jaga flash news

Wednesday 23 December 2015

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?

சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.

3 comments:

  1. *சண்டிகேஸ்வரர் ஒரு சிவபக்தர்.*

    சோழ நாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்
    தலத்தில் எச்சதத்தன், பவித்ரை தம்பதியினரின் மகனான *விசாரசருமன்*
    சிறுவயதிலேயே,சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.

    மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தபடி
    யால், பசுக்கள் இவனை தங்கள் உயிராக
    கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில்
    *மணலில் சிவலிங்கம் வடிப்பது* இவனது
    வழக்கம். மேயச் செல்லும் பசுக்கள் இந்த மணல் சிவலிங்கத்தின் மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு, சிவசேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.

    ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன்
    சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை
    பார்த்து விட்டான். அத்துடன் விசாரசருமன்
    அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விபரத்தை தெரிவித்தான்.
    மாடுகளின் உரிமையாளர்கள் இது குறித்து
    எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்
    கும்படி கூறினார். அவர் உண்மை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து
    மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின்
    உரிமையாளர்கள் கூறியபடியே *மண்லிங்கத்தின்* மீது பசுக்கள் பாலை சொரிந்தன.

    *விசாரசருமன் அந்த மணல் லிங்கத்தின்
    முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.*

    அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம்
    வந்து மகனை உதைத்து, மணல் லிங்
    கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்
    டார். இதனால் கோபம் அடைந்த அவரது
    மகன் விசாரசருமன், அவர் கால்மீது தன்
    கையில் இருந்த *குச்சியை* எறிந்தான்.
    அது *சிவன் அருளால் கோடரியாக மாறி*
    அவரது காலை காயப்படுத்தியது.

    அளவுகடந்த பக்தி காரணமாக தந்தை
    யையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர
    பக்தன் முன்பு *பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.* எச்சதத்தனின்
    காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு *சிவகணங்களை*
    நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு தனக்கு சூட்டப்
    படும் மாலை, நைவேத்யம் ஆகியவை
    அவருக்கு தினமும் வழங்கப்படும் எனவும்
    அருள்பாலித்தார். இதன்படி சிவனுக்கு
    அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.

    சிவன்கோவிலுக்கு வருபவர்கள், சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால்
    அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.

    *சண்டிகேஸ்வரர், சிவ தியான நிலையில்
    இருப்பவர். இவர்முன்பு கை தட்டி வணங்காமல் (கை தட்டினால் தியானம் கலைந்துவிடும் என்பது ஐதீகம்.)*
    அமைதியாக வணங்குவதே, சரியானது.

    *சண்டிகேஸ்வரரை வணங்கினால், மன
    உறுதியும், ஆன்மீக பலமும் கிடைக்கும்.*

    என்றும் நட்புடன் உங்கள் Jansi Kannan...

    ReplyDelete
  2. *சண்டீஸ்வரர்* = சண்டம் − கோபம்.
    ஈசனால் வழங்கபட்ட பதவியாகையால் சண்டீஸ்வரர் என்று விசாரசருமன் அழைக்கப்பட்டார்.

    ReplyDelete