jaga flash news

Wednesday 20 May 2015

ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ?

ஆன்மீகம் எனும் வார்த்தை இப்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை ஆன்மீகம்

நாம் கடவுளைப்பற்றி பேசுவதை ஏன் ஆன்மீகம் என்கிறோம்? ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பத்திரிகை ஆன்மீக நிகழ்ச்சி என்று எல்லாமே ஆன்மீகம் தான் ஏன்? ஆன்மீகம் என்பது ஆன்மா (உயிர்) பற்றியது ஆன்மாவை மீட்டு எடுக்கும் ஒரு இயல் இகம் ஆன்மீகம் கடவுளைப் பற்றி பேசுவதற்கும் உயிர் எனும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம் ? கடவுளை நாம் வணங்கு வதோ அல்லது வழிபடுவதோ இந்த ஆன்மா தான் செய்த கர்ம வினைகளை தீர்த்து உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே சொத்து வேண்டும் பணம் வேண்டும் கார் வேண்டும் பங்களா வேண்டும் இன்னும் பிற உலக சுகங்களுக்காக அல்ல.

ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ? ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே. பெயரை நீக்கி பிணம் என்று பேரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன?

ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும்

பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார் அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார் இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரமன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்

பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும். விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்

சூரசம்காரம் செய்யும் முன் தேவர்களுக்கு முருகப்பெருமான் திருசேய்ங்கலூரில் சிவ பூஜை செய்து காட்டினார் அவர் தேவ சேனாபதி அல்லவா ?தலைவர் அல்லவா? அவர் பூஜை செய்த பிறகு தேவர்களிடம் கேட்டார் உங்கள் கஷ்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா ? என்றார் நீங்கள் சிவபூஜை செய்ய மறந்ததால் என்றுகூறி சிவாம்சமான முருக பெருமான் சிவபூஜை செய்து காட்டினார் தலைவன் என்பவன் தான் காட்டிய வழியில் தானே நடந்து காட்ட வேண்டும் என்று தலைவனுக்கான இலக்கணத்தையும் உணர்த்தினார்

ஆதலால் ஆன்மீகம் என்பதாவது இறைவனை வணங்கி ஆன்மாவை உலகத் தளைகளில் இருந்து மீட்டு எடுக்கும் செயலாகும்

இன்று ஆன்மீக இயக்கங்கள் என்ன செய்கின்றன முன்னோர் வழி செல்லாமல் புது புது மந்திரம் கண்டு பிடிப்பது புது புது இறை மார்க்கங்களை புகுத்துவது என்று சுய நலநோக்கிலும் பணம் பண்ணும் நோக்கிலும் செல்கின்றன

மூல முதல்வன் மூல விக்கிரகமாக உள்ளே வீற்றிருக்க சிறு தேவர் வழிபாட்டை பிரதானமாக்கி இறைவனை இரண்டாம் நிலைக்கு கொண்டு வருவது மிகவும் வருத்தம் உதாரணம் திருநள்ளாறு. தர்பாரண்யேஸ்வரரை வணங்க விடாமல் இலவச தரிசன பக்தர்களை சனி தரிசனத்தோடு கோவில் நிர்வாகமே வெளியே அனுப்புகிறது சனைச்சரன் என்ற அவருக்கு ஈஸ்வர பட்டம் வேறு கொடுத்து சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள்.மூல கருணா மூர்த்தி அவர் இருக்க சனி ,ராகு ,கேது இவர்கள் என்ன செய்ய முடியும் .இது கடவுளை நம்பாதவர்கள் செயல்,இவர்கள் போலிகளால் ஏமாற்றப்படுவார்கள் நம்பி செய்யும் எந்த காரியமும் வீண்போகாது அது இறை வழிபாட்டுக்கும் சேர்த்து தான்

சமீப காலமாக சிவமூர்த்தங்களில் ஒன்றான பைரவர் பூஜை போய் சொர்ண பைரவர் பூஜை பிரபலமாகி விட்டது அவருடைய மூல மந்திரம் என்று நூற்றுக்கணக்கில் ஜெபம் செய்யவேண்டுமாம் தினம் ஒரு திருமுறை படியுங்கள் அதில் உள்ள மந்திரசக்தி பலன் தெரியும் .சம்பந்தர் அப்பர் இவர்கள் சைவத்தின் இரு கண்கள் என்பார் சேக்கிழார். இவர்கள் வாக்கினை மதிக்காதவர்கள்
சைவர்களா ? இவர்களுக்கு சிவன் தெய்வமும் அல்ல.

ஆராய்ச்சி என்று இவர்களாக கிளப்பி விட
வேண்டியது ரொம்ப ஆழமா உள்ளே சென்று பெயரில் சொர்ணம் வைத்துள்ள இவரை வழிபட்டால் பணம் கொட்டும் என்று கவர்ச்சி விளம்பரம் வேறு. கேவலம் பணத்திற்காகவா ஆன்மீகம் .ஆன்மீகம் என்ற சொல்லின் அர்த்தமே அடிபட்டுவிட்டதே

ஆன்மீகம் புத்தக வடிவிலும் இணைய வடிவிலும்வியாபாரம்ஆகிவிட்டது

இன்னொருவேதனையானவிஷயம் பரிகாரம் பண்ணுவதற்கு கோவிலுக்கு செல்வார்கள் ஆனால் இறைவனை தொழவேண்டும்
நம்மை படைத்து நமக்கு இது காறும் வாழ்வு
கொடுத்தற்கு நன்றிகடன் செலுத்த செல்வ தில்லை ஒவ்வொரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்க்க கடவுள் என்ன கார்பரேட் கம்பெனி முதலாளியா?

No comments:

Post a Comment