jaga flash news

Tuesday, 24 March 2026

முயலகனின் கதை

முயலகனின் கதை (Apasmara Story in Tamil):
அறியாமையின் உருவம்: முனிவர்கள் மற்றும் மக்களிடையே ஆணவம், அறியாமை (Apasmara) தலைதூக்கியபோது, சிவபெருமான் அவற்றை அழிக்க முயன்றார்.
அழிவற்ற வரம்: அபஸ்மரன் பிரம்மனிடமிருந்து அழியாத வரம் பெற்றிருந்தான். அவனை முற்றிலும் கொன்றால், உலகில் உள்ள அறியாமை மறைந்து, ஞானம் மட்டுமே மிஞ்சும். இது உலக சமநிலையை பாதிக்கும் என்பதால், சிவபெருமான் அவனை முழுமையாக அழிக்காமல், தன் காலடியில் போட்டு அமுக்கி (கட்டுப்படுத்தி) வைத்தார்.
நடராஜரின் தாண்டவம்: சிவனார் ஆனந்த தாண்டவம் ஆடும்போது, தன் வலது காலால் அபஸ்மரனை மிதித்து, அஹங்காரத்தை அடக்கி, ஞானத்தை நிலைநாட்டுகிறார். இதுவே சிதம்பரம் நடராஜர் திருக்கோலத்தின் தத்துவம். 

முக்கியத்துவம்:
சின்னம்: நடராஜரின் காலடியில் உள்ள முயலகன், மனிதனின் அகங்காரம் மற்றும் அறியாமையை, ஞானத்தை கொண்டு அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆயுர்வேதம்: 'அபஸ்மாரம்' என்பது கால்-கை வலிப்பு நோயைக் குறிக்கும் சொல்லாகவும் கருதப்படுகிறது. 

எனவே, அபஸ்மரன் என்பவர் சிவபெருமானின் கருணையால் முழுமையாக அழிக்கப்படாமல், மனிதனின் மனதில் உள்ள அறியாமையை கட்டுப்படுத்தும் சக்தியாகவே நிலைத்திருக்கிறார்.

Saturday, 7 March 2026

கோளறு பதிகம் விளக்கம்



திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
கோளறு பதிகம் விளக்கம்
திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகம்
நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி மனதில் நினைத்த நல்லன எல்லாம் நிறைவேற தினமும் ஓத வேண்டிய அற்புதமான தேவார பதிகம்:

1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடாறும் உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!

3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே.

4. மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

6. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.


7. செப்பிள முலைநன்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

8. வேள்பட விழி செய்தன்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
Ezoic

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

9. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.

10. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியு(ம்)நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

11. தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.

கோளறு பதிகம் விளக்கம்
1. (எம்பெருமான்) மூங்கில் போன்ற தோளினை உடைய உமையவளுக்கு தன் உடம்பினில் பாகம் கொடுத்தவன். ஆலகால விடத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டு அருந்தி திருக்கழுத்தினில் தாங்கியவன். இனிமையான இசையை எழுப்பும் வீணையை வாசித்துக்கொண்டு (இருக்கும் அவன்) களங்கமில்லாத பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு, என் உளம் முழுவதும் நிறைந்து காணப்படுவதால் (அதாவது நான் சிவசிந்தையில் இருப்பதால்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் பாம்பாகிய ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் ஒரு குற்றமும் இல்லாதவையாக (என் போன்ற) சிவனடியாருக்கு என்றும் மிக மிக நல்லதையே செய்யும்!

2. திருமாலின் வாமன, பன்றி, கூர்ம அவதாரங்களின் ஆணவத்தை அடக்கி அணிந்து நிற்கும், எலும்பு, கொம்பு, ஆமை ஓடு முதலானவை தன் திருமார்பில் விளங்க, உமையவளுடன் எருதின் மேல் ஏறி, பொன்போலொளிரும் ஊமத்தை மலர்களாலான மாலை தரித்து, தலையில் கங்கையணிந்து என் உள்ளத்தே நிறைந்ததால், விண்மீனாய் வரும் ஆயில்யம்; ஒன்பதோடு ஒன்று – பத்தாவது விண்மீனான மகம்; ஒன்பதொடு ஏழு – பதினாறாவது விண்மீனான விசாகம்; பதினெட்டாவது விண்மீனான கேட்டை; ஆறாவது விண்மீனான திருவாதிரை; முதலான பயணத்திற்கு விலக்கப்பட்ட நாட்கள் எல்லாமும், சிவனடியார் மீது அன்பொடு அவர்க்கு என்றும் நல்லதையே செய்யும்!

3. பவளம் போன்ற சிவந்த திருமேனியில் ஒளிபொருந்திய வெண்ணீற்றை அணிந்து, சிவபெருமான் உமையம்மையாரோடு வெள்ளை எருதின்மீது ஏறி வந்து, அழகு பொருந்திய கொன்றையையும் சந்திரனையும் தன் முடிமேல் அணிந்து சிவபெருமான், உமையம்மையாரோடு வெள்ளை எருதின் மீது ஏறி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், இலக்குமி, கலைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், வெற்றித் தெய்வமான துர்க்கை, பூமாது, திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வம் போல நன்மை அளிப்பர். அடியவர்களுக்கு மிக நல்லதையே செய்வர்.


4. பிறைபோன்ற நெற்றியை உடைய உமையம்மையாரோடு ஆலமரத்தின்கீழ் இருந்து (வடம் – ஆலமரம்) வேதங்களை அருளிய எங்கள் பரமன், கங்கை நதியையும் கொன்றை மாலையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஆத்திரமுடையதான காலம், அக்கினி, யமன், யமதூதர், கொடிய நோய்கள் எல்லாம் மிக நல்ல குணமுடையன ஆகி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.

5. விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு இடபத்தின் மேல் ஏறி வரும் நம் பரம்பொருள் ஆகிய சிவபெருமான், அடர்ந்து கறுத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொடிய சினத்தை உடைய அசுரர்கள், முழங்குகிற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்ச பூதங்கள் முதலானவையெல்லாம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

6. ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையும் (வாள் -வரி – அதள் – அது -ஆடை; அதள் -புலித்தோல்), வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த மலர்கள், வன்னி இலை, கொன்றைப்பூ, கங்கை நதி ஆகியவற்றைத் தன் முடிமேல் சூடி, உமையம்மையாரோடும் வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், கொல்லும் வலிய புலி (கோளரி உழுவை), கொலையானை, பன்றி (கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.


7. செம்பு போன்ற இளந்தனங்களை உடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடபத்தின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னை அடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல் (சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் , அவற்றால் வருவன முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையா. அப்படி அவை நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

8. அன்று மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், இடபத்தின் மேல் உமையம்மையாரோடு உடனாய் இருந்து, தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றை மலர் ஆகியனவற்றைச் சூடி வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னன் ஆன இராவணன் (பிறன்மனை நாடியதாலேற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.

9. பல்வேறு கோலங்கள் கொள்கிற பரம்பொருள் ஆகிறவனும், மாதொருபாகனும், எருதின் மேல் ஏறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபெருமான், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர் மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.


10. கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேட வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள்புரிந்த தன்மை கொண்ட சிவபெருமான், தன் முடி மேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் ஈசனின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. எல்லாம் அப்படிச் சிறந்த நல்லனவற்றையே செய்யும். அவை மிகவும் நல்லனவே செய்யும்.

11. தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும் (ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.

…திருச்சிற்றம்பலம்…


Tuesday, 24 February 2026

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்"

அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்" என்பது காஞ்சி மகாபெரியவா மற்றும் பல மகான்களால் பரிந்துரைக்கப்பட்ட, ஒரு நிம்மதியான வாழ்வு மற்றும் மரணத்திற்காக சிவபெருமானை வேண்டிப் பாடும் ஒரு சிறந்த ஸ்லோகம் ஆகும். இது துன்பமில்லா மரணத்தையும், பிறரைச் சார்ந்திராத வாழ்வையும் கோரும் பக்தி ஸ்லோகம். 
ஸ்லோகம்:
அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே கிருபையா சம்போ, த்வயீ பக்திம் அசஞ்சலாம் 
பொருள்:
அனாயாசேன மரணம்: கஷ்டம்/வேதனை இல்லாத மரணம்.
விநா தைன்யேன ஜீவனம்: பிறரைச் சார்ந்து வாழாத (மானத்தோடு கூடிய) வாழ்க்கை.
தேஹிமே கிருபையா சம்போ: சம்புவே (சிவனே), கிருபையுடன் எனக்கு அருளுங்கள்.
த்வயீ பக்திம் அசஞ்சலாம்: உன்னிடத்தில் அசஞ்சலமான (அசைக்க முடியாத) பக்தி. 
பயன்கள்:
தினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
வாழும் காலத்தில் துன்பமில்லாத வாழ்வையும், மரணத்தின் போது வேதனையற்ற மரணத்தையும் (இறப்பு) இது வேண்டிப் பெறுகிறது.
சைதன்ய பாகவதத்திலும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Friday, 13 February 2026

படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது



படுக்கையில ் அமர்ந்த ு அதாவது கட்டிலின ் மேல ் அமர்ந்த ு இதனை எல்லாம ் செய்யக்கூடாது.

மீறினால், நித்ரா தேவியின ் கோபத்திற்க ு ஆளாகி விடுவீர்கள்.

 படுக்கையில ் அமர்ந்த ு சாப்பிடுவத ு என்பது கண்டிப்பாக கூடாது. அதனால ் வறும ை வீட்டுக்குள ் புகும். என்பத ு ஐதீகம்.

• படுக்கையில ் அமர்ந்த ு பணம ் எண்ணுவத ு என்பத ு கூடாது. மீறினால ் மகாலட்சும ி தாயின ் கோபத்துக்க ு ஆளாக நேரிடும்.

படுக்கையில ் அமர்ந்த ு கொண்ட ு வியாபார கணக்குகளை பார்க்க கூடாது. ஏனென்றால், வீட்டில ் எதிர்மற ை ஆற்றல் அதிகரிப்பதோடு, குபேரனின ் அருள ் கிடைக்காமல ் போய்விடும்.

படுக்கையில ் பகல ் நேரத்தில ் அதிகம ் தூங்குவத ு என்பத ு கூடாது. அதனால ் வீட்டில ் கடன், வறும ை ஏற்படும். அசத ி வந்தால ் மட்டும், படுத்துக ் கொள்ளலாம்.

படுக்கையில ் ஈர காலுடன ் உறங்குவத ு என்பத ு கூடாது. மீறினால ் வீட்டில ் சண்டை, கலகம ் போன்றவ ை ஏற்படுவதோடு, சனிபகவானின ் கோபத்திற்க ு ஆளாக நேரிடும்.


Friday, 30 January 2026

60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் என்ன பிராப்தம்

*60 வயதுக்கு மேல் மனைவியுடன் வாழ்ந்தால் தினம் தினம் காலை வணக்கம் சொல்

*65 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் கால் தொட்டு கும்பிடு
*70 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் தினம் தினம் பூ போட்டு கும்பிடு

*80 வயதுக்கு மேல் மனைவியுடன் இருந்தால் இறைவனால் ஆசி பெற்றவன்.

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும்

ஒளவையார் தனிப் பாடல் - யாரோடு எது போகும் 

குடும்பத்தோடு வாழ்வதில் ஒரு இன்பம் இருக்கிறது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு விதத்தில் பலம் மற்றும் இன்பம் சேர்க்கிறார்கள்.

ஒளவை சொல்கிறாள்.

பாடல்

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – ஆயவாழ்(வு)
உற்றா ருடன்போம் உடற்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும் போம்

பொருள்

தாயோ டறுசுவைபோம் = தாயோடு அறு சுவை போகும்

தந்தையொடு கல்விபோம் = தந்தையோடு கல்வி போகும்

சேயோடு தான்பெற்ற செல்வம்போம் = பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும் 

 ஆயவாழ்(வு) = பெரிய வாழ்க்கை

உற்றா ருடன்போம் = உறவினர்களோடு போய் விடும்

Wednesday, 28 January 2026

தீட்டு காலங்கள்

தீட்டு காலங்கள்

*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில்  விசேஷங்கள் 
திருமணம்,கிரகப்பிரவேசம் ... செய்வதை சில காலம்  தள்ளி வைத்து விட வேண்டும். 
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம் 
*மனைவி இறந்தால் - 3 மாதம் 
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம் 
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்

"மாமனார்..  மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை

* பங்காளி இறந்தால் - 3 மாதம்

*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை 
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும் 

*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு

தீட்டு காலங்கள்

தீட்டு காலங்கள்

*குடுபத்தினர் இறந்து விட்டால் வீட்டில்  விசேஷங்கள் 
திருமணம் ஹப்பிரவேசம்... செய்வதை சில காலம்  தள்ளி வைத்து விட வேண்டும். 
*தாய், தந்தை இறந்தால் - ஒரு வருடம் 
*மனைவி இறந்தால் - 3 மாதம் 
*சகோதரன் இறந்தால் = 1.5 மாதம் 
*தாய் வழி சொந்தத்தில் இறந்தால் -1 மாதம்

"மாமனார்..  மாமியார் இறந்தால் -தீட்டு இல்லை

* பங்காளி இறந்தால் - 3 மாதம்

*தற்கொலை செய்து இறப்பவருக்கு தீட்டு தர்ப்பணம் தேவை வை இல்லை 
தில ஹோமம் வளர்த்து சாந்தி செய்ய வேண்டும் 

*கரு கலைந்தால் - கரு எத்தனை மாதமோ அத்தனை காலம் தீட்டு

Sunday, 18 January 2026

ராசி vs அதிபதி

ராசிமண்டலம்

மீனம். குரு

மேஷம் செவ்வாய்

ரிஷபம் சுக்கிரன்

மிதுனம் புதன்

கும்பம் சனி



கடகம் சந்திரன்

மகரம் சனி



சிம்மம் சூரியன்

தனுசு. குரு

விருச்சிகம் செவ்வாய்

துலாம் சுக்கிரன்

கன்னி புதன்


செவ்வாய்- பூமி,மனை,ஆற்றல், வேகம்,ரத்தம்

சுக்கிரன்-வீடு,வாகனம்,அழகு,நளினம்,காமம்

புதன் கல்வி,அறிவாற்றல், தொழில்நுட்பம்

சந்திரன்- மனம், உடல்,அன்பு,அம்மா,நீர்

'சூரியன்-அதிகாரம்,தந்தை,அரசாங்கம், ஆன்மா

குரூ-செல்வம்,குழந்தை, ஆன்மீகம்

சனி-ஆயுள்காரகன், தொழில்,

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

தெய்வத்திடம் கொடுத்து பிள்ளையை வாங்கும் கிரகநிலை யாருக்கு தெரியுமா?

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை அனைவரும் பார்த்திருப்போம்.

ஜாதகத்தில் கிரக நிலை சரியாக அமையாது விட்டால் தான் பெற்ற பிள்ளையை கடவுளிடம் ஒப்படைத்து பின் தத்தெடுத்து வளர்ப்பது சாஸ்திரம்.

நட்சத்திரங்களில் சித்திரை, விசாகம் இவற்றில் பிறந்த ஆண், பெண் குழந்தைகள். மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசியில் பிறந்த குழந்தைக ளை தெய்வத்திடம் கொடுத்து வாங்கி, பெற்றோர்கள் வளளிப்பது குடும்பத்துக்கு நல்லது.

*பிள்ளைகளின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் நான்காம் இடமான தாய் வீட்டில் சந்திரன் இருந்தாலும், ஐந்தாம் இடமான தாய்மாமன் வீட்டில் புதன் இருந்தாலும், ஒன்பதாம் இடமான தந்தை வீட்டில் சூரியன் இருந்தாலும், காரக கிரகம் ஸ்தானபலம் ஏறினால் காரகம் பாவநாஸ்தி என்ற வகையில் தத்து கொடுத்து பிள்ளையை வாங்கப்படும்.

Aanmeegamum

லக்கினம் முதல் 12 ஸ்தானங்களின் பலன்கள்

லக்கினம் முதல்

12 ஸ்தானங்களின்

பலன்கள்

லக்கினம் - (இப்பிறவி ) உயிர், தேகம், தோற்றம்

2ம் இடம் - (வாக்குஸ்தானம்), குடும்பம், தனம் , கண

3ம் இடம் -(சகோதர ஸ்தானம் ), பேச்சு வல்லமை, தைரியம், காது, அணிகலன், தம்பி

4ம் இடம் -(சுகஸ்தானம்), வீடு, வாகனம், தாய், நிலம், உறவினர்கள்,கல்வி

5ம் இடம் -(புத்திர ஸ்தானம் ) வாரிசு, புகழ், குலத்தெய்வம்

6.ம் இடம் - (ரோக ஸ்தானம்) விரோதி, கடன், வழக்கு

7ம் இடம் -(களத்திரம் ஸ்தானம்) மனைவி, கூட்டாளிகள்

8.ம் இடம் -(ஆயுள் ஸ்தானம்) ஆயுள், மரணம்

9ம் இடம் -(பாக்கிய ஸ்தானம் ) தந்தை இஷ்ட தெய்வம், தர்மம்

10ம் இடம் -(தொழில் ஸ்தானம் ) கர்மம், தொழில்

11ம் இடம் (லாப ஸ்தானம் ) அண்ணன், லாபம்

12ம் இடம் -(விரய ஸ்தானம் ) செலவ, உறக்கம், மோட்சம்




Friday, 16 January 2026

பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.



