jaga flash news

Thursday 24 December 2015

மனிதனுக்கு மூன்றாவது கண் .

மனிதனுக்கு மூன்றாவது கண் .
-------------------------------------------

{ நெற்றிக்கண் - ஞானசுரபி - Pineal Gland
மூல-நெற்றி-பிடரி-உச்சிகண் }
முன்றாவது கண் திறப்பது அனைவருக்கும்
சாத்தியமே..... நம்பிக்கை இல்லயா....? இந்த
பதிவை படியுங்கள்.

மனித இனம் இழந்து கொண்டு இருக்கும் ஒரு
சக்தியே இந்த Pineal Gland . சித்தர்கள் ,
யோகிகள் அந்த காலத்தில் அடைந்த
யோகத்தை என் இன்று மனிதானால் அடைய
முடியவில்லை ? என்றாவது யோசித்து
உள்ளீர்களா ?

அன்று சித்தர்கள் செய்த விடயங்களையே
இன்று வரை ஆச்சரியமாக அமானுடமாக
பேசிக்கொண்டு இருக்கிறோம் .ஏன் இன்று
நம்மால் அந்த நிலையை அடைய
முடியவில்லை ?

Pineal Gland இந்த சுரபி மனிதனின் நெற்றி
போட்டு மத்தியில் மூளையின் உள்ளே உள்ள
சிறு பாகம் .இந்த சுரபியை தான் சிவனின்
நெற்றி கண்ணாகவும் , புத்தினின்
ஞானமாகவும் மற்றும் பல புராணங்களில்
மறைமுகமாக கூறி உள்ளனர் .
உணவுகட்டுபாடு , தியானம் , மனதை ஒரு
நிலை படுத்துதல் , முச்சு பயிற்சி போன்ற
வற்றை கைபற்றிவந்தால் இந்த சுரபி தானாக
வேலை செய்ய துடங்கும் .. உடம்பில் உள்ள
மற்ற சக்கரங்களும் இதனுடன் இணைந்தே
உள்ளது .. ஆங்கிலத்தில் இதை "Soul Seed
"என்று அழைப்பார்கள் அதாவது ஆன்மாவின்
விதை . இந்த pineal gland உறுப்பின் முலமே
நாம் நமது ஆன்மாவை அடைய முடியும்
(Energy Body ). சுருக்கமாக சொல்ல போனால்
மதங்கள் அனைத்தும் நாம் தான் கடவுள் என்ற
பெரிய உண்மையை மறைக்க
உருவாக்கப்பட்டவையே .

சித்தர்கள் உணவு உண்ணாமல் , பருகாமல்
உயிர்வாழ்ந்ததின் ரகசியம் பிரபஞ்ச ஷக்தி ..
இந்த பிரபஞ்ச ஷக்தி நாம் துங்கும் பொழுது
நம் உச்சன் தலை மூலம் இறங்கி நம் உடல்
முழுவதும் பரவும் .. இது போதிய அளவில்
நம்மால் பெற முடியாததாலே தான் நாம் வேறு
உணவுகளை நாடி செல்கிறோம் . இந்த
பிரபஞ்ச சக்தியை அதிக அளவில் அடையும்
வழி தான் தியானம் .

நாம் நமது ஆன்மாவில் இருந்து இந்த
உலகிற்கு இந்த உடலில் ஒரு அனுபவத்திற்க்கா
க வந்துள்ளோம் . நமது உண்மையான உடல்
நினைவுகள் அனைத்தும் அந்த
ஆன்மாவிலேயே உள்ளது .இந்த Pineal GLand
மட்டுமே நமது திட உடலுக்கும்
ஆன்மாவிற்கும் உள்ள ஒரு வழி பாலம் என்று
கூட சொல்லலாம் .. இந்த பாலம் சிதைக்க
பட்டால் ?

இந்த Pineal Gland மூலம் தான் நம்மால்
அடுத்த பரிணாமத்தை அடையமுடியும்
(உண்மையான மேம்பட்ட பரிணாமம் என்று
கூட சொல்லலாம் ) . இது தான் மனித
குலத்தின் குறிக்கோளை அடைய ஒரே வழி .

