூய்மையாக இருக்கும்.. இந்த தூய்மையான காற்றை சுவாசிப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

தூங்கி எழுந்து வாசற்கதவை திறக்கும்போது, "மகாலஷ்மியே வருக" என்று 3 முறை சொல்லி கதவை திறக்கலாம. காலை 4.30 லிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்... ஒரு சிட்டிகை மஞ்சளை நீரில் கலந்து குளிப்பதால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.



உடல்நிலை கோளாறு, வயதானவர்கள்
ஆனால், காலையில் பலரால் குளிக்க முடியாத சூழல் ஏற்படலாம்.. உடல்நிலை கோளாறு, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல சூழல்கள் ஏற்படலாம்.. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களிலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.. இதுபோன்ற நேரங்களிலும், குளித்துவிட்டுதான் விளக்கேற்ற வேண்டுமா? குளிக்காமல் விளக்கேற்றி, பூஜை செய்தால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம்.



உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள், பல் துலக்கி, கை, கால், முகத்தை சுத்தமாக கழுவி விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றலாம்... பிறகு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு, வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்..

குளிக்காமல் பூஜை செய்யலாமா
இதில் வயதானவர்களாக இருந்தால், முடிந்தவரை "கண்ட ஸ்நானம்" எனப்படும் கழுத்தோடு குளித்தபிறகு பூஜிப்பது நல்லது.. ஒருவேளை அதுவும் முடியாத நிலையில், கை, கால்களை தூய்மை செய்தபிறகு, ஆடை மாற்றி, ஆண்கள் திருநீறும், பெண்கள் மஞ்சள் நீரை தலையில் தெளித்தும் கொள்ளும் பூஜை செய்யலாம் ஆனால், இது தீட்டு காலங்களுக்கு பொருந்தாது.


அதேபோல, மந்திரங்கள் உச்சரித்து, பூஜை செய்ய வேண்டும் என்றாலோ அல்லது பரிகாரத்திற்காக விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும் என்றாலோ, பிரம்மமுகூர்த்த என்றில்லாமல் எந்த நேரத்திலும் கட்டாயம் குளித்து விட்டு தான் விளக்கேற்ற வேண்டும்.. அதேபோல, குறிப்பிட்ட நாள் விரதம் இருக்க நேரிட்டாலும், உடலுக்கு மட்டும் குளித்துவிட்டுத்தான் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். விரதம் ஆரம்பிக்கும் நாள், விரதம் நிறைவு செய்யும் நாட்களில் மட்டும் தலைக்கு குளிக்கலாம்.

குளிக்காமல் விளக்கேற்றலாமா
அதேபோல, பிரம்ம முகூர்த்தம் இல்லாமல், வழக்கமான நாட்களில் குளிக்காமல் விளக்கேற்றலாமா? என்ற சந்தேம் எழலாம்.. திருமணம் ஆகாத கன்னியர், வயது முதிர்ந்த பெண்கள் குளிக்காமல் விளக்கு ஏற்றலாம்.. ஆனால், தாம்பத்ய வாழ்வில் உள்ளவர்கள் குளித்த பிறகே விளக்கேற்ற வேண்டும்.

குளிக்காமல் சாமி கும்பிடலாம்.. அதேபோல காலையில் எழுந்தவுடன் கை, கால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம்.. ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோயில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டுமாம்..


பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா?




பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா?
 பழனி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமா என்ற சந்தேகம் பல பக்தர்களுக்கு இருக்கும். இது உண்மையா என்பதை தெரிந்து கொள்வோம்.

 பழனி முருகனை ஆண்டி கோலத்தில் பக்தர்கள் தரிசிக்க சிலர் தயக்கம் காட்டுவதை கவனித்திருப்போம். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்யவே பக்தர்கள் பெரும்பாலும் விரும்புவார்கள்.


ஆண்டி கோலத்தில் பழனி முருகனை தரிசித்தால் நாமும் ஆண்டி ஆகிவிடுவோமோ என்ற மூடநம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது பழனி.

