இறந்தவர்கள் கனவில் வந்து பசிக்கிறது சாப்பாடு போடு என்றால்.. (இறந்தவர் ஒரு வருடம் ஆவதற்கு முன் கனவில் வந்தால்)
இறந்தவர் கனவில் பேசுவது போல் வந்தால் (என்னுடன் தீயும் வா போகலாம் என்றால்)
இறந்தவர் உங்கள் வீட்டில் தூங்குவது போல் கனவு கண்டால் (நான் உன்னோடு சேர்ந்து தூங்குகிறேன் என்று சொன்னால்)
இறைச்சிகளை வெட்டுவது போல் கனவு கண்டால் (அதுவும் இறந்தவர் இறைச்சியை வெட்டுவது போல்)
*இறந்தவர் சத்தம் போட்டு அழுவது போல் கனவு கண்டால் (இறந்தவரோடு சேர்ந்து நீங்களும் அழுதால்)
இப்படி எல்லாம் நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக மரண பயம் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
(பயம் கொள்ள தேவையில்லை.இது உங்களின் மன பிரம்மை தான்.)
Wow. Very nice. It's true
ReplyDeleteMon. 19, Jan. 2026 at 9.34 pm.
ReplyDelete*திருவாசகம் :*
*22 - கோயில் திருப்பதிகம் :*
*அனுபோக இலக்கணம் :*
(தில்லையில் அருளியது)
*(திருவருளோடு கலக்கும்போது ஏற்படும் பேரின்ப நிலையை உரைத்தல் :)*
394. இன்றுஎனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீஅலால் பிறிது மற்றுஇன்மை
சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம்
திருப்பெருந் துறைஉறை சிவனே
ஒன்றும்நீ அல்லை அன்றி ஒன்றுஇல்லை
யார் உன்னை அறியகிற்பாரே. - (பாடல் : 7)
*இதனின் பொருள் :*
சென்று - மாயா கருவிகள் ஆகிய 36-தத்துவங்களினின்றும் நீங்கிச் சென்று...
சென்று - இருவினைத் தொடக்கத்தினின்றும் நீங்கி....
தேய்ந்து - 'எனது* என்னும் *செருக்கு* தேய்ந்து...
தேய்ந்து - *நான்* என்னும் *முனைப்பு* தேய்ந்து...
அணுவாய் - ஆன்மாவானது தான் என்னும் ஒருமுதல் புலப்படாவகையில் நின்று...
ஒன்றாம் - இறைவனுடன் ஒன்றாய்க் கலந்து...
நீ அலால் பிறிது மற்று இன்மை - சிவபெருமானை அன்றி வேறு ஒரு பொருள் இல்லை என்னும் படியாக...
ஒன்று நீ அல்லை - எந்தப் பொருளாகவும் நீ இல்லையாதலால் நீ வேறாகி நிற்கிறாய்; ஆயினும்...
அன்றி ஒன்றில்லை - எல்லாப் பொருள்களிலும் நீ கலந்து நிற்பதால், நீ இல்லாமல் எந்தவொரு பொருளும் நிலைத்திருப்பதில்லை. எனவே....
நின் தன்மை - நீ அவ்வாறு ஒன்றாய்க் கலந்தும், வேறாய்த் தனித்தும், என்னோடு உடனாயும் நின்ற உன் தன்மையை...
நினைப்பற நினைந்தேன் - எனதுள்ளத்தில் விளங்கும் நினைப்பும், மறப்பும் நீங்கிய மெய்யுணர்வினால் உன்னையே நினைந்தேன்.
சித்தாந்தக் கருத்து :*
நினைப்பு அற நினைந்தேன் என்பது -
மாயா கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களைக் கொண்டு நினைக்காமல்... இறைவன் திருவருளே கண்ணாகக் கொண்டு நினைப்பதைத்தான்... நினைப்பற நினைந்தேன் என மணிவாசகப் பெருமான் அருளிச் செய்துள்ளார்.
Next meet you.
Thirucittambalam
Sivajansikannan78@gmail.com