jaga flash news

Monday 7 December 2015

கடவுளை காண்பது எப்படி?

தியானம் மூச்சு பயிற்சி பற்றிய பதிவு
திருமூலரின் மூச்சுப்பயிற்சி.
கடவுளை காண்பது எப்படி?
பயிற்சி நாள் 1:
கடவுளை காண எடுக்கும் முதல் அடி.
கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள்
இருந்தாலும், நான் முதலில்
எடுத்துகொள்வது, இரண்டு வழிகள்.
அவற்றில் ஒன்று தியானத்தின் முலம்
கடவுளை காண்பது, மற்றது பக்தியின் முலம்
கடவுளைக் காண்பது.
இந்த இரண்டிற்கும் முதலில் தேவைப்படுவது,
நம் உடலில் மின் காந்த அலையின் அளவை
அதிகப்படுத்த வேண்டும். அதனால் சக்தி
ஓட்டத்தின் அளவை அதிகமாக்கிவிடலாம்,
அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது,
மூச்சு பயிற்சி.
இந்த மூச்சுப்பயிற்சியில் (பிரணாயமம்) பல
வகை இருந்தாலும் அடியேன் முதலில், இந்த
பயிற்சியின் மூலம் தொடங்குகிறேன்.
இந்த பயிற்சிக்குத்தேவை
தூய்மையான, அமைதியான இடம், மற்றும்
வசதியான இருக்கை.(ஆசனம்)
தற்போது நீங்கள் பத்மாஷனத்திலோ அல்லது
உங்களுக்கு வசதியான ஒரு ஆசனத்தில்
அமர்ந்துகொள்ளவும், பத்மாசனத்தில் இருக்க
விரும்பினால், முடிந்தால், கீழே உள்ள படத்தில்
இருப்பதுபோல் அமர்ந்துகொள்ளவும். நீங்கள்
மிகவும் வசதியாக இருக்கவேண்டும் என்பதே
இங்கே முக்கியமாக இருக்கிறது. உங்களின்
இருக்கை உங்களுக்கு சிரமத்தை கொடுக்காமல்
இருக்கவேண்டும்.
பத்மாசனம்
இப்போது உங்களின் முதுகு, கழுத்து மற்றும்
தலை ஒரு நேர்கோட்டில் இருப்பதுபோல்
நிமர்ந்து அமர்ந்துகொண்டு கண்களை
மூடவும்.
1 நீங்கள் இப்போது உங்களின் வலதுகையின்
பெருவிரலால், மூக்கின் வலதுபுரத்தை
அமத்திகொண்டு, இடது புற நாசியின் வழியே
மூச்சை சப்தமில்லாமல் உள்ளே இழுக்கவும்.
அப்படி இழுக்கையில் 1 முதல் 6 வரை
உங்களுக்குள்(மனத்தால்) எண்ணவும்.
2 பின் மூச்சை உள்ளேயே நிறுத்திகொண்டு 1
முதல் 3 வரை எண்ணவும்.
3 இப்போது உங்களின் வலது கை
மோதிரவிரல் மற்றும் நடுவிரளாலும் மூக்கின்
இடதுபுற நாசியை அமத்திகொண்டு வலது
நாசியின் வழியாக மூச்சை சத்தமில்லாமல்
வெளியிடவும். இப்போது 1 முதல் 6 வரை
எண்ணவும்.
4 தற்போது மூச்சை உள்ளே இழுக்காமல்
அப்படியே ௧ முதல் ௩ வரை எண்ணவும்.
இப்படி 5 நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பயிற்சி செய்வதற்கு பொருத்தமான நேரம்.
விடியற்காலை, மதியம் மற்றும் சூரியன்
மறையும் நேரம்.
இந்த பயிற்சித்தொடர்புடைய ஒரு ஒளிப்பதிவு
(வீடியோ கிளிப்) கீழே கொடுத்துள்ளேன்.
அதை பார்த்து பழகவும். இது ஆங்கிலத்தில்
உள்ளது. இருப்பினும் உங்களுக்கு விழங்கும்
என்று நம்புகின்றேன்.
இதை பார்த்து பழகவும்.