அவருடைய ஆண்டி கோலமானது அனைத்தையும் துறந்து ஞானத்தை விரும்பக் கூடிய நிலை ஆகும். தண்டாயுதபாணி சிலை வெறும் நவபாஷாணத்தால் ஆனது. முருகனை ஆண்டி கோலத்தில் பார்க்கும் போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உருவாகும்.

ஆண்டி கோலத்தில் இருக்கும் நவபாஷாண முருகனை தரிசிக்க வருபவர்களுக்கு நவபாஷாணத்தின் முழுமையான பாசிட்டிவ் கதிர்வீச்சு கிடைக்கும். திங்கள்கிழமை காலையிலேயே மலையேறி முருகனை ஆண்டி கோலத்தில் தரிசித்தால் தவறான வழியில் பொருளையும் செல்வங்களையும் தேட கூடாது. அது சங்கடங்களை தரும்.


எதையுமே வேண்டாம் என விட்டுவிட்டால் எதுவுமே உன்னை தேடி வரும் என்பதுதான் தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் முருகனின் ஆண்டி கோலமாகும். அனைத்தையும் விட்டுவிட்டால் ராஜாவாக இருப்பாய் என உணர்த்துவது ராஜ அலங்காரம். எனவே இரு அலங்காரங்களுமே சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

பழனி முருகனை எந்த கோலத்தில் பார்த்தாலும் நமக்கு நற்பலன்கள் உண்டாகும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

நாரதர் தேவலோக மாங்கனியை சிவனிடம் கொடுத்து அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. அப்போது கணபதியும் முருகனும் தங்களுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டனர்.


அப்போது சிவபெருமான், உங்கள் இருவரில் யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்த பழம் என்கிறார். உடனே முருகன் ஏழு உலகையும் சுற்றி வர தனது மயில் வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

ஆனால் விநாயகரோ அம்மையப்பனே தனக்கு உலகம் என கூறி அவர்கள் சுற்றி வந்து அந்த கனியை கணபதி பெற்றுக் கொண்டார். அப்போது உலகை சுற்றி வந்த முருகன், கணபதியின் கையில் இருந்த கனியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தனது தாய் தந்தையரிடம் இது எப்படி அவருக்கு கொடுக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அவர்கள் கணபதி தங்களை சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டதை கூறினர். தாய், தந்தையரே உலகம் என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனது ஏனோ என முருகன் எண்ணினார். தனது அண்ணன் கணபதியிடமே இந்த கேள்வியை கந்தன் முன் வைத்தார்.

அம்மையும் அப்பனும்தான் உலகம் என காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது தவத்தினால்தான் என்பதை அறிந்த முருகன், பூலோகம் சென்று தவக்கோலம் பூண்டதே பழனியாண்டி ரூபமாகும். கனி கிடைக்கவில்லை என கோபித்து கொண்ட அவர் ஆண்டி கோலத்தில் காட்சித் தரவில்லை என்கிறார்கள். தன்னை வழிபடுவோருக்கு எல்லாம் கிடைக்கவே கந்தனின் தவக்கோலம் தொடங்கியது. அழகும் அறிவும் முருகனுக்குள் ஒளிவீசியது. எனவே பழனி ஆண்டிக் கோலத்தை பார்ப்பதில் தவறில்லை என்கிறார்கள்.


திருஷ்டி பரிகாரம்


அதிர்ஷ்டம் தரும் 5 கருமிளகு.. வருமானத்தை பெருக்கி, மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் திருஷ்டி பரிகாரம்
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள்.. எப்பேர்ப்பட்ட காரியத்தையும் தடை செய்யக்கூடிய தன்மை, கண் திருஷ்டிகளுக்கு உண்டு. கண்திருஷ்டி, முதல் தீய சக்தி வரை குடும்பத்தை நெருங்காமல் இருக்க, கல்மிளகுகள் உதவுகின்றன. எப்படி தெரியுமா?


திருஷ்டி பட்டுவிட்டதா? என எப்படி அறிந்து கொள்வது? திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி ஏற்படும்.. அடிக்கடி சோம்பலும், கொட்டாவியுமாக இருக்கும்.. எந்த வேலையும் செய்ய முடியாது.. புத்தாடை அணிந்தால் அது கிழியலாம்... சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை பட்டுவிடலாம்.


மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்! 
மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்!
வீட்டில் ஏதாவது பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், இழப்பு என ஒவ்வொன்றாக வந்துகொண்டே இருக்கும்... காரணமே இல்லாமல் கணவன்-மனைவியிடையே பிரச்சனைகள், தகராறுகள் வெடிக்கும்.. உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, குடும்பத்தில் யாருக்காவது மருத்துவ செலவுகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்..


திருஷ்டி சூழ்ந்திருக்கும் அறிகுறிகள்
பசியிருந்தும் சாப்பாட்டில் நாட்டமின்மை, யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் இவை அனைத்துமே ஏற்படலாம்.. கையில் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் நழுவிவிடும். இவை அனைத்துமே, திருஷ்டிக்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறியிருந்தால், உடனே திருஷ்டி கழித்துவிட வேண்டும்.

ஆனால், திருஷ்டிக்கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும்.. திருஷ்டிக்கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலையாக இருக்க வேண்டும்.. கிழக்குத் திசையை நோக்கி நிற்க வேண்டும். தனியாக அல்லது கூட்டமாக திருஷ்டி கழிக்கலாம். ஆனால் கூட்டத்தில் நிற்பவர்களில் பாதிபேருக்கு ஒருவரும், மீதி பேருக்கு மற்றொருவரும் என்று மாற்றி மாற்றி திருஷ்டி கழிக்க கூடாது. திருஷ்டியில் நின்றுவிட்டால், அனைவருக்கும் சேர்த்து ஒரே நபர் தான் திருஷ்டி கழிக்க வேண்டும்.



கொட்டாங்குச்சி வெடிக்கும் சத்தம்
அந்தவகையில் பெரும்பாலும் திருஷ்டி கழிக்க, கல் உப்பு, காய்ந்த மிளகாய், எலுமிச்சை, கற்பூரம் இவைகளில் ஏதாவது ஒன்றை வைத்து திருஷ்டி எடுப்பார்கள்.. ஆனால், கெட்ட சக்திகள், வருமானத்தடை, ஆரோக்கியமின்மை, நிதி நெருக்கடி இவை அனைத்துக்கும் சேர்த்து திருஷ்டி எடுக்க, கருமிளகுகள் உதவுகின்றன..

காரணம், கெட்ட சக்திகளை அழிக்கும் தன்மை கருமிளகுக்கு உண்டு.. இந்த கருமிளகால் திருஷ்டி எடுத்து, தேங்காய் சிரட்டையை சேர்த்து எரிக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் படபட சத்தம், சுற்றியிருக்கும் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளையும் அழிக்கக்கூடியதாம். இதன்மூலம், உடல் ஆரோக்கியமும், நிதிநிலைமையும் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

வருமானம் பெருக, கெட்ட சக்தி நீங்க
இதற்கு உள்ளங்கையில் கைப்பிடியளவு கல் உப்பும், 5 கருமிளகையும் எடுத்துக் கொண்டு முதலில் உங்கள் தலையை 3 சுற்று வலது புறமாக சுற்றிக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் வீட்டிற்கு நடுவே நிற்க வைத்து இதுபோலவே சுற்ற வேண்டும். அப்படி சுற்றும்போது, கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், கடன் அனைத்தும் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.



பிறகு, வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு , வீட்டை பார்த்து இப்படி 3 முறை சுற்றிய பிறகு, அந்த உப்பையும், கருமிளகையும் ஒரு தேங்காய் சிரட்டையில் போட்டு எரித்து விட வேண்டும்.. வாரம் ஒருமுறை செவ்வாய் அல்லது ஞாயிறு மாலை 7 மணிக்கு மேல் இதனை கட்டாயம் செய்து வரும்போது, எந்த தீய சக்தியும் நெருங்காது. அல்லது செவ்வாய்க்கிழமை, வளர்பிறை அஷ்டமி நாட்களில் செய்வது கூடுதல் பலனை தரும் என்கிறார்கள்.


