jaga flash news

Friday 29 May 2015

நக்ஷத்ரத்திற்குரிய பறவைக்குரிய புத்தி அடையாளங்கள் ஜாதகரின் புத்தியில் இருக்கும்!

அவரவர் ஜென்ம லக்கனத்திற்கு
5ம் இடம் அறிவைக்குறிக்கும்
பாவம் ஆகும். ஜாதகப்படி 5 ம் இடத்து அதிபதி எந்த நக்ஷத்ரத்தில் இருக்கிறாரோ அந்த நக்ஷத்ரத்திற்குரிய பறவைக்குரிய புத்தி அடையாளங்கள் ஜாதகரின் புத்தியில் இருக்கும்!
எளியேன் ரிஷப லக்ன பிறவி ஜாதகப்படி 5 ம் அதிபதி புதன் ஸ்வாதி நக்ஷத்ர சாரம் பெற்று இருக்கிறார்.
இதற்கான பறவை
பறக்கும் பூச்சி இனமான தேனீ ஆகும்!
தேனீக்களின் சிறப்ப அம்சமே தேனை சேகரிப்பதுதான். ஏனெனில் மற்ற பூச்சிகள் சிறு பறவைகள் எல்லாமே தேனை உண்பதற்காகவே
தேடிச்செல்லும்!
தேனீகள் அப்படி அல்ல அவை மனிதர்களால் அடைய இயலாத கிடைத்தற்கரிய மூலிகைப்பூக்களில் இருந்து தேனை சேகரித்து அதை கூட்டில் சேர்க்கும்!
அந்த தேன்தான் நமது சித்த மருத்துவத்தில் ஒப்பற்ற பங்கு பெறுகிறது! தேனீக்களில் பல வகை உண்டு வேலைக்காரத் தேனீ
பாதுகாப்புத்தேனீ
இராணித்தேனீ
ஆண் தேனீ
ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை. இதில் வேலைக்காரத் தேனீக்கள் மட்டுமே
பல இடங்களுக்கும் சென்று தேனை சேகரிப்பவை இவற்றின் முழுமுதல் வேலையே இதுதான்!
எளியேனுடைய புத்தி
தேனீயைப்போல
செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா? என்பதற்கு
இக்குழுவில் இதுவரை எளியேன் பதிந்துள்ள பதிவுகளே சாட்சி!
உங்கள் பறவை என்ன
சொல்கிறது அன்பர்களே?
மனித மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு மிருகம் என்று காலம் காலமாக அழைப்பதால்
நக்ஷத்திர மிருகங்களின் குணங்கள் மனோக்காரகன் சந்திரனை அடிப்படையாக்கி அவரவர்
பிறந்த நக்ஷத்திரத்திற்கே
அதன் பலன் கொடுக்கப்படுகிறது!
எனவே தான்
நக்ஷத்ர புத்திக்கு அதன் பறவைகளின் புத்தி
இங்கே எடுக்கப்பட்டுள்ளது!

No comments:

Post a Comment