பணத்தை ஈர்ப்பதற்கு சில பிரபஞ்ச இரகசியங்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

அந்த வகையில் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் தொடர்புடைய இயற்கையிலே உள்ள பொருட்களில் இதுவும் ஒன்று. இதை நாம் அணிந்து கொள்வதால் பணத்தை ஈர்க்க முடியும் இது தான் தாமரை மணி மாலை.

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் தாமரை மணிமாலை பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டாது

விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை

விளக்கிற்கு பொட்டு வைக்கும் போது கவனிக்கவேண்டியவை'

1. விளக்கிற்கு மேல் இருந்து பொட்டு வைக்கவே கூடாது.

2- விளக்கு, சாமி படங்கள் இரண்டிற்கும் கீழ் இருந்து மேல் நோக்கி பொட்டு வைக்க வேண்டும்.

3- ஞாயிறு, திங்கள், வியாழன் அன்று தான் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

4 - வீட்டில் ஞாயிற்று கிழமை அசைவம் சமைத்து இருந்தால் அன்று விளக்கை சுத்தம் செய்க கூடாது.

6-அதேபோல் விளக்கிற்கு பொட்டு வைத்து விட்டு தான் விளக்கை ஏற்ற வேண்டும்.

6- மாதவிடாய் காலத்தில் விளக்கை சுத்தம் செய்ய கூடாது

7- தீட்டு வீட்டிற்கு சென்று வரும் போது விளக்கை சுத்தம் செய்ய கூடாது

8- வீட்டில் உள்ளவர்களை தவிர அடுத்தவர் நம்முடைய விளக்கை சுத்தம்

சாமி படத்தை இவ்வாறு துடைத்தால் தரித்திரம் உண்டாகும்.

சாமி படத்தை இவ்வாறு துடைத்தால் தரித்திரம் உண்டாகும்.

1- வீட்டில் உள்ள சாமி படத்தை மற்றும் பழைய துணிகளை வைத்து துடைக்க கூடாது

2- எப்பொழுதும் சாமி படங்களை சுத்தம் செய்வதற்கென்று தனியாக சுத்தமான துணியை வைத்துக்கொள்ள வேண்டும்

3- சாமி படங்களில் இருக்கும் சந்தனம் குங்குமங்களை முதலில் ஒரு துணியை வைத்து துடைத்துக் கொள்ள வேண்டும்

4 - பின் தண்ணீரில் சிறிது பச்சை கற்பூரம் ஜவ்வாது கலந்து அந்த தண்ணீரை வைத்து சாமி படங்களை துடைத்தால் எப்பொழுதும் பூஜை அறை தெய்விக நறுமணத்துடன் இருந்து கொண்டே இருக்கும்

6 - செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் சாமி படங்களை சுத்தம் செய்யலாம்

7-அது போல் மாலை 6 மணிக்கு மேல் சாமி படங்களை சுத்தம் செய்யக்கூடாது 

கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!

கோயிலுக்கு இதை மட்டும் தானமாக கொடுத்துப் பாருங்கள்.! வாழ்க்கையே மாறுமாம்.!

சாஸ்திரப்படி துடைப்பத்தை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.

ஆனால் மகாலட்சுமி வாசம் செய்யும் துடைப்பத்தை கோயிலுக்கு தானமாக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையே மாற்றுமாம்.

எனவே அருகிலுள்ள கோயிலுக்கு க்கு ஒரு துடைப்பம் அல்லது ஒட்டடை கொம்பு வாங்கி கொடுங்கள். இந்த சிறிய தானம் மூலம் வீட்டில் லட்சுமி கலை தங்கி, சுத்தமும் சாந்தியும் நிலைத்து இருக்கும்.

மேலும், நீங்கள் மனதிலும் அமைதியுடனும், பொறுப்புடனும் மாறுவீர்கள்.



LG

நீங்கள் எந்த கேதியில் பிறந்திர்கள்

நீங்கள் எந்த கேதியில் பிறந்திர்கள்

கடின

உழைப்பாளி

7,5,2,23,16,1

வலுவானவர்கள்

12.8,19,30,9,3

அன்பானவர்கள்

4,10,24,11,21,13



புத்திசாலிகள்

6,29,31,14,17,20

இறக்க

குணமுடையவர்கள்

22,25,15,18, 26, 27,

இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?

இரவு முழுவதும் விழித்திருந்து இறந்தவர்களின் உடலை பார்த்து கொள்வது ஏன்?

*ஆன்மா என்பது ஒரு நாள் முழுவதும் உடம்பை விட்டு பிரிந்து செல்ல மறுக்கும்.

ஆன்மா 12 அடி உயரம் வரை உடம்பைச் சுற்றிக்கொண்டே உடலுக்குள் மறுபடியும் நுழைய முயற்சிக்கும்.

*வருவோர் போவோர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும்

யார் யார் என்னென்ன பேசுகிறார்கள், என்னென்ன நினைக்கிறார்கள் என்பதை ஆன்மா உணர்ந்து கேட்டுக் கொள்ளும்

*அதனால்தான் யாரும் பேசமாட்டார்கள்.

*உடம்பை எரிக்கும் போது,ஆன்மாவும் கூடவே வந்து, சுற்றும் அலறும். எரிந்து சாம்பலாக ஆன பிறகுதான், வேறு இடம் தேடி செல்லும்


சர்பா கிரக சேர்க்கை நிற்குமிடம் தரும் தோஷம்

   சர்பா கிரக சேர்க்கை
நிற்குமிடம் தரும் தோஷம்

* காலசர்ப்ப தோஷம் -ராகு/கேதுவிற்குள் அனைத்து கிரகங்களும் இருத்தல்

* நாக தோஷம் - 1,2, 5.8, 9.ல் ராகு/கேது

* கிரகண தோஷம் -சூரியன்+ ராகு/கேது ,

சந்திரன்+ராகு/கேது

* தார தோஷம் - 7ல் ராகு/கேது

* மாங்கல்ய தோஷம்- 8ல் ராகு/கேது

* புத்திர தோஷம் - 5,9 ல் ராகு/கேது , குரு +ராகு/கேது

*பிதுர் தோஷம் - சூரி +ராகு/கேது

* மாதுர் தோஷம் - சந் +ராகு/கேது

* குடும்ப ஸ்தான தோஷம் -2, 8ல்ராகு/கேது

* கர்ம தோஷம் - சனி + ராகு/கேது

* குருதோஷம் - குரு +ராகு/கேது

* மாதுல தோஷம் - புதன் +ராகு/கேது




Thursday, 15 January 2026

மாந்திக்கு பரிகாரம்

மாந்திக்கு  பரிகாரம் 

மாந்தி ஒருவர் ஜாதகத்தில் 11, 10,6 இருந்தால் நல்லது. குரு மாந்திை பார்த்தால் மாந்தி கெடுதல் செய் சுக்கிரனும், புதனும் பலமாக இருந்தால் மாந்தி அதிக கெடுபல தர மாட்டார்.

* சிவனுக்கு உத்திரம் நட்சத்திரநா பாலபிஷேகம் செய்தால் மாந்தி கெடுதல் குறைந்திடும் 

* திருநறையூர் கும்பக்கோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள பர்வதவர்த்தினி உடனுறை ராமநா சுவாமி கோவில் மாந்திக்கு பரிகார ஸ்தலம் 



*திருவாலங்காடு  வடரென்ஷவர்  கோவில் சென்று  சனிக்கிழமை பரிகார பூஜை செய்யலாம்.

Wednesday, 14 January 2026

யார் மீது பிரியம் ஜாஸ்தி ?

யார் மீது பிரியம் ஜாஸ்தி ?

லக்கினாதிபதி நிற்கும் இடம் பிரியமான உறவை காட்டும்.

