jaga flash news

Saturday 23 May 2015

கண்திருஷ்டி கழிக்கும் வழிகள்

கண்திருஷ்டி கழிக்கும் வழிகள்
1. தேங்காய் ஓட்டில் உப்பு, கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வைத்து,குடும்பத்தினர் அனைவரையும் ஒருசேர அமர வைத்து,மூன்றுமுறை நன்றாகச் சுற்றி எறியும் அடுப்பில் போட்டுவிடுவார்கள். அப்போது எல்லா வீட்டிலும் விறகு அடுப்பு இருக்கும். இக்காலத்தில் எல்லாருக்கும் இது சத்தியப்படுவது சந்தேகம்தான்.
2. சின்னக் குழந்தைகள் அடிக்கடி அழது கொண்டிருந்தால்,வெந்நீரில் நன்றாகக் குளிக்க வைத்துவிட்டு கொஞ்சம் கல் உப்பை எடுத்து மூன்றுமுறை சுற்றி, குழாயைத் திறந்து தண்ணீரில் உப்பைக் கரைத்துவிடவும்.
3. பெரியவர்களுக்கும் உடம்பு சொல்ல முடியாதபடி அசதி இருப்பின்,அவர்களும் உப்பு கரைத்த நீரில் கால்,கை முகம் கழுவி விட்டு,பின் நல்ல நீரில் கழுவினால் கண்ணேறு தோஷம் நீங்கிவிடும்.
4. எல்லாருக்கும் தெரிந்தது கற்பூரம்,கற்பூரத்தை குடும்பத்தினர் அனைவருக்கும் சுற்றிவிட்டு வாசலில் கொளுத்திவிட திருஷ்டி மறையும்.
5. புது வீடு கட்டும்போது,சோளக்கொல்லை பொம்மை அல்லது பூசணிக்காய் படம் வரைந்து மாட்டுவதும் ஒரு பாதுகாப்பு திருஷ்டிப் பரிகாரம்.
6. வீட்டில் அவ்வபோது சாம்பிராணி புகை போடுவதும் சிறந்த திருஷ்டி பரிகாரம்,கிருமி நாசினி பாதுகாப்பும் ஆகும்.

7. வீட்டு நுழைவாயில் கதவு, நிலைப்படி, வாசலுக்கு இருபுறமும் மஞ்சள், குங்குமம் வைப்பது தீய சக்திகளைத் தடுக்கும். தீய கிருமிகளிடமிருந்து பாதுகாப்பும் தரும்.
8. வீட்டினுள் அவ்வபோது பசுவின் கோமியம் தெளிக்காலம்;பீடைஒழியும்.
9. சிறு குழந்தைகளுக்கு கன்னத்தில் கருப்பு மையினால் பொட்டு வைக்க, திருஷ்டி நீங்கும்.
10. பசுஞ்சாணம் ஒரு கிருமி நாசினி மற்றும் தோஷநீக்கி ஆகும். முன்பு வீடு மற்றும் சாப்பிட்ட இடத்தை பசுஞ்சாணம் கொண்டு மெழுகும் வழக்கம் இருந்தது. தற்காலத்தில் முடிந்த மட்டும் பசுஞ்சாணம் பயன்படுத்த முயற்சிக்கலம்,மேலும் பசுவை வணங்குதலும் சிறப்பு.
11. நாம் சார்ந்துள்ள,பழகும் மனிதர்களின் கிரக அமைப்புகளை நம்மால் மாற்ற இயலாது. ஆயினும் அப்படிப்பட்ட மனிதர்கள் மூலம் ஏற்படும் திருஷ்டி ,அசுப ராசி எனப்படும் தீய அதிர்வலைகளிளிருந்து நம்மைப் பாதுகாக்கவும்,மனத்திருப்திக்காகவும் சிற்சில திருஷ்டிப் பரிகாரம் செய்வது நல்லது.
12. சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பினாலும் தேங்காய் உடைத்து, எலுமிச்சை நசுக்கி பூஜை முடித்து அனுப்பும் உத்தம நாடல்லவா நம் இந்தியா, எனவே இத்தகைய திருஷ்டிப் பரிகாரம் எல்லாம் வாழ்வில் முக்கியம் !

1 comment: