jaga flash news

Sunday 17 May 2015

ஜாதகங்களில் 4 வகைகள்

ஜாதகங்களில் 4 வகைகள் (பிரிவுகள்) இருக்கின்றன:
1.தர்ம ஜாதகம
2.தன ஜாதகம்
3. காம ஜாதகம்
4. ஞான ஜாதகம்
1.தர்ம ஜாதகம் என்பது ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய வீடுகள் நன்றாக அமையப்பெற்ற ஜாதகம். 1ஆம் வீடு (லக்கினம்) 5ஆம் வீடு (பூர்வ புண்ணியம்) 9ஆம் வீடு(பாக்கிய ஸ்தானம்) ஆகிய மூன்றும் நன்றாக இருக்க வேண்டும். அந்த ஜாதகன் தான் பல தர்மங்களைச் செய்வான். கோவில் கட்டுவான் அல்லது கோவில்களுக்குத் திருப்பணிகள் செய்வான். குளங்கள் வெட்டுவான். இருக்கும்போதும், பெயரோடும், புகழோடும் விளங்குவான்.இறந்த பின்னும் அவன் பெயர் நிலைத்து நிற்கும்.
2. "தன" ஜாதகத்தில் இரண்டு, ஆறு, பத்து ஆகிய வீடுகள் நன்றாக அமைந்திருக்கும். (House of Finance, House of Servants and House of Profession). இந்த ஜாதகன்தான் நிறைய சம்பாதிப்பன். நிறையப் பொருள் சேர்ப்பான். செல்வந்தனாகத் திகழ்வான். ஆனால் அந்தப் பணம் அவனுக்கு முழுமையாகப் பயன்படாது. அவனைச் சார்ந்தவர்கள் அல்லது சேர்ந்தவர்கள் அதை அனுபவிப்பார்கள். சேர்க்கும் பாக்கியம் அவனுக்கு. அனுபவிக்கும் பாக்கியம் வேறு ஒருவனுக்கு. He will earn lot of money and leave it for others to enjoy. வைத்துவிட்டு சிவனடிக்குச் சென்று விடுவான்.
3. மூன்றாவது "காம" ஜாதகம். இவர்கள் வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் ருசித்துவிட்டு அல்லது ஒரு கை பார்த்துவிட்டுப் போகிறவர்கள். இவர்கள் சம்பாதித்துத்தான் செலவழிக்க வேண்டும் என்பதில்லை. யாருடைய பணமோ அல்லது பொருளோ இவர்களைத் தேடிவரும். அது அப்பச்சி தேடிவைத்த பணமாக இருக்கலாம் அல்லது அய்யா தேடிவைத்த பணமாக இருக்கலாம் (Father or Grandfather) அல்லது அம்மான் தேடிவைத்த பணமாக இருக்கலாம். அம்மான் என்பதை இங்கே மாமனார் என்று பொருள் கொள்க! இவர்களுக்கான ஜாதக வீடுகள். மூன்று, ஏழு, பதினொன்று. (House of courage, House of women and House of Gains)
4."ஞான" ஜாதகம் என்பது நான்காவது வகையைச் சேர்ந்தது. நான்கு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய வீடுகளின் கூட்டணி. அதாவது அந்த மூன்று வீடுகளும் வலுவாக இருக்கும்.(House of Comforts, House of Difficulties and House of Losses) இந்த நான்காம் பிரிவு ஆசாமிகள்தான் ஞானிகள். வாழ்க்கையின் எல்லா சுகங்களும் சரிவரக் கிடைக்காமல் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, பல விரையங்கள், நஷ்டங்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துரோகங்கள், சோகங்கள் என்று அனைத்தையும் சந்தித்துவிட்டு அல்லது உணர்ந்து அனுபவித்து விட்டு,"இதுதான் உலகம் என்று முடிவிற்கு வருபவர்கள்

No comments:

Post a Comment