லக்கினாதிபதி நிற்கும் இடம்

* 4ல் நின்றால் அம்மாவின் மீது

* 9ல் நின்றால் தந்தையின் மீது

* 7ல் நின்றால் மனைவி/கணவன் மீது

* 5ல் நின்றால் குழந்தைகளின் மீது

* 10 நின்றால் செய்கின்ற தொழில் மீது

* 2ல் மாமா, பெரியம்மா மீது

* 3ல் தம்பி மீது



* 11ல் அண்ணன் /அக்கா மீது

மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?

மரணம் பயம் உங்களுக்கு எப்போதும் வரும் தெரியுமா?

இறந்தவர்கள் கனவில் வந்து பசிக்கிறது சாப்பாடு போடு என்றால்.. (இறந்தவர் ஒரு வருடம் ஆவதற்கு முன் கனவில் வந்தால்)

இறந்தவர் கனவில் பேசுவது போல் வந்தால் (என்னுடன் தீயும் வா போகலாம் என்றால்)

இறந்தவர் உங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் (நான் உன்னோடு சேர்ந்து தூங்குகிறேன் என்று சொன்னால்)

இறைச்சிகளை வெட்டுவது போல் கனவு கண்டால் (அதுவும் இறந்தவர் இறைச்சியை வெட்டுவது போல்)

*இறந்தவர் சத்தம் போட்டு அழுவது போல் கனவு கண்டால் (இறந்தவரோடு சேர்ந்து நீங்களும் அழுதால்)

இப்படி எல்லாம் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக மரண பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

(பயம் கொள்ள தேவையில்லை.இது உங்களின் மன பிரம்மை தான்.)

இதையெல்லாம் கண்டிப்பாக வெளியே சொல்லாதீர்கள்

இதையெல்லாம் கண்டிப்பாக வெளியே சொல்லாதீர்கள்

உங்கள் வீட்டில் திருமணம் நடக்க உள்ளது என்றால் திருமணதேதி குறிக்கும் வரைக்கும் வெளியே சொல்லாமல் ஏகசியமா வைங்க

வீட்டுக்கு திடீர் பணம் வரவு வந்தால், அதை கண்டிப்பாக யாரிடமும் சொல்லாதீர்கள்.

*கணவன் மனைவி பரஸ்பர அன்பு சண்டைஉரையாடல்.காதல் என எதையும் வெளிப்படுத்தாதீர்கள்.

ஏழைக்கு கொடுத்த உதவியை வெளியே சொல்லாதிங்க. அவர்களுக்கு தெரிந்தால்,மிகவும் வேதனை அடைவார்கள்.

இது யாருக்கும் பிடிக்காத கசப்பான உண்மைதான்.கணவன் வீட்டு விஷயங்களை தாய் வீட்டுக்கு சொல்லாதிங்க. ஆனா நீங்க கேட்க மாட்டீங்க

மகன் தவறான பழக்கத்தில் சிக்கினால்,அதை ஒருபோதும் வெளியே தெரிய விடாதீர்கள்.என்றாவது ஒருநான் அவன் மாறுவான். ஒரு முறை கெட்ட பெயர் எடுத்து விட்டால்,அதை மீண்டும் சரி செய்ய முடியாது

வேறு வழி இல்லாமல் கடன் வாங்கினால்.அதை ஒருபோதும் வெளி காட்டாதீர்கள் முக்கியமாக உங்கள் வீட்டு கஷ்டநிலைகளை யாரிடமும் பயிர்ந்து கொள்ளாதீர்கள் உங்கள் கஷ்ட நிலை தெரிந்தால்,உங்களுக்கு உதவி செய்ய மனமில்லாமல் போகும்.




விளக்கு ஏற்றும் போது நினைவில்கொள்ள வேண்டிய

விளக்கு ஏற்றும் போது நினைவில்கொள்ள வேண்டிய

7 விஷயங்கள்

வீட்டில் யாரேனும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது காமாட்சி அம்மன் தீபத்தை அணைக்க கூடாது.

சுவாமிக்கு வலது பக்கம் தீபம் ஏற்ற வேண்டும், இடது பக்கம் ஏற்ற கூடாது.

* காமாட்சி அம்மன் தீபத்திற்கு துணை தீபாமாக மண் தீபம் ஏற்றலாம்.

விளக்கு ஏற்றி விட்டு உச்சரிக்க வேண்டிய மந்திரம் (ஓம் தீப லட்சுமியே நமோ நமஹ)

விளக்கு ஏற்றி அரை மணிநேரம் கழித்து தான் மலை ஏற்றவேண்டும் .அதற்கு மேல் எறிவது அவரவர் விருப்பம்.

* விளக்கை எப்பொழுதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஏற்ற வேண்டும்.

* எந்த காரணத்தை கொண்டும் தெற்கு நோக்கி விளக்கு ஏற்ற கூடாது. 

உடலில் உப்பு அதிகமானால் என்ன விளைவுகள்

உடலில் உப்பு அதிகமானால் என்ன விளைவுகள்

1- இரத்தத்தில் சோடியம் அதிகரிப்பதால் ரத்தக் குழாய்கள் நெருங்கி, அழுத்தம் உயரும்.

2- நீண்டநாள் உப்பு அதிகம் எடுத்தால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.

3 - முகம், கால், கைகள் போன்ற இடங்களில் நீர் தங்கல் ஏற்படும்.

4- கிட்னி அதிக உப்பை வெளியேற்ற முயலும்போது அதில் சுமை அதிகரிக்கும்.

5 - உடலில் உப்பு அளவு அதிகமாக இருந்தால் தாகம் அடிக்கடி ஏற்படும்.

6 - தலைவலி மற்றும் சோர்வு ரத்த அழுத்தம் மாற்றம் காரணமாக இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும்.

7 -அதிக உப்பு எடுத்தால் கால்சியம் சிறுநீருடன் வெளியேறும்.

8-உடல் நீர் சமநிலை குலைவதால் தோல் பிரச்சனைகள் ஏற்படும்.

இரவில் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை

இரவில் சாப்பிடும் போது செய்யக்கூடாதவை!!

இரவில் பால் சாதம் சாப்பிட்டால் செல்வம் பெருகும், தயிர் சாதம் சாப்பிட்டால், தரித்தரம் வந்து சேரும்.

தாமரை இலையில் மட்டும் பின்புறத்தில் உணவை வைத்து உண்ணலாம்.

மாலை கருக்கல் வேளையிலும், நள்ளிரவிலும் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் இடம் வெளிச்சமாக இருக்க வேண்டும்.

பச்சைக் காய்கறி, பழம், வடை தவிர மற்ற பொருட்களை கையால் பரிமாறக் கூடாது.

இரவில் எள் சாதமும், பகலில் பால் சாதமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு சோறு வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைப்பது சிறப்பு.

இருட்டிலோ நிழல் விழும் இடங்களிலோ சாப்பிட கூடாது. வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.

16

மாங்கல்யம் தந்துனானே என்பதன் அர்த்தம் :

மாங்கல்யம் தந்துனானே என்பதன் அர்த்தம் :

மாங்கல்யம் தந்துனானேன;

மமஜீவன ஹேதுநா; கண்டே பத்நாமி ஸுபகே;

த்வம ஜீவ சரதஸ்சதம்...

இது தாலி கட்டும் நேரத்தில் சொல்லும் மந்திரம். இதன் பொருள் புரிந்தால் மண வாழ்வின் மகத்துவம் புரியும்.

மங்களகரமானவளே உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிக்கிறேன். என் மனைவியாக என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நாறாண்டு காலம் வாழ்க" என்பதே பொருள்.

இந்த கருத்தை உணர்ந்து மணமகனும் தாலி கட்டினால் மணவாழ்க்கை இனிமையாக அமையும்.


படி பாவ புண்ணிய பரிமாற்றம்

படி பாவ புண்ணிய பரிமாற்றம்

குழந்தைகள்:

14 வயது வரை செய்யும் புண்ணியம் அவர்களையும், பாவங்கள் பெற்றோரையும் சேரும் அதன் பிறகு இரண்டும் அவர்களுக்கு சேரும்.

கணவன்:

செய்யும் புண்ணியத்தில் சரி பாதி மனைவிக்கு சேரும், பாவம் முழுவதும் கணவனையே சேரும்.

மனைவி :

செய்யும் புண்ணியம் முழுவதும் மனைவியை சேரும் மனைவி செய்யும் பாவத்தில் சரிபாதி கணவனை சேரும்.


5ல், 10ல், 12 ல் சனியா?

5ல், 10ல், 12 ல் சனியா?

கோச்சாரசனி அதிக பாடுபடுத்தும்

5ல்,10ல்,12ல் சனி உள்ளவர்கள் வைராக்கியம் கொண்டவர்கள்

* வந்த சண்டையை விடமாட்டார், வம்பு சண்டைக்கு போக மாட்டார்கள்.

*தொழில், வேலையில் பெருத்த நஷ்டத்தையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள்

* கோச்சார சனி அஷ்டமம், ஏழரை, கண்டக சனி காலத்தில் பெரும் துன்பத்திற்கு ஆளாவர்கள்

* ஆனால் வாழ்கையின் பிற்பகுதியில் சனிபகவான் உயர்த்தி விடுவார்.

* பரிகாரம்   வருடத்திற்கு ஒருமுறை சிவன் கோவிலில் 27 பேர்க்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

Tuesday, 13 January 2026

நீர் ராசிகள்,காற்று ராசிகள்,நிலராசிகள்,நெருப்பு ராசிகள்

உங்கள் வாழக்கையில் அடுத்தது என்ன தெரியுமா?

நீர் ராசிகள்-கடகம், விருச்சிகம், மீனம்

உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரியமாற்றம் வரப்போகிறது. நீங்கள் வெளிப்படுத்த முயற்சிக்கும் ஒன்று உண்மையாக மாறும். நீங்கள் கொடுத்த அனைத்து அன்பும் உங்களுக்குத் திரும்பக்கிடைக்கும்

காற்று ராசிகள்-மிதுனம், துலாம், கும்பம்

பணம் வரப்போகிறது. புதிய வீடு வரப்போகிறது. நிதி சுதந்திரம் வரப்போகிறது. நல்ல ஆரோக்கியம் வரப்போகிறது, காதல் வரப்போகிறது. ஒரு திருப்புமுனை வரப்போகிறது.

நிலராசிகள்-ரிஷபம், கன்னி, மகரம்

உங்களுக்கு ஒரு அழகான புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. இந்த வாரம் ஒவ்வொரு நாளும்... உங்கள் வாழ்க்கை சிறப்பாகப் போகிறது. மனதளவில், நிதி ரீதியாக, மற்றும் ஆற்றல் ரீதியாக நீங்கள் முன்னேறப் போகிறீர்கள்.

நெருப்பு ராசிகள் -மேஷம், சிம்மம், தனுசு

 நீங்கள் எதற்காக பிரார்த்தனை செய்கிறீர்களோ, அதை வாழப்போகிறீர்கள். இதைப் படிக்கும்போதுேஉங்கள் கனவு வாழ்க்கை நிஜமாகிறது. உங்களுக்குத் தேவையான வேலை, நீங்கள் விரும்பும் வீடு,நீங்கள் தகுதியான காதல் - அனைத்தும் வரப்போகிறது. நம்பிக்கையுடன் இருங்கள், தொடர்ந்து முன்னேறுங்கள் A#



வேலை சொன்னா உடனே செய்றவங்க யார்?!

வேலை சொன்னா உடனே செய்றவங்க யார்?!

மேஷம்.  உடனே

ரிஷபம்.   3 நாள்

மிதுனம்.   2 மணி

கடகம.       1நாள்

சிம்மம்.      உடனே

 கன்னி.     5 நாள்

துலாம்.     1 வாரம்

விருச்சிகம். 2 நாள்

தனுசு. 1 மணி நேரம்

மகரம்.       3 நாள்

கும்பம்.      6 மணி

மீனம்.        2 நாள்

நல்லதே நினை நல்லதே நடக்கும்!!


Monday, 12 January 2026

திருமணத்தில் சேர்க்க கூடாத கிரக சேர்க்கைகள்

திருமணத்தில் சேர்க்க கூடாத கிரக சேர்க்கைகள்

* சுக்ரன் + கேது ஆண் ஜாதகத்தில் இருந்தால் செவ்வாய் + கேது பெண் ஜாதகத்தில் இருக்ககூடாது

* குரு + ராகு இருக்கும் ஆண் ஜாதகருக்கு செவ்வாய் + ராகு இருக்கும் பெண் ஜாதகியை சேர்க்க கூடாது

* சூரியன் + சனி உள்ள ஆண் ஜாதகருக்கு சூரியன் + செவ்வாய் உள்ள பெண்ணை மண முடிக்க கூடாது

Sunday, 11 January 2026

மூன்று கிரக சேர்க்கைக்கு வழிபடவேண்டிய தெய்வம் -

மூன்று கிரக சேர்க்கைக்கு வழிபடவேண்டிய தெய்வம் 

*சனி+ குரு+ சுக்கிரன் - வராகி

சனி+குரு+ ராகு - சரபேஸ்வரர்

*சனி+குரு + கேது- தட்சிணாமூர்த்தி

* சனி + குரு+சந்திரன் + கேது -சந்திர மௌலீஸ்வரர் (திருவக்கரை)

* சனி+சுக்கிரன்+ கேது - லட்சுமி


*குரு+சூரியன்+புதன்- தத்தாத்ரேயர்

சந்திரன் + செவ்வாய்+ராகு - காளி

சூரியன்+ செவ்வாய்+ராகு - சிவன்

புதன்+செவ்வாய்+ராகு - நரசிம்மர்

குரு+செவ்வாய்+ராகு - சரபேஸ்வரர்

சுக்கிரன்+ செவ்வாய்+ கேது -துர்க்கை

புதன்+செவ்வாய்+கேது - ராமன் 
சூரியன் + செவ்வாய்+ கேது -முருகன்

விதியை மாற்றும் திதி தேவதைகள் மந்திரங்கள்



விதியை மாற்றும் திதி தேவதைகள் மந்திரங்கள்

நீங்கள் பிறந்த திதியின் மந்திரங்களை "தினமும் சொல்லி கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையின் போக்கை நல்ல விதமாக மாற்றி விடலாம்.

பெளர்ணமி- ஓம் சோமாய நமஹ 

பிரதமை - ஓம் அக்னேயே நமஹ 

துவிதியை - ஓம் பிரம்மனே நமஹ

 திரிதியை - ஓம் கௌரியாய நமஹ

 சதுர்த்தி - ஓம் கணபதயே நமஹ

 பஞ்சமி -ஓம் நாகாய நமஹ

சஷ்டி - ஓம் கார்த்திகேயாய நமஹ

சப்தமி -ஓம் சூர்யாய நமஹ

அஷ்டமி - ஓம் சிவாய நமஹ

நவமி - ஓம் துர்காய நமஹ

தசமி -ஓம் யமாய நமஹ

ஏகாதசி -ஓம் குபேராய நமஹ

துவாதசி- ஓம் விஷ்ணுவே நமஹ

சதுர்த்தசி-ஓம் ருத்ராய நமஹ

அமாவாசை -ஓம் பித்ருப்யோ நமஹ


சனியுடன் இணையும் கிரகங்கள் பலன்கள்

இணையும் கிரகங்கள் பலன்கள்

1)சனி + சூரியன் தகப்பன் & அதிகாரம் பாதிப்பு

2) சனி + சந்திரன் மனம் மற்றும் தாய் பாதிப்பு

3) சனி + செவ்வாய்

சகோதரன் மற்றும் தைரியம் பாதிப்பு

4) சனி + புதன்

கல்வி அறிவு கணித அறிவு பாதிப்பு

5) சனி + குரு

ஆண் வாரிசு மற்றும் தனம் பாதிப்பு

6) சனி + சுக்கிரன்

இணை மற்றும் திருமண வாழ்க்கை பாதிப்பு

7) சனி + ராகு

இணையும் வீடுகளைப் பொறுத்து

சர்வநாசம்

8) சனி + கேது

கேதுவால் சனி சூட்சம வலுவையும் சனியால் கேது பாவத்துவத்தையும் அடைவார்.




உங்கள் ராசிக்கு எதை தானமசெய்தால் செல்வம் பெருகும்.

உங்கள் ராசிக்கு எதை தானம

செய்தால் செல்வம் பெருகும்.

மேஷம் உயிர்தானமாக ரத்தம் கொடுத்தல்

ரிஷபம் ஆன்மீக பணி உதவி ,மாணவர்களுக்கு நோட் புத் தனம்

மிதுனம் எழை மாற்றுத் திறனாளிக்கு உதவி,அள்ள தானம்

கடகம் நீர் மோர் மற்றும் தண்ணீர் தானம் செய்யலாம்

சிம்மம்

சமையல் உபகரண தானம்

கன்னி ஆதரவ சரவற்றவர்களுக்கு உதவி

துலாம் கல்வி நல உதவி



விருச்சிகம் பச்சை பயறு

தென்னை, மரக்கன்றுகள் தாளம்

தனுசு மொச்சை சுண்டல்

, பச்சரி தாளம் செய்யலாம் |

மகரம்  கோதுமை தானியம் ஏழைகளுக்கு தாளம்


கும்பம் சாம்பிராணி பால் பொங்கல் 

மீனம் கல்வி உதவி தனங்கள் தாளம்

கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச வீடுகள்

கிரகங்களின் உச்சம் மற்றும் நீச்ச வீடுகள்



மீனம்

சுக்கிரன்

உச்சம்

புதன்

நீச்சம்

மேஷம்

சூரியன்

உச்சம்

சனி

நீச்சம்

ரிஷபம்

சந்திரன்

உச்சம்

மிதுனம்

கும்பம்

கிரகங்களின்

கடகம் 
குரு

உச்சம் 
செவ்வாய்நீச்சம்







சிம்மம்

மகரம்

செவ்வாய்

உச்சம் உச்சம்




தனுசு

விருச்சிகம்

சந்திரன்

நீச்சம்

துலாம்

சனி உச்சம்

சூரியன்

நீச்சம்

கன்னி 
புதன் உச்சம்

சுக்கிரன்

நீச்சம்

உச்சம்- உச்சம் என்பது கிரகங்கள் முழு பலத்துடன் இருப்பது.

நீச்சம்- நீச்சம் என்பது கிரகங்கள் பலம் இழப்பது.




உங்க தனித்துவ குணம் என்ன தெரியுமா?

உங்க தனித்துவ குணம் என்ன தெரியுமா?

நேர்மை

கன்னி

மேஷம்

மகரம்

சிம்மம்

விசுவாசம்

கடகம்

விருச்சிகம்

மகரம்

கன்னி

SMART

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

தைரியம்

கும்பம்

விருச்சிகம்

மகரம்

தனுசு

கருணை

மீனம்

ரிஷபம்

தனுசு

கன்னி

தன்னம்பிக்கை

மகரம்

விருச்சிகம்

மீனம்

சிம்மம்

பாசம்

கடகம்

விருச்சிகம்

மீனம்

மேஷம்

FUNNY

கடகம்

மேஷம்

மீனம்

சிம்மம்



12 ராசிகளின் இருண்ட பக்கம்

12 ராசிகளின் இருண்ட பக்கம்

மேஷம்

உணர்ச்சி, பிடிவாதம், பயம்

மிதுனம்

மோசடி இரட்ட முகம் பொருளாசை

ரிஷபம்

நக்கல் பேச்சு, சோம்பேறி, பேராசை

கடகம்

எரிச்சல் குத்தல் பேச்சு NO பணிவு

சிம்மம்

தற்பெருமை NO பொறுமை கோபம்

கன்னி

அடக்குமுறை கோள்சொலல் சந்தேகம்

துலாம்

 நாடகத்தனம் சந்தேகம் இரட்ட வேடம்

விருச்சிகம்

பொறாமை வாதிப்பது ஆதிக்கம்

தனுசு

யோசிக்காமை மதியாமை குத்தல் பேச்சு மை

கும்பம்

பிடிவாதம் போராளி கோவம்

மீனம்

சோம்பல் ஏமாளி அலட்சியம்

மகரம்

தற்பெருமை சுயநலம் பிடிவாதம்



உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்

உங்க மீது எவ்வளவு கண் திருஷ்டி உள்ளது & சிம்பிள் பரிகாரம்

மேஷம்

80%

எலுமிச்சை பழம் வச்சுக்குங்க, வரம் வரம் மதிக்குங்க

ரிஷபம்

66%

வேப்பிலை வச்சுக்குங்க, தினம் மதிக்குங்க

 மிதுனம்

55%

நெற்றில் சந்தனம் குங்குமம் இட்டு செல்லுங்கள்

*கடகம்

75%

கையில் மணிக்கட்டில் சிகப்பு கயிறு நலம்

சிம்மம்

85%

கையில் மணிக்கட்டில் கருப்பு கயிறு நலம்

கன்னி

60%

கழுத்தில் ருத்திராக்ஷம் நலம் தரும்

துலாம் 

70%

நெற்றில் வீபூதி இட்டு செல்லுங்கள்

விருச்சகம்

90%

கழுத்தில் துளசி மலை நலம்

தனுசு

65%

கருப்பு கைக்குட்டை மேல் பாக்கெட்டில் இருக்கட்டும்.

மகரம்

75%

வில்வ இலை எடுத்து செல்வது பலன் தரும்

கும்பம்

60%

 வீட்டுக்கு வந்ததும் உப்பு நீரில் கால் கழுவவம்

மீனம்

50%

மணி மணிக்கட்டில் இரும்பு வளயம் நலம்.


Saturday, 10 January 2026

ராசிப்படி உங்க 'BEST CHARACTER' எது தெரியுமா?

ராசிப்படி உங்க

'BEST CHARACTER'

எது தெரியுமா?

மிதுனம்

எல்லோரிடமும் யதார்த்தமாக பழகும் விதம்

 கன்னி

நேர்மையை லட்சியமாக கொண்டு செயலாற்றுவது


தனுசு

 செய்நன்றி கொல்லாத இருக்கும் விஸ்வாச குணம்

ரிஷபம்

சவால்கள், பின்னடைவுகள் வந்தாலும் விடாமல் முயலும் திறன்

மேஷம்

நேர் வழியில் செயல்படும் மன உறுதி

கும்பம்

ஏற்ற தாழ்வு இன்றி மரியாதை தரும் பாங்கு

மீனம்

பலன் பற்றி கவலைப்படாத உழைப்பு



மகரம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்ட பயமற்ற செயல்பாடு

சிம்மம்

என்னால் முடியும் என்ற நேர்மறையான எண்ணம்

கடகம்

ஆடம்பரம் அற்ற தோற்றம் மற்றோம் நடத்தை

துலாம்

பொறுப்பை உணர்ந்து செயல் படும் திறன்

விருச்சிகம்

சவால்களை பொறுமையுடன் கையாளும் திறன்

ராசிப்படி, இது போன்ற மனிதர்களை பார்த்தாலே உங்களுக்கு பிடிக்காதூ

ராசிப்படி, இது போன்ற மனிதர்களை பார்த்தாலே உங்களுக்கு பிடிக்காது

ரிஷபம்

பச்சோந்தி மனிதர்களை....

சிம்மம்

உங்களுடன் போட்டி போடுபவரை...

துலாம்

உங்கள் முடிவை விமர்சிப்பவரை...

விருச்சகம்

உங்களிடம் பொய் சொல்பவரை...

மேஷம்

மெதுவாக செயல்படுபவரை..

கும்பம்

உங்களிடம் குறை கண்டுபிடிப்பவரை

கடகம்

கூழைக கும்பிடு போடுபவரை...

மகரம்

உங்களை சந்தேகப்படுபவரை.

உங்களிடம் சத்தமாக பேசுபவரை...

மீனம்

கொடுத்த வாக்கை மீறுபவரை..

தனுசு

உங்களுக்கு அட்வைஸ் செய்பவரை...

மிதுனம்

உங்களை அதிகாரம் செய்பவரை..


ஜோதிடம் 12 ராசிகளின் உடல் பலவீனங்கள்

ஜோதிடம் 12 ராசிகளின் உடல் பலவீனங்கள்

மேஷம். தலை வலி, இரத்த அழுத்தம்

ரிஷபம். கழுத்து, தொண்டை, சுவசம்

மிதுனம்.நரம்பு தளர்ச்சி, கை  தோள் வலி

கடகம். செரிமான கோளாறு, வயிரு பிரச்சனைகள், கால்கள்.

சிம்மம். இதயம், முதுகு வலி.

கன்னி. குடல் பிரச்சனை, குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள்

துலாம். சிறுநீரக பிரச்சனை, தோல் பிரச்சனை

விருச்சிகம். பிரசவ, இன்பெருக்க பிரச்சனைகள்.

தனுசு. பூட்டு வலி, உடல் சோர்வு.

மகரம். எலும்பு, தோல் பிரச்சனைகள்.

கும்பம். கால்கள், ரத்த ஓட்ட பிரச்சனைகள்.

மீனம். மன அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, கால்கள்.