திருமூலரின் மூச்சுப்பயிற்சி.
2 ஆம் நாள் செய்தி:
திருமுலர்:
சைவத்தை பரப்பிய 63 நாயன்மார்களில்
குறிப்பிடத்தக்கவர், இந்த திருமூல நாயனார்.
இவர் ஏறத்தாழ 2800 ஆண்டுகளுக்குமுன் வட
இந்தியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள
சித்தூருக்கு வந்தவர். இவர் சிவபெருமானின்
விருப்பத்திற்க்கேற்ப, சைவ ஆகம விதிகளை
தமிழில் எழுதினார், அதுவே திருமந்திரம்
ஆகும். இனி நாம் திருமந்திரத்தில் திருமூலர்
கூறும் மூச்சுப்பயிற்சியை காண்போம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத் வாழ்க்கை
வேண்டும் என்பதே மனிதனின் ஆசை.
இதற்கான வழிமுறைகளை திருமந்திரத்தில்
அட்டாங்க யோகம் என்ற தலைப்பில்
அருளியுள்ளார்.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று
இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று
உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
(திருமந்திரம் 725 )
அட்டாங்கயோகம் என்றால் என்ன?
அட்டாங்கயோகம் என்பது.
1 இமயம் - கொல்லாமை, பொய்கூறாமை,
களவாமை, ஆராய்ந்தறிதல், நல்லான், அடக்கம்
உடையான், நடுநிலை தவறாமை,
பகுந்துண்ணுதல்.
2 நியமம் - பரிசுத்தமான மனம், கருணை
காட்டும் உள்ளம், குறைவான உணவு
உண்ணுதல், பொறுமை, நேர்மை, உண்மையே
பேசுதல், நடுநிலை தவறாமை, மற்றும் காமம்,
களவு, கொலை செய்யாமை.
3 ஆதனம் - இருக்காய்
4 பிராணாயாமம் - மூச்சுப்பயிற்சி.
5 பிரத்தியாகாரம் - புலன்களை அகத்தே
ஒடுக்குதல்.
6 தாரணை - மனதை ஒரு நிலைப்படுத்துதல்.
7 தியானம் - யோகநிலை.
8 சமாதி - உணர்வும் நினைவும் அற்ற நிலை
(தன் நிலை அற்ற நிலை).
அடுத்து திருமூலர் கூறுவது பிராணாயாமம்
அதாவது மூச்சுப்பயிற்சி.
மூச்சுப்பயிற்சியை நாம் 3 ஆம் நாள்
செய்தியில் காண்போம்.
3 ஆம் நாள் செய்தி
பிராணாயாமம் என்றால் என்ன?
பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய
அறிவு மற்றும் அதை நமது வயப்படி
அடக்குதல் என்று பொருள்.
பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?
நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும்
அண்ட வெளியெங்கும், பிராணன் எனும்
எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.
அந்த பிராணன் தான், நம்மை, நமது உடம்பை,
நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு
ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான்
அதை உயிர்மூச்சு என்கிறோம்.
ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது
நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்பருத்தி
அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த
முடியும்.
ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 )
பறவையைவிட, வேகமாகச் செல்லக்கூடிய
இந்த பிராணனாகிய குதிரையை நம்
வசப்படுத்திக் கொண்டால், கள்
உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை
உணரமுடியும், சுறுசுறுப்பும், துள்ளலும்
தானே ஏற்படும்.
புள் எனும் ஒரு வகை பறவை,
குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும்
தன்மையுடையது, அதுபோலதான் நமது
மூச்சும்.
புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )
4ஆம் நாள் செய்தி
பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்:
நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய
சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும்
முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள்
உள்ளன. அவற்றில் 8 சுகாசனம்
எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம்,
கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம்,
சுவத்திகம் என்பவை.
---------------------------------------------
---------------------------------------------
------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம்
அங்கு உளவாம் இரு நாளும் அவற்றினுள்
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
(திருமந்திரம் 558 )
---------------------------------------------
--------------------------------------------
பிராணாயாமம்
16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக
மூச்சை
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு
உள்ளடக்கி, 32
மாத்திரைகள் அளவு வலது நாசி வழியாக
வெளிவிட
வேண்டும்.
---------------------------------------------
---------------------------------------------
----------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே
(திருமந்திரம் 568 )
---------------------------------------------
------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு =
16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64
மாத்திரைகள்
ஊறுதல் இரேசகம் - வெளிவிடுதல் - 32
மாத்திரைகள்
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என
மாறுதல்.
---------------------------------------------
---------------------------------------------
-------
பிறகு வலது நாசி வழியாக மூச்சை
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக
வெளிவிட வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில்
பயிற்சி
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே,
4:16:8
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக
நேரத்தை
அதிகரிக்கலாம்.
மேல் எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ்
எனப்படும்
கால், பெருவிரல் முதலியவைகளும், நடு
எனப்படும்
நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும்
நிறையுமாறு
மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு
உளிழுத்த
மூச்சை உள்ளே தங்கச் செய்து அளவோடு
வெளியிட
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம்
உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------
---------------------------------------------
---------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 )
---------------------------------------------
---------------------------------------
5 ஆம் நாள் செய்தி
.
பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?
பிராணாயாமம் மாலையில் செய்தால்
உடலுக்குத் துன்பம் தரும் கபம் நீங்கும்.
மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம்
நீங்கும்.
விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும்.
---------------------------------------------
---------------------------------------------
--------------
அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் 727 )
---------------------------------------------
---------------------------------------------
6 ஆம் நாள் செய்தி
பிராணாயாமம் எவ்வளவு காலம்
செய்யவேண்டும்?
பத்து ஆண்டுகள் தியான யோகத்தால்
பிராணனை கீழே போக்காமல், உள்ளடக்கும்
வல்லமை கைவரப் பெற்றவர்கள்
திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பாவர்.
பதினோராண்டுப் பயிற்சியில் மேலேழ், கீழேழ்
உலகங்கள் சென்று அழகு பொருந்தத நிறைந்த
நிற்பார்.
---------------------------------------------
---------------------------------------------
--------------
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏறோன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
( திருமந்திரம் 648 )
---------------------------------------------
---------------------------------------------
-------------
நாம் அனைவரும் இறைவன் அருளோடு,
திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி செய்து,
நோயின்றி நெடுநாள் வாழ்வோம்

No comments:

Post a Comment