Sunday, 16 February 2025

டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை எவ்வாறு கணக்கிடலாம்?

 டிவிடெண்ட் வழங்கும் நிறுவனம் எப்படி?.. டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை எவ்வாறு கணக்கிடலாம்?

 பல நிறுவனங்கள் தங்களது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதார்களுக்கு டிவிடெண்டாக வழங்குகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானமாகும். இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் டிவிடெண்ட் வழங்கும் நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். முன்னதாக, அந்நிறுவனத்தின் வருமானம் மற்றும் வளர்ச்சி குறித்து நல்ல ஆய்வு செய்வார்கள். ஒரு நிறுவனம் தங்கள் வருமானம் மற்றும் வளர்ச்சி முதலீட்டு உத்திகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை, அந்நிறுவனத்தின் டிவிடெண்ட் செலுத்துதல் சதவீதத்தை அல்லது விகிதத்தை பகுப்பாய்வு செய்வதன் முதலீட்டாளர்கள் தீர்மானிக்க முடியும். நிறுவனம் தனது லாபத்தில் பங்குதாரர்களுக்கு எவ்வளவு டிவிடெண்டாக விநியோக்கிறது மற்றும் மறுமுதலீடு செய்கிறது என்பதை புரிந்துகொள்ள டிவிடெண்ட் செலுத்தும் விகிதம் முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கியான நிதி அளவீடு கருவியாகும். "12 மாதம் காத்திருந்தால் ஜாக்பாட் தான்.. இந்த 5 பங்குகள் உங்கிட்ட இருக்கா?" டிவிடெண்ட் செலுத்தும் விகிதத்தை நாம் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஈவுத்தொகை செலுத்தும் விகிதம்= (ஒரு பங்குக்கு டிவிடெண்ட் தொகை/ஒரு பங்குக்கு வருமானம்) x 100. ஒரு பங்குக்கு டிவிடெண்ட் (டிபிஎஸ்) என்பது ஒவ்வொரு நிலுவையில் உள்ள பங்குக்கும் செலுத்தப்படும் மொத்த டிவிடெண்ட் ஆகும் ஒரு பங்கிற்கான வருவாய் எ(இபிஎஸ்) என்பது நிறுவனத்தின் நிகர வருமானத்தை நிலுவையில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் தொகை ஆகும்.  அதேசமயம், உங்களிடம் நிறுவனம் வழங்கிய மொத்த டிவிடெண்ட் தொகை மற்றும் நிகர வருமான புள்ளிவிவரங்கள் மட்டுமே உள்ளது என்றால், டிவிடெண்ட் செலுத்தும் சதவீதத்தை கண்டுபிடிப்பதற்கான பார்முலா வேறு. டிவிடெண்ட் செலுத்தும் சதவீதம்= (மொத்த செலுத்திய டிவிடெண்ட் தொகை/நிகர வருமானம்) x 100.   உதாரணமாக ஒரு நிறுவனம் செலுத்திய மொத்த டிவிடெண்ட் தொகை ரூ.10 கோடி மற்றும் அதன் நிகர வருமானம் ரூ.40 கோடி என்று வைத்துக்கொள்வோம். டிவிடெண்ட் செலுத்தும் சதவீதம்= (10,00,00,000/40,00,00,000) x 100. அதாவது இந்நிறுவனம் தனது வருவாயில் 25 சதவீதத்தை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது. அதிக டிவிடெண்ட் செலுத்தும் விகிதம்: ஒரு நிறுவனம் அதன் லாபத்தில் பெரும் பகுதியை (50 சதவீதத்துக்கு மேல்) பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குகிறது என்றால் அது அதிக டிவிடெண்ட் செலுத்தும் விகிதமாகும். இது வருமானத்தை மையமாக கொண்ட முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடும். அதேசமயம் டிவிடெண்ட் வழங்கும் தொகை வருவாயை (100 சதவீதத்துக்கு மேல்) தாண்டினால் அது நிலைத்தன்மையின்மை மற்றும் சாத்தியமான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். குறைந்த டிவிடெண்ட் செலுத்தும் விகிதம்: ஒரு நிறுவனம் லாபத்தில் 20 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கினால் அது குறைந்த டிவிடெண்ட் செலுத்து்ம் விகிதம். அதேசமயம் குறைந்த டிவிடெண்ட் செலுத்தும் விகிதம் கொண்ட பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் பெரும்பகுதியை வளர்ச்சிக்காக மீண்டும் முதலீடு செய்கிறது என்பதை குறிக்கும். "பங்குச்சந்தையில் 20 வருடம் முதலீடு செய்தாலும் லாபம் உத்தரவாதம் இல்லை.. நிபுணர் பேச்சால் அதிர்ச்சி..!" நிலையான டிவிடெண்ட் செலுத்துதல்: ஒரு நிறுவனம் தனது லாபத்தில் 30-50 சதவீதம் வரை டிவிடெண்ட் வழங்கினால் அது நிலையான டிவிடெண்ட் செலுத்துதல் விகிதம். இது எதிர்கால வளர்ச்சிக்கு போதுமான மூலதனத்தை வைத்துக் கொண்டு பங்குதாரர்களுக்கு வெகுமதி அளிக்க நிறுவனம் அனுமதிக்கிறது. .