என்ன ஆயிற்று இன்றைய மனிதனின் Pineal
Gland ?உலக அரசுகள் ( அதன் பின்னிருக்கும்
இல்லுமினாட்டி )நமது உணவு பொருள்களில்
நஞ்சை கலந்தது இந்த pineal gland ஐ முடக்க
பார்க்கின்றன .. இந்த Pineal GLand இன் எதிரி
FLuride என்னும் வேதி பொருள் .. உடலில்
எந்த இடத்தில் நீங்க Fluride
இருந்துகொன்டாலும் இந்த pinealgland அதை
ஈர்த்துகொள்ளும் ..பிறகு Pineal Gland
இதனால் பாதிக்கப்படும் . இந்த FLuride
அமெரிக்கனாட்டின் குடி தண்ணீரில் பரவலாக
கலக்கபடுகிறது , நாம் பயன் படுத்து பல
பொருள்களில் மறைமுகமாக கலக்கப்பட்டு
அதை சிதைவுற செய்கிறார்கள் குறிப்பாக
நமது பற்பசையில் (toothpaste ) இல் இது
அதிக அளவுகளில் கலக்க படுகிறது .

மூலக்கண்
------------------
முதுகுத்தண்டிற்குக் கீழ் சிறுநீர்த்
துவாத்திற்கும் மலத்துவாரத்திற்கும்
இடையில் “மூலக்கண்” உள்ளது. மூலாதாரம்,
உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று
இதைப் பலவிதமாகச் சொல்லலாம். இதில்
அடங்கியிருக்கும் கருவின் நிலை ஒரு
கூடையினால் மூடப்பட்ட விளக்கின்
நிலையில் ஒத்து இருக்கிறது. இதை மேல்
நோக்கிக் கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு
காத்திருக்கிறது.

நெற்றிக்கண்
---------------------
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல்
சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே,
சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக
அளவில் மிக நுட்பமாக இருக்கும்
துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர்.

இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக
்கிறது.
இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும்,
மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள
மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி
சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச்
சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப்
பின்புறத்திலிருந்து “நெருப்பாறு
மயிர்ப்பாலம்” என்றும் ரம்பப் பற்களைப் போல்
சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை
ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச
உணர்ச்சியிலும், நுட்ப விவேகத்
திறமையாலும், குண்டலினியை எழுப்பிக்
கொண்டு வந்தால் நெற்றிக்கண்
திறக்கப்படுகிறது.நெற்றிக்கண்ணைத்
திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு
இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும்,
தன் ஞாபகமும் கலந்தால்தான்
முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால்
அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை
வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப்
பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க
முடியாது.

நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும்
உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும்
ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம
வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக்
கண்ணால் பல விஷயங்களை உணர முடியும்,
பின் அதை அணுபோகத்தாலேயே அறிய
முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே
இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்ற
ு அவர்களுக்கு தெரியாமலேயே ‘சலாம்’
என்றும், ‘வந்தனம்’ என்றும், ‘நமஸ்காரம்’
என்றும், ‘கும்பிடுகின்றேன்’ என்றும்
சொல்லியும் தங்கள், தங்கள் மத
ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும்,
விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள்
தங்கள் கையையும், சைகைகளையும்,
நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத்
தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும்,
கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு
முனையைப் பார்த்தால் சாந்தம்
ஏற்பட்டுவிடும்.

ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற்
போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை
ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி
செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும்
சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப்
பொல்லாதவனையும் அவன் நல்லவனாக
வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து
நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக்
காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது
திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு
ஆக்கினை ஸ்தானம் என்று பெயர்.
ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும்
உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு
உபயோகித்துக் கொள்ளுங்கள்.

நெற்றிக்கண் பயன்கள்:
------------------------------------
பாலகனாயிருக்கும் போது பக்தியைத்
தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில்
ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும்
போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம்
பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும்.

எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால்
எட்டும் என்று வைராக்கிய தீரன்
சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது
தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப்
போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ
முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.

ஒரு அரசனுக்கு ஞானமானது
கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே
பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக்
கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது.
ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து
ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு
நிம்மதியையும் கொடுக்கிறது.

மனிதன் ஆண்டவனை அறியவோ,
ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண்
உணர்வால் பெறப்படும். உடம்பில் பல
வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை
நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த
உணர்ச்சியோடு உறங்கிவிட
வியாதியனைத்தும் தீரும்.

"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில்
ஊட்டி ஊட்டிக்
கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி
ஏற்றித்
தன்மணிபோல ரசமணி திரள திரளக்
கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
திறமையால் திறக்கத் திறக்கத்
தன் காரணத்தைத் தானே தெரியலாமே."

"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக
தைரியசாலிகள் ஆவீர்கள்
நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக்
கொள்வீர்கள்
தலையால் கேளுங்கள், அறிவாய்
பிரகாசிப்பீர்கள்
துரித நிதானத்தோடு நிதானியுங்கள்,
உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."

பிடரிக்கண்
--------------------
பின் மூளையின் நடு இடமே பிடரிக்கண். இந்த
இடத்தில் முதுகெலும்பின் உள் வழியாய்
நெற்றிக்குக் கருவாகிய விந்து எனும்
குண்டலினி வரும்போது இந்த இடத்தை
உராய்ந்து கொண்டு வருவதால், அங்கு
ஏற்படும் வெப்பத்திற்குச் சோமவட்டம் என்று
பெயர். இப்பின் மூளையில்தான் நாம்
கேட்டதும், பார்த்ததும், நினைத்ததும்,
நுகர்ந்ததுமான எல்லாப்பதிவுகளும்,
அணுக்களாகப் பதிந்து இருக்கின்றன.

உச்சிக்கண்
-----------------
"தென்னாடும் வடநாடும் கண்ணிடை
நடுநாடும்
கீழ்மூலநாடும் அறிவமுத நாடும்,
கூடிக்குலாவும்
நன்னாடு அந்நாடு என்னாடு சென்னி நாடே.

தொட்டேன் தொட்டுத் தொட்டு எல்லாம்
விட்டெ விட்டேன் பின் ஒன்றைத் தொட்டேன்
அதை விடமுடியா மேல்நிலை சென்றேன்
அது எது? அதுவே என்னிலை உணர்வு."
தலைக்குமேல் நடு மண்டை ஓட்டிற்குள்ளே
அமைந்துள்ள இடமே உச்சிக்கண். நெற்றிக்கண்
வழியாய் விந்தாகிய குண்டலினி இந்த
இடத்தில் வந்து அழுத்துவதே உணர்வாகும்.
இதனால் ஏற்படும் இன்பமே பேரின்பம்.

உச்சிக்கு விந்து போகக்கூடிய வழி, தூண்டில்
முள்ளின் நாவைப்போல் இருப்பதால்
குருவில்லாமல் செய்யும் தவங்களால் விந்து
உச்சிக்குச் சென்றால், சத்துள்ள விந்துவாய்
இருந்து, பித்த உடம்பாய் இருந்தால்
தலைப்பாரம், நோவு, துன்பம் தொந்தரவுகள்
ஏற்படும். சிலபேர்கள் அறிவின்
உணர்ச்சிக்கெட்டுப் பைத்தியக்காரனைப்
போலாகிவிடுவார்கள்.

DMT - Dimethyltryptamine
------------------------------------
இது உலகின் அனைத்து நாடுகளிலும் தடை
செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் ..

அதுவும் அமெரிக்க நாட்டில் Class -1 ரக
போதை பொருள் .. இதை பயன்படுத்தினால்
பேச்சே கிடையாது உங்களை கைது செய்து
விடுவார்கள் .. அவ்வளவு பெரிய போதை
பொருளா என்று எண்ணாதீர்கள் ..

இந்த வேதி பொருள் உலகில் உள்ள எல்லா
உயிரினங்களிலும் உள்ளது முக்கியமாக
தாவரங்கள் . ஆழ்ந்த தியானத்தின் பொழுது
நமது Pineal gland சுரக்கும் ஒரு வேதி
பொருளே இந்த DMT .

ஆம் இயல்பாக சுரக்க வேண்டிய திறனை
இல்லுமினடிகள் சூழ்ச்சியால் உணவு
பொருள்களின் மூலம் குறைத்து விட்டார்கள் .

அதே போல் நமது பாரம்பரிய
தானியங்களையும் அழித்து மரபணு
மாற்றப்பட்ட விதிகளையும் , காய்
கனிகளையும் அளித்து பசுமை புரச்சி என்ற
பெயரில் தாவரங்கள் மூலம் நமக்கு
வரவேண்டிய Dimethyltryptamine யை
தடுத்து விட்டார்கள் .
எனவே இன்னும் 2,3 தலை முறைகளுக்கே
இந்த PIneal gland மனித இனத்திற்கு ஓரளவு
செயல்திறனுடன் இருக்கும் . அதன் பின் வரும்
மனித இனத்துக்கு appendix சதை போல
தேவை ஆற்ற பொருளாகி விடும் .

இந்த DMT யை தயார் செய்து உட்கொண்டால்
என்ன நடக்கும் ?
அமெரிக்க பழங்குடியினர் அதிலும் Shamans
(பேய் ஓட்டுபவர்கள் ) வேறு உயர்நிலை
உயிர்களிடம் தொடர்பு கொள்ள பயன்படுத்தி
உள்ளனர் .
இந்த DMT யை சிலருக்கு கொடுத்து
ஆராய்ச்சிகள் நடத்த பட்டது அவர்கள்
அனைவரும் ஒரே வகையான அனுபவத்தை
அடைந்ததாக கூறுகிறார்கள் .

வேறு ஒரு உயிரினங்களை கண்டோம் , ஒரு
சிலர் புத்தர் ,மற்றும் சில கடவுள்களை
கண்டதாகவும் கூறி உள்ளனர் அது போதை
என்று ஒதுக்கி விட முடியாது . யோசித்து
பாருங்கள் அந்த காலத்தில் சித்தர்கள் கடும்
தவத்தின் முலமே கடவுள்களை
உணர்ந்துள்ளனர் .கடம் தவம் இந்த வேதி
பொருளை தான் மூலையில் உற்பத்தி
செய்கிறது .
இந்த DMT தொட்டாசினுங்கியின் வேர்களில்
அதிக அளவில் உள்ளது .

இந்த அறிய உறுப்பை கொண்ட கடைசி
தலைமுறை நாமாக கூட இருக்கலாம் .. மீடியா
வில் காட்டப்படும் பல என்னசிதரல்களை
தவிர்த்து தியானத்தை கடை பிடித்து ,
இயற்க்கை உணவுகளை உண்டால் நாமும்
அந்த நிலையை அடையலாம் .
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல்
சுழி முனைக்கும் புருவங்களின் இடைநடுவே
சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக
அளவு மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு
“நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக
இலேசான சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர்த் துவாரத்திற்கும்
மலத் துவாரத்திற்கும் இடையேயுள்ள
மூலாதாரத்தில் ஊறும் விந்தாகிய குண்டலினி
சக்தியை முதுகந்தண்டு எலும்புக்குள் உள்ள
மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப்
பின்புறத்திலிருந்து நெருப்பாறு மயிர்ப்பாலம்
என்னும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள
சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள்
விவேகத்திறமையாலும், குண்டலினியை
எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண்
திறக்கப்படுகிறது.