மருமகளை அதிகம் கொடுமைப்படுத்தும் மாமியார் ராசி

மருமகளை அதிகம் கொடுமைப்படுத்தும் மாமியார் ராசி

(RATING 1 TO 10)

கன்னி

2 வெளிப்படை+ பாவம்

மீனம்

2 மென்மை + கண்டிப்பு

7 துலாம் பாசம் + அழுத்தம்

ரிஷபம் 3

அன்பு + உரிமை

தனுசு

4 தந்திரம் + கடமை

கும்பம்

4 ஒப்பீடு + அசட்டை

கடகம்

5 சமநிலை + நடிப்பு

 மிதுனம்

6 கடுமை + பரிதாபம்

மேஷம்

7 கோபம் + குறுக்கீடு

சிம்மம் 
8கட்டளை + அதிகாரம்

விருச்சிகம்
சந்தேகம் + ஆதிக்கம்

மகரம் 
கட்டுப்பாடு + கட்டாயம்

மனைவியை படாத பாடுபடுத்தும் ஆண் ராசிகள்???

மனைவியை படாத பாடுபடுத்தும் ஆண் ராசிகள்???

மீனம்

மனைவியை கண்டவே பதுங்குவார்கள்

கும்பம்

மனைவி வாக்கு தெய்வ வாக்கு

மகரம்

10/100

தனுசு

20/100

விருச்சிகம்

 30/100

துலாம்

50/100.

கன்னி

80/100

சிம்மம்

95/100

கடகம்

99/100

மிதுனம்

100/100

ரிஷபம்

999/100

மேஷம்

1000/100


எந்த ராசிகாரங்க எப்படி?

எந்த ராசிகாரங்க எப்படி?

தெய்வபக்தியோடு இருக்கும் ராசிகள்

மிதுனம்

கும்பம்

தனுசு

மீனம்

சண்டையிட தயாராக இருக்கும் ராசிகள்

மேஷம்

சிம்மம்

விருச்சிகம்

குடும்ப நேரத்தை விரும்பும் ராசிகள்

ரிஷபம் கடகம் கன்னி

துலாம்

மகரம


இந்த ராசிக்காரர்கள் வயிறு எரிந்து சாபமிட்டா. உடனே பலிக்கும்

இந்த ராசிக்காரர்கள் வயிறு எரிந்து சாபமிட்டா. உடனே பலிக்கும்

மேஷம்

 500/100

ரிஷபம் 

40/100

மிதுனம் -

20/100

கடகம்-

98/100

சிம்மம் -

80/100

கன்னி 

60/100

துலாம் 

70/100

விருச்சிகம் - 

1000/100

தனுசு 

90/100

மகரம்

 50/100

கும்பம் -

30/100

மீனம் - 

100/100

ராசிப்படி உங்களுக்கு 'அரக்ககுண இருக்கும் என்ன தெரியுமா?

ராசிப்படி உங்களுக்கு 'அரக்ககுண இருக்கும் என்ன தெரியுமா?

மேஷம்

பிடிவாதம்

கன்னி

முரட்டுத்தனம்

தனுசு

சந்தேகம்

ரிஷபம்

கோழ்முட்டுதல்

மிதுனம்

நம்பிக்கை துரோகம்

கும்பம்

பழி வாங்குதல்

மீனம்

சோம்பேறித்தனம்

மகரம்

மட்டமாக பேசுவது

சிம்மம்

முன்கோவம்

கடகம்

தலைகனம்

துலாம்

அவமானப்படுத்துவது

விருச்சிகம்

பொறாமைப்படுதல்

அதிக செல்வாக்கு' யாருக்கு தெரியுமா?

அதிக செல்வாக்கு' யாருக்கு தெரியுமா?

செல்வாக்கு என்பது பணத்தால், பதவியால் மட்டும் வருவதல்ல. உங்கள் குணம், பழகும் விதம், நடத்தும் விதம் & கவரும் விதமும் அடங்கும்.



மிதுனம்

95%

கன்னி

80%

தனுசு

75%

ரிஷபம்

99%

ضم

80 %

கும்பம்

70%

மீனம்

85%

மகரம்

55%

சிம்மம்

90%

கடகம்

65%

துலாம்

100%

விருச்சிகம்

60%

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

மேஷம், ரிஷபம், மிதுனம்

பக்குவப்பட்ட ராசிகள் ஓரளவு பேசி புரியவைக்க முடியும்

கடகம், விருச்சிகம், மகரம்

இவுங்க கூட பேசாம இருப்பதே நல்லது. காரணம் பேசி மாளாது.

சிம்மம், துலாம், தனுசு

பேசி ஜெயிக்கவே முடியாது கடைசிவரை அவர்கள் பேசுவதே சரியென்பார்கள்.

கன்னி, கும்பம், மீனம்

பேசலாம் கொஞ்சம் புரியவைக்கலாம் ஆனால் உசுரு போய் உசுரு வந்துரும் அதற்குள்




சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால்?



சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால்?

சிலருக்கு சகோதரன் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதன் காரணம் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஜாதக கட்டத்தில் சகோதர காரகன் என்பது செவ்வாயைக் குறிக்கும், அதே போல சகோதர ஸ்தானம் என்பது மூத்தோருக்கு பதினொன்றாம் இடமும் இளைய சகோதரத்திற்கு மூன்றாம் இடத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்ததால் சகோதரன் இருப்பது இல்லை. இதில் மூன்றாமிடத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரன் வாய்ப்பது இல்லை அதேபோல பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரன் இருப்பது இல்லை. அதையும் மீறி சகோதரன் இருந்தால் அவர்களும் சிரமப்பட்டு இருப்பவர்களையும் சிரமத்தில் கொண்டு விட்டுவிடுகிறார்கள்

பணம் சேர இந்த டாலர் கழுத்தில் போடுங்கள்

இந்த டாலர் கழுத்தில் போடுங்கள்

கன்னி

உங்க குல தெய்வம்டாலர்

மீனம்

ஓம் மந்திரம் டாலர்

சிம்மம்

மீனாட்சி அமான் டாலர்

மேஷம்



முருகன் டாலர்

தனுசு

மகாலட்சுமிடாலர்

மிதுனம்

முருகன் டாலர்

கும்பம்

மரம் (அ) இலை டாலர்

ரிஷபம்

மகாலட்சுமி டாலர்

கடகம்

வெங்கடாஜலபதி டாலர்

விருச்சகம்

முருகன் உருவடாலர்

துலாம்

| சிவபெருமான் உருவ டாலர்

மகரம்

உங்க குலதெய்வ டாலர்




மரணம் வரை அன்பு காட்டும் உறவு

மரணம் வரை அன்பு காட்டும் உறவு

1கன்னி

நண்பன்

2 மீனம்

கணவர்

3 சிம்மம்

அண்ணன்

4 மேஷம்

அம்மா

5 தனுசு

அக்கா

6 மிதுனம்

மனைவி

7 கும்பம்

தங்கை

8 ரிஷபம்

தம்பி

9 கடகம்

மச்சான்

10 விருச்சகம்

தாத்தா

11 துலாம்

அப்பா

12 மகரம்

பாட்டி

உங்கள் ராசிப்படி நீங்கள் எந்த வயது வரை கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்





மேஷம்.
45வயது வரை.

ரிஷபம்.

48 வயது வரை.

மிதுனம்


43 வயது வரை.

கடகம்.

35 வ்யது வரை..

சிம்மம்.

38 வயது வரை.



கன்னி.

42 வயது வரை.

துலாம்.

51வயது வரை.

விருச்சிகம்

37 வயது வரை.

தனுசு.

32 வயது வரை..

மகரம்.

40 வயது வரை.

கும்பம்.

55 வயது வரை.

மீனம்.

40 வயது வரை.

பகை நட்சத்திரங்கள்

பகை நட்சத்திரங்கள்

அசுவினிக்கு கேட்டை பகை.

பரணிக்கு அனுஷம் பகை.

கிருத்திகைக்கு விசாகம் பகை.

ரோகிணிக்கு சுவாதி பகை.

மிருக சீரிடம் சித்திரை பகை.

திருவாதிரைக்கு திருவோணம் பகை.

புனர் பூசத்திற்கு உத்திராடம் பகை.

பூசத்திற்கு பூராடம் பகை.

ஆயில்யத்திர்க்கு மூலம் பகை.

மகத்திற்கு ரேவதி பகை.

பூரத்திற்கு உத்திரட்டாதி பகை.

