jaga flash news

Saturday 5 December 2015

தோஷங்கள் உண்டாக காரணங்கள்🌼

தோஷங்கள் உண்டாக காரணங்கள்🌼
🌼தோஷங்கள் உண்டாக காரணங்கள் என்ற இந்த கட்டுரையில் ஒரு மனிதனுக்கு ஜாதக ரீதியாக தோஷங்கள் எப்படி உண்டாகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

🌼 நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை பெற்று நாம் பிறக்கிறோம்.
🌼இந்த வினைப்பதிவை தானும் தனது வம்சாவழியினரும் அனுபவித்தே தீரவேண்டும்.
🌼இந்த கர்மப் பலனில் நன்மையையும் இருக்கும், தீமையும் இருக்கும், இந்த வினைப்பதிவின் சாரமே சஞ்சித கர்மம்.

🌼 இப்பிறப்பில் வாழும் காலத்தில் ஏற்று செய்யும் தொழிலின்
🌼( கர்மத்தின் ) பால் நாம் பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகளை குறிப்பது பிராப்த கர்மம்.

🌼மனிதன் புற இச்சைகளில் மயங்கி தன் ஐம்புலன்களால் தொடர்ந்து செய்து வரும் காரியங்களின் வினைப்பதிவு ஆகாமிய கர்மம்.

🌼கருவமைப்பின் வழி வந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்
🌼உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தம்

🌼இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்

🌼ஒருவினையும் வீண் போக உள்ளடங்கி பின் விளைவாம்.
🌼-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
🌼தோஷங்கள் உண்டாக காரணங்கள் இந்த மூன்று வகையான கர்மங்கள் ஆகும்.
🌼அவை 1. சஞ்சித கர்மம்,
🌼2.பிராப்த கர்மம்,
🌼 3.ஆகாமிய கர்மம்.
🌼கருவின் வழியில் வரும்
சஞ்சித கர்மமும்,
🌼உடலெடுத்த பின் தொழிலால் வரும் பிராப்த கர்மமும்,
இவ்விரண்டும் சேர்ந்து செயலாற்றும் போது விளையும் ஆகாமிய கர்மமும்,
🌼இவ்வகையில் மூன்றும் தோன்றியபின் அந்த கர்மங்களின் பலனால் ஜாதகருக்கு நன்மை - தீமைகள் நடைபெறும்.
🌼இந்த மூன்று கர்மங்களால் விளையும் நற்பலன்களை ஜாதகத்தில் யோகமென்றும், தீய பலன்களை ஜாதகத்தில் தோஷம் என்றும் வகைப் படுத்துகிறோம்.

No comments:

Post a Comment