குண்டலினி சக்தியின் பிரதிபலிப்பு நம்
தோற்றத்தில் பார்ப்பதென்றால், கண்ணுக்கு
நேரே நான்கடி தூரத்தில் ஒரு நாக்கு பூச்சி
அளவில் சிறு வளைவுகளும் சிறு கால்களைப்
போன்ற கிளைகளும் 3 1/2 முதல் 4 அங்குல
நீளத்தில் ஒன்று அல்லது இரண்டு
தெரியவரும். இதில் சில பிரகாச அணுக்கள்
கசகசா அளவில் இணைந்திருப்பதையும்
பார்க்கலாம். இவை ஒரே நிலையாய் நிலைத்து
நிற்கா, மேல்நோக்கிச் சென்று கொண்டே
இருக்கும். தோன்றுவதும், பின் மறைவதும்
இதன் தொழில். பக்தர்கள் யாவரும்
இதைப்பார்க்கலாம்.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு அறிந்த
ஞானாசி¡¢யரோடு இருபது வயதிற்குமேல்
அறிவோடு விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்
தான் முடிகிறது. இந்தக் கண் திறந்திருந்தால்
அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை
வாசி (பிரணாயாமம்) என்ற மூச்சுப்
பயிற்சியாலும் மற்ற யோகங்களாலும் திறக்க
முடியாது. நெற்றிக்கண் திறந்தபின்
பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள
வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின்
அறிவுப்பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய்
தெரியும். நெற்றிக் கண்ணால் பல
விஷயங்களை உணரமுடியும். பின் அதை,
அனுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே
இல்லை. இந்த இடத்தை வணங்குகின்றோமென
்று அவரவர்களுக்குத் தெரியாமலேயே
சலாமென்றும், வந்தனமென்றும்,
நமஸ்காரமென்றும், கும்பிடுகின்றேனென்றும்,
சொல்லியும்; தங்கள் தங்கள் மத
ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும்,
விபூதி அணிந்தும், நாமம் இட்டும் தங்கள்
தங்கள் கையையும், சைகையையும்,
நோக்கங்களையும் காட்டுகின்றனர்.
அரசாங்கத்தன்மை பிறப்பதும், தடுக்க
முடியாத வீரமுங் கோபமும் பிறப்பதும்
அங்கிருந்தேயாகும். மிகுந்த கோபம்
ஏற்படும்போது தத்தம் மூக்கு முனையைப்
பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப
காலத்தில் பலித்தே தீரும். மிகப்
பொல்லாதவனையும் அவன் நல்லவனாக
வேண்டுமென்று அந்த இடத்திலிருந்து
நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக்
காலத்திலோ நல்லவனாகியே தீருவான் என்பது
திண்ணம். ஆகையால்தான் இந்த இடத்திற்கு
ஆக்கினை ஸ்தானம் என்று பெயர்.
ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும்
உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு
உபயோகித்துக் கொள்ளவேண்டும்.
மனிதன் ஆண்டவனை அறியவோ
ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண்
உணர்வால் பெறப்படும். உடம்பில் பல
வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை
நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த
உணர்ச்சியோடு உறங்கிவிட
வியாதியனைத்தும் தீரும். இப்படி அனேக
காரியங்கள் தானே உண்டாகும் சந்தர்ப்பங்களும்
உண்டு.

பெரிய பெரிய சிற்பிகள் சித்தரிக்கும்
சிலைகளுக்குங்கூட அச்சிலைகளின் மீது
அன்பும், விசுவாசமும், பயபக்தியும்
மக்களிடத்தில் கூட்டுவதற்கு வேண்டி
அச்சிலைக்கு நெற்றிக்கண் திறப்பது என்று ஒரு
சடங்கை பெரிய விசேடமாகக்
கொண்டாடுவதுண்டு. இதைச் செய்ய அந்தச்
சிலையை உருவாக்கிய சிற்பியை விட்டு
வேறொரு ஆச்சாரியாரைக் கூப்பிடுவார்கள்.

அவன் அச்சிலைக்கு நெற்றிக்கண் திறந்து
விட்டதாகப் பாவனை காட்டுங் காலத்தில்
வருடக்கணக்கில் சித்தரித்த சிற்பியும்
அச்சிலையை வணங்க ஆரம்பிக்கிறான்.
அதுபோன்று எப்படிப்பட்ட அறிஞனாயிருந்தால
ும் அவனுக்கும் ஒரு குரு அவசியம். ஆகவே
நெற்றிக்கண் உணர்வு உண்டாக்கக் குருவும்,
சிந்தனையும், வயதும் அவசியமாகும்.
உலகில் பலர் பலவிதமாகச் சொல்லுவார்கள்.

அனுபவமில்லாதவர்கள் சொற்களைக்
கேட்பதைவிட, அனுபவமுடையவர்கள்
சொற்களைக் கேட்பது உங்களுக்கு நலமாகும்.
நாயகன் செயல் நாயகன் செயலென்று
நழுவவிடாமல், நல்லறிவாய் நாட்டம்
கொண்டீர்களானால் நல்ல இடத்தில் நாயகனும்
நாமும் ஒன்றே.

அதுபோல் உலகத்தில் மிகுதியான குணங்கள்
உள்ளன. அந்த குணங்களுக்குரியவர் பலராவர்.
அவர்களை நீங்கள் குறை சொல்லாமல்
அவர்களிடத்தில் உள்ள நல்ல குணங்களை
மட்டும் கிரகித்துக்கொள்ளுங்கள்.

கடலில் உள்ள மீனானது கடல் உப்பில்
சாராததுபோல் உலகத்திலுள்ள
நல்லடியார்களாகிய நீங்கள்,
உலகத்திலுள்ளதீய செயல்களில் சாரவே
மாட்டீர்கள்.

இரு கண்கள் தவிர மூன்றாவதாக ஒரு கண்
உண்டென கிழக்கத்திய நம்பிக்கை குறிப்பாக
இந்துக்களின்
அசைக்க முடியாத நம்பிக்கை எம்பெருமான்
சிவன்
முக்கண்ணன் என போற்றி துதிக்க .
படுவது நாம் அறிந்ததே அதே போல
திபெத்தில் மூன்றாம் கண் திறக்க சிறப்பு
பயிற்சி முறைகள் உள்ளதாகவும் அறிகிறோம் .

அனால் மூன்றாம் கண் எனபது என்ன
கற்பனையா இங்கே கடவுளே கற்பனை என்று
ஒரு வாதம் இருக்கையில் அவருடைய
மூன்றாம் கண் நிஜமா என கேட்க்கும்
அன்பர்களும் உண்டு ஆனாலும் இந்த
மூன்றாம் கண் எனபது பாமரனுக்கு இது
உண்டா உண்டெனில் இதன் செயல் பாடுகள்
என்ன எவ்வாறு இதனை திறப்பது கிழக்கின்
இந்த நம்பிக்கை நீண்ட காலமாக வெறும்
கட்டுக்கதை என்றே மற்றவர்களால்நம்பப்பட்டு
வந்ததுஆனால் மேற்குலகம் சில ஆய்வுகளின்
மூலம் கூறுவது மூன்றாம் கண் எனபது
உண்டு அதன் பெயர் பெனியல் சுரப்பி ஒரு
பட்டாணிஅளவேகாணப்படும் இந்த பீனியல்
சுரப்பிய நமது மூன்றாம் கண் எனப்படுகிறது .

இதனை ஆன்மாவின் இருக்கை என
குறிப்பிடுகிறார் இதன் அமைவிடமானது நமது
மூளையின் இரு சமபாகங்களின் நடுவே
காணப்படுகிறது ஏறத்தாழ புருவ மத்தி
எனலாம்
இந்த சுரப்பி கூம்பு வடிவில் காணப்படுகிறது
இதை குறித்து கொள்ளுங்கள் சிவா
பெருமானின் நெற்றி கண் எவ்வாறு
செங்குத்தாக வேல் போல தோற்றத்தில்
காணப்படுமோ அந்த வடிவத்தில் இந்த சுரப்பி
மிக பாதுகாப்பாக மூளையின் முதுகெலும்பு
அருகே காணப்படுகிறது .

இந்துக்களின் ஆக்ஞா அதாவது நெற்றி
சக்கரத்துடன் தொடர்பு உடையாதாக
கருதப்படுகிறது இந்த நெற்றி கண் திறப்பதன்
மூலம் ஞானம் முன்னறிவித்தல் போன்ற
சித்துக்கள் தோன்றுவதாக நமது இந்துக்களின்
நம்பிக்கை இந்த சுரப்பி
நமது தூக்கம் மற்றும் விழிப்பு பருவ கால
மாற்றங்களை கட்டு படுத்துகிறது .

இந்த பீனியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்ட
ப்படுகிறது இந்த பீனியல் சுரப்பியே
மெலடோன் எனும் திரவத்தை சுரக்கிறது இந்த
திரவம் நமது உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கிறது மன அழுத்தத்தை
குறைப்பதுடன் நமக்கு
நோய் ஏற்படுத்தும் வைரஸ் போன்ற
கிருமிகளை எதிர்க்கும் சக்தியையும்
கொடுக்கிறது .

இந்த சுரப்பி தூக்கம் மற்றும் தியானத்தின்
சுரக்கிறது அதாவது மனம் அமைதியான
நிலையில் ஒளியை கண்களால் கண்டவுடன்
இது சுரப்பதை நிறுத்தி விடுகிறது அதவாது
இரவு வேலை பார்பப்வர்களிடையே
காணப்படும் ஒரு வித மன தளர்வு நோய்
எதிர்ப்பு தன்மை குறைவு இதன் காரணம்
அவர்கள் தொடர்ந்து
வெளிச்சத்திலேயே இருப்பதன் காரணமாக இதன்
மெல்டன் சுரப்பது மிக குறைந்து போவதனால்
குண்டலினி யோகம் மூலம் இந்த சுரப்பியை
தூண்ட முடியும் .

நமது மெய்ஞானம் இந்த சுரப்பியை
தூண்டுவதன் மூலம் ஞானம் அதாவது
பேரின்பம் அடையலாம் என கூறுகிறது
காமனை எரித்ததும் முப்புரங்களை
சாம்பலாக்கியதும் நம்
பெருமான் நெற்றி கண் மூலம் என்கிறது
புராணம் அதாவது பேரின்பத்தை அடைந்த பின்
காமம் இன்ன பிற தீய எண்ணங்களை எரிப்பது
என நாம் பொருள் கொள்ளலாம்
இன்னொரு முறையிலும் சொல்லலாம் .

இந்த சுரப்பி நமக்கு தன்னம்பிக்கை
எண்ணங்களையும் நல்ல சிந்தனைகளையும்
தோற்றுவித்து தேவையற்ற எண்ணங்களை
எரித்துவிடுகிறது இந்த மூன்றாவது கண்ணை
தூண்டுவதன் மூலம் முக்காலத்தை அறியும்
தன்மை மேலும் விழிப்புணர்வு போன்றவை
கிடைப்பதாக கூறப்படுகிறது.

குண்டலினி தியானம் மூலம் இந்த
மூன்றாவது கண்ணை தூண்டலாம் இன்னும்
சொல்வது
எனில் குருமார்கள் தீட்சை அளிக்கும்
பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம்
செய்வதும் இதன் பொருட்டே என
நினைக்கிறேன் .

குண்டலினியை மேலோற்றுவதன் மூலம்
இந்த ஆக்கினை சக்கரத்தை இயங்க செய்து
அளவில்லா ஆனந்தத்தையும் ஞானத்தையும்
பெறலாம் நாம் நமது முன்னோரின் சிந்தனை
சொத்துக்களை மூட நம்பிக்கை என்றும் வேறு
பெயரிலும் கேலியும் போலி என்று
ஒதுக்கியுமே பல நல்ல விசயங்களை இழந்து
விட்டோம் இனி இருப்பதாவது காப்போம் .

No comments:

Post a Comment