உத்திரத்திற்கு பூரட்டாதி பகை

ஒரு நட்சத்திரம் மற்றொரு நட்சத்திரத்திற்கும் பகை நட்சத்திரமாக கருதப்படுமானால், அந்த இரு நட்சத்திரங்களுக்கு இடையே நல்லுறன இருக்காது,சில நேரங்களில் மோதல்களும், மனஸ்தாபங்களும் கூட ஏற்படலாம்


பெண ராசுக்கு பொருந்தும் ஆண் ராசிகள்

பெணராசிக்கு பொருந்தும் ஆண் ராசிகள்

பெண் ராசிஆண் ராசி

கன்னி.     ரிஷபம்,மீனம்

மீனம்.         மகரம்



சிம்மம்

மகரம்

மேஷம்

சிம்மம்,விருச்சிக

தனுசு

மீனம்

மிதுனம்

கன்னி

கும்பம்

மீனம்

ரிஷபம்

கடகம்,துலாம்

கடகம்

விருச்சிகம்,தனுக

விருச்சகம்

கடகம்,கன்னி

துலாம்

மகரம்

மகரம்

கும்பம்

நீங்க வாங்கி வந்த வரமும் சாபமும் 12 ராசி

நீங்க வாங்கி வந்த வரமும் சாபமும்



மேஷம்.

வரம்; துணிச்சல், நம்பிக்கை.

சாபம்; அவசர முடிவுகள், பொறும் இன்மை

ரிஷபம்.

வரம்; நிலைத்த தன்மை, ஆளுமை.

சாபம்; மாறுதல்களை ஏற்க மறுப்பது

மிதுனம்.

வரம்: வசீகர பேச்சு திறன், அதிவேக சிந்தை.

சாபம்; கவனச் சிதர்வு

கடகம்.

வரம்; பரிவு, உறுதியான குடும்ப பாசம்.

சாபம்; அதிக உணர்ச்சி பிணைப்பு.

சிம்மம்.

வரம்: நம்பிக்கை, பெருமை மிக்க ஆளுமை.

சாபம்; பாராட்டுக்காக அங்கீகாரம் தேடுதல்.

கன்னி.

வரம்: ஆராய்ச்சி திறன். சீர்மையான சிந்தனை.

சாபம்: குறைகளை மட்டுமே கவனிப்பது.



துலாம்.

வரம்: சமநிலை மற்றும் நல்ல உடன்பாடு.

சாபம்; முக்கிய முடிவுகளை எடுப்பதில் தயக்கம்

விருச்சிகம்

வரம்: ஆழமான சிந்னையும் உறுதியும். சாபம், பொறாமை. கஷ்டங்களை மனதில் வைத்துக் கொள்வது

தனுசு.

வரம்: ஆர்வமிக்க சுதந்திர உணர்வு.

சாபம்: பொறுப்பற்ற செயல்பாடு அல்லது வாக்குறிதிகளை நிறைவேற்றாமை

மகரம்.

திட்டமிடும் திறன். வரம்: கடின உழைப்பு மற்றும்

சாபம்: அதிக வேலைப்பழுத்தம், தளர்ச்சியற்ற குணம்.

வரம்:புதுமையான சிந்தனை, தன்னிச்சையான குணம்.

கும்பம்.

சாபம்: உணர்ச்சிப் பிணைப்பு இல்லாமை.

மீனம்

வரம்: கற்பனைச் சிந்தனை,

பரிவு மிக்க மனம். சாபம்: வசதிக்கேற்ப

செயல்படாமல் கனவில் மட்டுமே மிதந்து இருப்பது

சீர்அடித்தல்

சீர்அடித்தல்

கிராமப்புறங்களில் மட்டும் அல்ல நகர்ப்புறங்களிலும் கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், குழந்தையை சீர் அடித்து விட்டது என்பார்கள் அப்படி என்றால் வீட்டு விலக்கான பெண்கள், கலவியில் ஈடுபட்டு குளிக்காத ஆண் மற்றும் பெண் சிறிய குழந்தையை தூக்கி கொஞ்சினால் குழந்தைக்கு சீர் பிடிக்கும் அதாவது குழந்தைக்கு ஜீரணம் ஆகாது, வயிற்று போக்கு நிற்காமல் போகும்

இதற்கு சிராமத்தில் மாட்டு தோலால் ஆன கயிற்றை குழந்தையின் கழுத்தில் அணிவிப்பார்கள். குழந்தையை கவிழ்த்து படுக்க வைத்து முதுகை தேய்த்து விடுவார்கள். சிறிய குழந்தைகளை தூக்குபவர்கள் தூய்மையான பின் தூக்குங்கள்.

ராகு கேது பாதிப்புகள்

ராகு கேது பாதிப்புகள்

ராகு லக்கினத்தில் கேது 7ல் இருந்தால் தாமத திருமணம், புத்திரதோஷம், சொத்து தகராறு

ராகு 2ல் கேது 8ல்

குடுத்வாழ்கை சிக்கல் .பணம் தேடுவதில் போரட்டம் வழக்கு

"ராகு 3ல் கேது 9ல்

நீண்ட ஆயுள், உதவிகள் கிடைக்காது.

ராகு 4ல் கேது 10ல்

வாஸ்து குறை உள்ள வீடு, தகாத உறவுகள்,

ராகு 5ல் கேது 11ல்

புத்திர தோஷம், ஆண்பிள்ளை கிடைக்காது.

ஆரோக்கிய குறை

ராகு 6ல் கேது 12ல்

செல்வம், அரசியல் தொடர்பு கிடைக்கும்

ராகு 7ல் கேது 1ல

திருமண வாழ்வில் பிரச்சனை, கெட்ட சகவாசம்

*ராகு 8ல் கேது 2ல்



கடன், ஆரோக்கிய பிரச்சனைகள்னவராது

ராகு 9ல் கேது 3ல்

தந்தைக்கு கேடு, பிதுர் தோஷம்

* ராகு 10ல் கேது 4ல்

குடும்ப சிக்கல் பேச்சால் கேடு, தொழில் போட்டி

*ராகு 11ல் கேது 5ல்

குழந்தைக்கு குறை, குறுக்கு வழியில் பணம்

ராகு 12ல் கேது 6ல்

வீண் செலவு, சொந்த வீடு அமைவதில் பிரச்சனை

நிட்சயம் திருமணம் நடக்குமா?

ஆண் ஜாதகத்தில்

லக்கினாதிபதி, குரு- ஜாதகரை குறிக்கும் சுக்கிரன் - மனைவியை குறிக்கும்

லக்கினாதிபதி சுக்கிரன் - ஜாதகியை குறிக்கும் 7ம அதபதி, செவ்வாய் -கணவனை குறிக்கும்

திருமணம் நடக்கும் விதிகள்

லக்கினாதிபதிக்கு 1, 5, 7, 9, 12 ல்

7ம் அதிபதி நின்றால்

ஆண்களுக்கு குருவிற்கு 1, 5, 7, 9, 12ல் சுக்கிரன் நின்றால்

பெண்களுக்கு சுக்கிரனுக்கு 1, 5, 7, 9, 12 செவ்வாய் நின்றால்

திருமண தடை ஏற்படும் விதிகள்

7ம் அதிபதிக்கு 1, 5, 9 ல் கேது நின்றால் ஆண்களுக்கு சுக்கிரனுக்கு 1, 5, 9 ல் கேது நின்றால்

பெண்களுக்கு செவ்வாய்க்கு 1, 5,9 இல் கேது நின்றால்

Thursday, 1 January 2026

12 வீடுகளும் அவற்றின் அதிபதிகளும்

12 வீடுகளும் அவற்றின் அதிபதிகளும் (Vedic Astrology):
முதல் வீடு (மேஷம்): செவ்வாய் (Mars)
இரண்டாம் வீடு (ரிஷபம்): சுக்கிரன் (Venus)
மூன்றாம் வீடு (மிதுனம்): புதன் (Mercury)
நான்காம் வீடு (கடகம்): சந்திரன் (Moon)
ஐந்தாம் வீடு (சிம்மம்): சூரியன் (Sun)
ஆறாம் வீடு (கன்னி): புதன் (Mercury)
ஏழாம் வீடு (துலாம்): சுக்கிரன் (Venus)
எட்டாம் வீடு (விருச்சிகம்): செவ்வாய் (Mars)
ஒன்பதாம் வீடு (தனுசு): குரு (Jupiter)
பத்தாம் வீடு (மகரம்): சனி (Saturn)
பதினொன்றாம் வீடு (கும்பம்): சனி (Saturn)
பன்னிரண்டாம் வீடு (மீனம்): குரு (Jupiter)