இறந்த மயிலை யாராலும் பார்க்க முடியாது



இறந்த மயிலை யாராலும் பார்க்க முடியாது! 6 சொட்டு கண்ணீரால் பிளக்கும் பாறைகள்! முருகனின் அற்புதம்
மயில்கள் இயற்கையாக இறந்து கிடந்ததை பார்த்துள்ளீர்களா? அவற்றின் இறுதி காலம் எப்படி இருக்கும் தெரியுமா? அதன் உடலை கூட யாராலும் பார்க்க முடியாதாம்.


இதுகுறித்து தமிழ் குவோராவில் நானறிந்த ஆன்மீகம் எனும் பதிவில் கூறியிருப்பதாவது: மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?


பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?

ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!

இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள், நேரம், நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..


ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி "மயில்துயில்" எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..


7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே..


தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்!

வீட்டில் தங்கும் மகாலட்சுமி"
அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ,

வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த..

உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி..

அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்து 'மயிலாடுதுறை மயில்சாமி சித்தர்' எழுதிய "மயில் அகவல்" என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..

ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!

தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா!

ஓம் முருகா.. முருகா.. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Saturday, 15 February 2025

தீபாராதனையின் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணம்னு சொல்றாங்களே! இது உண்மையா?


தீபாராதனையின் போது கற்பூரம் அணைந்தால் அபசகுணம்னு சொல்றாங்களே! இது உண்மையா?
தீப ஆராதனையின்போது கற்பூரம் அணைந்தால் அபசகுணமா? ஒரு வேளை கோயிலில் அணைந்துவிட்டால் என்ன செய்வது என்பதையும் பார்க்கலாம்.


 கோயில்களில் வீடுகளில் தீப ஆராதனையின் போது கற்பூரம் அணைந்தால் என்ன செய்வது என்று தெரியாது.



மேலும் கற்பூரம் அணைந்தால் அது அபசகுணம் என்று கருதுவது உண்டு. ஆனால் உண்மையில் கற்பூரம் அணைத்தால் அபசகுணம் இல்லை.


அப்படி அணையும் பொழுது அந்த கற்பூரம் இல்லாமல் வேறு கற்பூரம் எடுத்து மாற்றி பூஜை செய்வது நல்லது.

மேலும் ஒளியில் எல்லாம் அழகாய் தெரியும். அப்படியாக கோயிலில் கற்பூர வெளிச்சத்தில் இறைவனின் உருவம் இன்னும் அழகாய் தெரியும்.


வீட்டில் கற்பூரம் காட்டும் பொழுது வீட்டில் பூஜை அறையில் மாட்டி இருக்கும் சுவாமி படங்கள் மிக அழகாய் தெரியும்.

அதேபோல் கற்பூரம் எரிந்து முடிந்த உடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அந்த கற்பூரம் உணர்த்துவது என்னவென்றால் அறியாமை என்னும் இருள் மறைந்து ஞானம் பெற வேண்டும் என்பது ஆகும்.


மேலும் கருவறையில் இருக்கும் இறைவனின் சிலை கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலரூபம் அடர் கருமை நிறத்துக்கு மாறிவிடும்.



இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது. மேலும் சுவாமி மீது தீபம் காட்டும்போது நமது முழு கவனமும் சுவாமி மேலேயே இருக்கும்.

அந்த நேரத்தில் கடவுளை தரிசனம் செய்யும்போது எல்லோருடைய எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது இறையருள் பெறுவது மட்டுமே நமது குறிகோளாக இருக்கும்.


மேலும், இறைவனுடைய சக்தியை இந்த ஒளி வடிவத்திலே நாம் பெற்று கொள்வதாகவே ஐதீகம் இருக்கிறது. கற்பூரம் தன்னை அளித்து கொண்டு ஒளி தருகிறது.

அதே போல் நாமும் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அதை ஒலித்து நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ இந்த கற்பூரம் ஒரு சாட்சியாக இருக்கிறது.

ஆதலால் எதுவும் அபசகுணம் இல்லை. ஒவ்வொரு விஷயம் பின்னாளில் ஒவ்வொரு பாடம் இருப்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


வைரமுடி விழாவின் கதை

வைரமுடி விழாவின் கதை
இந்து நம்பிக்கையின்படி, பகவான் ஸ்ரீஹரி விஷ்ணுவின் வைரமுடியை அசுரன் விரோசனன் திருடிச் சென்றான். திருட்டு நடந்தபோது விஷ்ணு தூங்கிக் கொண்டிருந்தார். பகவானின் தெய்வீக வாகனமான கருடன், கிரீடம் திருடப்பட்டதை உணர்ந்தான். கருடன் விரோசனனைத் தொடர்ந்து பாதாள உலகத்திற்குச் சென்று, அசுர ராஜாவுடன் போரிட்டு, கிரீடத்துடன் பறந்து சென்றான். இந்த தெய்வீக சம்பவம் பால்குண மாதத்தில் புஷ்ய நட்சத்திர நாளில் வைரமுடி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மற்றொரு புராணக்கதையின்படி, கிரீடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் தெய்வத்திற்கு வழங்கப்பட்டது
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவம் பால்குண மாதம் பரணி நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்தா நட்சத்திரம் வரை கொண்டாடப்படுகிறது. புஷ்ய நட்சத்திர நாளில் வைரமுடி ஊர்வலம் நடைபெறுகிறது.

தெய்வீக கிரீடம் சூரிய ஒளியில் படக்கூடாது என்று நம்பப்படுகிறது. எனவே ஊர்வலம் இரவில் நடைபெறுகிறது.

பல்வேறு இடங்களில் பூஜைக்குப் பிறகு அரசு கருவூலத்திலிருந்து கிரீடம் மேல்கோட்டேவுக்கு வருகிறது. ஊர்வலத்தின் மாலையில், ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் கருவறைக்கு முன்னால் கிரீடம் வைக்கப்படும், மேலும் தலைமை பூசாரி வைரமுடியை பகவான் செலுவ நாராயணனின் உற்சவ மூர்த்தியின் மீது வைப்பார். தலைமை பூசாரி கூட வைரமுடியை நிர்வாணக் கண்களால் பார்க்கக்கூடாது என்பது மரபு. எனவே, கிரீடத்தைப் பொருத்தும்போது பூசாரி தனது கண்களை பட்டுத் துணியால் மூடுவார். உற்சவம் இரவு 9:00 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:00 மணிக்கு முடிவடைகிறது. அதிகாலை 3 மணிக்குள் கிரீடம் அகற்றப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அரசு கருவூலத்திற்குத் திருப்பி அனுப்பப்படும்.

13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கருடோத்ஸவம், கல்யாணோத்ஸவம், நாகவல்லி மஹோத்ஸவம், மஹாரதோத்ஸவம் ஆகியவை அடங்கும்.